நரேந்திர மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணி

நரேந்திர மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணிநியூ யார்க் : கோத்ராவை தொடர்ந்து குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி அமெரிக்காவில் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த 40 குழுக்கள் ஒன்று திரண்டு நடந்த சம்பவங்களுக்கு நீதி வேண்டும் என்றும் மோடி உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி மாபெரும் பேரணி நடத்தினர்.

பேரணியில் கலந்து கொண்ட 40 குழுக்களில் ஒன்றான மதங்களுக்கிடையான புரிந்துணர்வு குழுவின் தலைவர் மார்க் லூகென்ஸ் "எச்சமூகத்தை சார்ந்த எந்த ஒரு தனி நபரும் அவர் சார்ந்த மதத்தின் பெயரால் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் போது அவர்களுக்கு ஆதரவாகவும் அநீதிக்கு எதிராகவும் போராடுவது எங்கள் மீது கடமையாக உள்ளது" என்று கூறினார்.

"
மதத்தின் பெயரால் அநீதி இழைக்கப்படும் போது அம்மதத்தை சேர்ந்தவர்கள் முன்னின்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அதனால் தான் இப்பேரணியில் கலந்து கொள்ள முடிவு செய்தோம்" என்று ப்ரொகரஸிவ் இந்துக்களின் கூட்டமைப்பின் தலைவரான சுனிதா விசுவநாத் கூறினார்.

2005
ம் ஆண்டு இதே குழுக்களின் முயற்சியினாலேயே நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுக்கு வருகை தர விசா மறுக்கப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2002 கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி விரைவாக கிடைக்க குஜராத் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
 
 
 

Comments  

 
+11 # நம்பிக்கையாளன் 2012-03-04 20:33
இறைவன் நாடினால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், யார் மூலம் வேண்டுமானாலும் நம்மை இழிவு படுத்துவான் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. எனவே நாம் யாரையும் இழிவுபடுத்துவதோ, அல்லது அநீதியிழைப்பதோ கூடாது என்று இதன் மூலம் பாடம் படிக்கவேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும்
பதில் | Reply with quote | Quote
 
 
+10 # Uthayam 2012-03-04 21:17
இந்த செய்திகளை எல்லாம் "இன்னேரம்" தவிர எதுலயும் பார்க்க கூட முடியல. அந்தளவிற்கு இந்த்துவ தீவிரவதிகள் பத்திரிகை துறைகளில் ஊடுருவி செய்திகளை இருட்டடிப்பு செய்து தருகின்றனர்.
பதில் | Reply with quote | Quote
 
 
+8 # நஜீர் உபைதுல்லாஹ் 2012-03-04 21:36
இது போல செய்திகளை எல்லாம் "இந்நேரம்" தவிர வேறு எந்த செய்தி நாளிதழிலும் பார்க்க முடியவில்லை. பத்திரிக்கை தர்மம் என்பது கேள்வி குறியாகி விட்டது.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # ASIK 2012-03-04 21:53
இது போல செய்திகளை எல்லாம் "இந்நேரம்" தவிர வேறு எந்த செய்தி நாளிதழிலும் பார்க்க முடியவில்லை. பத்திரிக்கை தர்மம் என்பது கேள்வி குறியாகி விட்டது

Read more about நரேந்திர மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணி [3528] | உலக செய்திகள் | செய்திகள் at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 
 
0 # avooran 2012-03-05 09:12
ப்.காமின் உன் பனி சிரக்க....
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # jah 2012-03-05 11:15
very good
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Ansari 2012-03-05 12:12
வெரி குட் இன்னேரம் .... கீப் இட் அப் .... ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை .... உண்மையும் அதுபோல் தான். நல்லவர்கள் அனைவர்கலும் ஒன்று பட்டு உலகை காக்க வேண்டும்.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Nijam 2012-03-05 12:54
சுனிதா விஸ்வனாத்துக்கு பாராட்டுகள்


Read more about நரேந்திர மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணி [3528] | உலக செய்திகள் | செய்திகள் at www.inneram.com




0 Responses

கருத்துரையிடுக