விந்தை நபியின் விண்ணுலக பயணம் migharaj pdf

விந்தை நபியின் விண்ணுலக பயணம் migharaj pdf

விளம்பர பிரச்சனை இல்லாமல் வேகமாக டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.



http://www.mediafire.com/?tset4vc951ywszd

1,350 people embraced Islam in 2011

1,350 people embraced Islam in 2011 Ahmed Shaaban

28 January 2012DUBAI - As many as 1,350 people of different nationalities converted to Islam in 2011 at the Islamic

Information Centre of Dar Al Ber Society in Dubai.

“They are basically attracted to the tolerant, merciful and rational teachings of Islam,” said Yusuf Al Saeed, Director of the Centre.

Hundreds of people of all nationalities visit the centre everyday to know about Islam. The number goes up day after day and more people understand how tolerant, merciful and suitable for all times and places the teachings of Islam are. “Non-Muslims have a good chance to meet new Muslims and listen to conversion stories from their compatriots in their own languages. Such a way proves an astounding success in imparting the right message of Islam,” he said.

Of the new Muslims hailing from 16 different nationalities, the Philippines topped the list with some annual 80 per cent, followed by Indians and Chinese.

Others include people from Britain, America, Germany, France, Italy, Romania, Russia and Holland. “People are touched by the merciful instructions of Islam which orders its followers to be honest, fair and kind to all people, without considering their religion, race, language and colour,” he said.

The centre recently conducted training courses under the theme: ‘How to be an effective caller for Islam’ at the lecture hall of the Dar Al Ber new premises on Shaikh Zayed road.

ahmedshaaban@khaleejtimes.com

பாக்கிஸ்தான் கொடியை ஏற்றிய இந்து பயங்கரவாதிகள்

ஒரு நிறுவனத்தில் Appreciation Letters-ஐ விட Warning Letters அதிகரித்து விட்டால், அது அந்த நிறுவனத்துக்கு நல்லதல்ல. அதேபோல, ஒரு சமூகத்தில் பரஸ்பர பாராட்டுக்களும், நன்றியரிதல்களும் குறைந்து கண்டன குரல்களே மிகுதியாயின் அது அமைதி குலைந்த சமூகமாகி விடும். எனவே, இங்கே சிலரை அவர்களின் நேரிய நற்செயல்களுக்காக நன்றியோடு பாராட்ட இருக்கிறோம் சகோ..!

புத்தாண்டு தினத்தன்று கர்நாடகா-பீஜப்பூர் மாவட்டம், சிந்தகி என்ற ஊரில் அரசு வட்டாட்சியார் அலுவலகம் உட்பட பல அலுவலகங்கள் உள்ள ஒரு வளாகத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருக்க... உடனே, அந்த ஊரில் பதட்டம்..!

 

பிஜேபி, ஸ்ரீ ராம் சேனை உட்பட்ட தடை செய்யப்படவேண்டிய அனைத்து RSS-சங்பரிவாரங்களின் ஆதரவோடு... கடைய(உ)டைப்பு, கட்டுப்பாடற்ற ஊர்வலம், விஷமகோஷம், வன்முறை முழக்கம், வெறியாட்டம், தீவைத்தல், வாகனங்களை சேதப்படுத்துதல், சாலை மறியல், தர்ணா, போக்குவரத்து நிறுத்தம், பள்ளி கல்லூரி கட்டாய விடுமுறை, அலுவலகம் மூடல், அப்பாவி மக்கள் அவதியுறல், மாமூல் வாழ்க்கை பாதிப்பு, கலவரம், லத்தி சார்ஜ், பந்த்... எல்லாமே ஜெகஜ்ஜோதியாக அடுத்தடுத்து திட்டமிட்டபடி மக்கள் விரோத செயல்கள் அரங்கேறின. பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக வழக்கம்போலவே முஸ்லிம்கள் இவர்களால் 'சந்தேகிக்கப்பட்டு'(?) தூற்றப்பட்டனர். உடனே கொடி ஏற்றியவர்களை கைது செய்ய கலவரக்காரர்களால் காவல் துறையினரிடம் கோரப்பட்டது..!!!

 

ஆனால், கயவர்களை கண்டுபிடித்து... கைது செய்தவுடன், அவர்களிடம் பேச்சு மூச்சை காணவில்லை..! அதுவரை அப்படி குதித்தவர்கள் அடங்கிப்போய் ஓடி ஒளிந்து உட்கார்ந்து விட்டார்கள். அது மட்டுமல்ல, "நான் இல்லை நீதான்..." "...இல்லை ...இல்லை ...நீ தான்..!" "உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே..!" "நீ யார்..?" என்று நேற்றுவரை ஒன்றாக இருந்து கத்தியவர்கள்... தமக்குள் இன்று சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்..!

'
இஸ்மாயில்' என்று கையில் பச்சை குத்தி காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே காலத்தில் இருந்தே... இப்படி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அப்பாவி மக்களிடம் ஹிந்துத்வா மதவெறியூட்டி... கொலைக்களம் காணத்துடிக்கும் ஈவிரக்கமற்ற இந்த பயங்கரவாதிகளுக்கு கண்டனப்பதிவு போடுவதை விட, இந்த உண்மையை மூன்றே நாளில் கண்டுபிடித்தோரை பாராட்டி பதிவுபோடுவதே இப்போது மிக முக்கியம்..!


இதற்கு முன் இரண்டு பிளாஷ்பேக்ஸ் பார்த்து விடுவோம்..!

 பிளாஷ்பேக் -1 : P.கண்ணப்பன்..!

தென்காசி RSS அலுவலக குண்டு வெடிப்பு தொடர்பாக உடனடியாக சந்தேகத்தின் பேரில், தலைப்புச் செய்தியில் "இஸ்லாமிய(?) பயங்கரவாதிகள்" கைது செய்யப் பட்டிருக்க, அந்த வழக்கை தன் கையில் எடுத்து... திறம்பட துப்பறிந்து..."தங்கள் அலுவலகத்தில் தாங்களே வெடி குண்டு வைத்துக் கொண்டார்கள், இந்த RSS பயங்கரவாதிகள்" என்ற உண்மையை வெளிக்கொணர்ந்த அன்றைய திருநெல்வேலி DIG (பின்னர், மதுரையில் IG) P.கண்ணப்பன் IPS மற்றும் அவருடைய டீமை  தமிழ் முஸ்லிம்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. "முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள்" என்ற புனையப்பட்ட அவப்பெயரை முதலில் நீக்கியவர். ஆனாலும், இந்திய ஊடகங்கள் இதை துணுக்குச் செய்தியாகக்கூட  பகிராமல் மறைத்தன.!

 பிளாஷ்பேக் -2 : ஹேமந்த் கார்கரே..! 

இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு முஸ்லிமும் இவரை தெரியாமலோ, தெரிந்தோர் மறந்து போயிருக்கவோ வாய்ப்பே இல்லை..! நான் உட்பட இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தலை நிமிர்ந்து தனக்கான குடி யுரிமையுடன் ஜம்பமாக பயங்கரவாதத்தை எதிர்த்து அவைகளுக்கு தடைகோரி பதிவில் எழுத- பொது வெளியில்  பேச- முடிகிறது என்றால்... பற்பல குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்கனவே "இஸ்லாமிய(?) பயங்கரவாதிகள்" சந்தேகத்தின் பேரில் தலைப்புச் செய்தியில் கைது செய்யப் பட்டிருந்தும், அனுதினமும் வந்த காவிகளின் கொலை மிரட்டல்களை பொருட் படுத்தாது அந்த வழக்குகளில் உண்மையை வெளிக் கொணர்ந்த இவரின் நேர்மையான உயிர்க்கு அஞ்சா உழைப்பே காரணம். இவரை நம் நாட்டிற்கு சரியான நேரத்தில் ஈந்த இறைவனுக்கே புகழனைத்தும்.

இவர்கள் போல இன்னும் நிறைய நேர்மையான அதிகாரிகளை நம் நாட்டிற்கு தரச்சொல்லி,இத்தளத்தில் முன்பொரு பதிவில் இறைவனிடம் நாம் பிரார்த்தித்து உள்ளோம் சகோ..! இவர்கள் போல கர்நாடகா-பீஜப்பூர் சம்பவத்தில் இன்னும் சிலரை காண்கிறோம்.

இந்த பாகிஸ்தானிய கொடியேற்று சம்பவம் நடந்த நான்காவது நாள் அதிகாலை (வெறும் மூனே நாள்தான் துப்பு துலக்கல்) "ஹிந்துத்துவ-RSS-சங்பரிவார கும்பலில் ஒன்றான 'ஸ்ரீ ராம் சேனா' வினர்தான் குற்றவாளிகள்" என்று கண்டு பிடிக்கப்பட்டது... நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சாதனை அல்லவா..?!

 

இதை நிகழ்த்தியவர்கள் பற்றி... இவர்களை ஃபோகஸ் பண்ணி  பாராட்டி, தட்டிக்கொடுத்து புகழ்ந்து பேச, ஃபோட்டோ போட்டு எழுத ஏனோ கிட்டத்தட்ட எவருமே முன்வர வில்லை..! அதனால் என்ன..? நாம் எதற்கு பிளாக் வைத்து இருக்கிறோம்..? தனிப்பதிவு போட்டு பாராட்டுவோம்..! போதாக்குறைக்கு  அவர் ஒரு பதிவர் (Blogger) வேறு..! விட்டு விடுவோமா..?

 

மங்களூர் பஃப் மற்றும் காதலர் தின தாக்குதலுக்கு பெயர்போன 'ஸ்ரீ ராம் சேனா'வின் மாணவர் அணி தலைவனான Rakesh Siddaramiah Mutt (19) என்பவனும், அவனோடு படிக்கும் அவ்வமைப்பின் கல்லூரி மாணவர்கள் Sunil Madiwalappa (18), Anil Kumar (18), Parashuram Ashok (20), Rohit Eshwar (18), Mallanagouda Vijaykumar (18) 5 பேரும் ( இதில் ஈடுபட்ட Arun Vaghmore (20)  என்ற என்பவன் தப்பிவிட்டான்... தேடப்படும் இவன் மட்டும் இன்னும் பிடிபட வில்லை)....மொத்தம் ஏழு பேர் சேர்ந்து... இரவில் அங்கே கொடியை ஏற்றிவிட்டு காலையில் வந்து நல்லவர்கள் போல கொடியை ஏற்றியவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்யக்கோரி கோஷம்போட்டு பாகிஸ்தான் கொடியை எரித்து கலவரம் செய்து இருக்கின்றனர்..!

 

 

முதலில் அந்த ஜனவரி 1 இரவில் அந்த அலுவலக வளாகத்தில் இரவு அரைமணி நேரம் (3:30-4:00) ஒரு இருசக்கர மோட்டார் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததுதான் முதல் துப்பு. அதை கண்ட ஐ விட்னஸ் சொன்ன தகவலின்படி... அந்த வாகனத்துக்கு சொந்தக்காரனை, வேறொரு இடத்தில் பார்த்த அந்த ஐ விட்னஸ் அவனை அடையாளம் காட்ட...  அவனை அணுகி விசாரிக்கும் போது தெரியவந்தது என்னவெனில்... பைக் சொந்தக்காரனான இவனும் இவன் நண்பனும் பிஜப்பூரில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள் முடிந்து நள்ளிரவில் திரும்பும்போது தம் நண்பர்களை அந்த அரசு அலுவலக வளாகத்தில் சந்தித்ததாக தெரிவித்தனர். கூடவே அவர்கள் செய்த காரியமும் இவர்கள் மூலம் வெளிவந்து விட்டது. இவர்களின் மூலம் மற்ற நண்பர்கள் கண்டறிந்து சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டனர். தப்பிவிட்ட ஒருவன் மட்டும் இன்னும் சிக்கவில்லை. தாசில்தார் அலுவலகத்தில் ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி சுனில் வீட்டில் தான் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது..! புதன்கிழமை, ஜனவரி 4 ம் தேதி அதிகாலை மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

பொதுவாக முஜாகிதீன், சிமி, தொய்பா, கொய்தா என்று அனானி ஈமெயிலை ஆதாரமாக குற்றம் சாட்டி சந்தேகத்தின் பேரில் 'தடா பொடா' என்று கைது செய்யப்படுபவர்கள் கூட, தங்கள் முகங்களை கைகளால் மறைக்க இயலாதவாறு பின்னால் கட்டப்பட்டு செய்தியாளர்களிடம் முகம் நிமிண்டி காட்டப்படுவது நாம் அறிந்ததே..! 

 

பாக்.கொடி ஏற்றிய ஸ்ரீராம் சேனாவின் 'பர்தா' அணிந்த கேடிகள்

ஆனால், இங்கே... சாட்சி, ஆதாரத்துடன் அகப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னரும் கூட... இவர்களுக்கு முகத்தை மறைக்க பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட முகம் மறைக்கும் புருகா-நிகாப் சலுகைகள் எல்லாம் தரப்பட்டுள்ளன..! சபாஷ்..! இந்த "புதிய மாற்றத்தை" நாம் வரவேற்போம். அதேநேரம்... நாளை ஒருநாள்... 'குற்றவாளிகள்' என்று நீதிமன்றம் தீர்பளித்த பின்னராவது இவர்களின் முகத்தை "நடுநிலை(?) ஊடகங்கள்" நமக்கு காட்டுவார்கள் என்று நம்புவோம்..!

 

"ஒரு பக்கம், நாங்கள் குற்றவாளிகள் அல்ல... RSS தான் குற்றவாளி" என்று கூறும் ஸ்ரீ ராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தாலிக்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூடவா இந்த உண்மையை கண்டுபிடித்த சாதனையாளர்களுக்கு இல்லை..? அவனுக்கெல்லாம் பக்கம் பக்கமாக அத்தனை ஃபோட்டோக்கள் கூகுளில் உள்ளன..! ஹேமந்த் கார்கரேவின் வாரிசுகளான இவர்களுக்கு ஒரே ஒரு போட்டோ எடுப்பதற்குள்...அப்பப்பா 2 நாளாக நான் பட்ட பாடு..! அவர்கள் ஒருவரல்ல சகோ..! 5 பேர் கொண்ட டீம்..! இந்த ஐந்து பேரில், அதன் டீம் தலைவர்தான் சாதனையாளரான நம் பதிவர்..! கடைசியில், அவரின் ப்ளாக் ப்ரோஃபைல் போட்டாதான் எனக்கு கிடைத்தது..! நியூசில் அல்ல..!

 

அவர்.... பீஜப்பூர் மாவட்ட SP,  Dr. D.C. ராஜப்பா IPS

(நம்மை போல இவரும் ஒரு (Blogger) பதிவருங்கோ...!)

 

 

இவர்தான் ஒரு  "special investigation team"  ஒன்றை தன்னுடைய DSP - முத்துராஜ்தலைமையில் உடனடியாக ஏற்படுத்தி... அதில் DCIB Police Inspector சித்தேஷ்வர், CPI சிதம்பர்மற்றும்  PSI பாபகவுடா படில் ஆகியோரை இணைத்தார். இவர்கள்தான் எவ்வித உயிரிழப்புகளும் இன்றி கலவரத்தையும் கட்டுப்படுத்தி, பந்தையும் அமைதியாக நடக்க அனுமதித்து, இதன் மூலம்முஸ்லிம்கள் மீது தேசத்துரோக பழிபோட்டு, அப்பாவி இந்து மக்களை தூண்டிவிட்டு பெரிய அளவில் மதக்கலவரத்தை கர்நாடகாவில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததை முறியடித்தும் உள்ளனர். 

 

நம் நாட்டில் இவரை/இவர் டீமை எவரும் கண்டு கொள்ளா விட்டாலும் கூட... தான் உண்டாக்கிய தன்  டீமுக்கு தானே ரூ.10,000 வெகுமதி வழங்கி கவுரவித்தும் உள்ளார்.

நம் சக பதிவரான... இவருக்கு நம் பாராட்டுக்களை மகிழ்வோடு தெரிவிப்போம் சகோ..! 

 

Well done, Bijappur  SP, Dr. D.C. RAJAPPA & team..!


அவர்  ஊடக பேட்டியில் சொன்னது.......

"Rakesh is the Sindhagi unit president of Sene's student wing and the other accused are its members. They are all students in various colleges of Sindhagi and Bijapur. Their aim was to create communal unrest and gain advantage for their campaign" Rajappa said.

 

 

Rajappa said: "The accused have confessed...They were planning to shift base to Goa for a few days by mid- January. They had stitched the Pakistani flag at an accomplice's house in Sindhagi.Investigations are on to find out if other Sene leaders are involved." He said the accused conspired for a week before hoisting the flag on the night of December 31. 

 

 

They returned the following morning and staged their demonstration, pelting stones at a government- owned bus. "Their motive was clear: hoist the flag, create unrest and take mileage by protesting against the incident," Rajappa said.

 



Read more at: 
http://indiatoday.intoday.in/story/sri-ram-sene-activists-pakistani-flag/1/167409.html


Thanks to these news sources for references.....

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=126207(Sindhagi Town Tense as Pak. Flag Hoisted) 
http://mangaloretoday.com/mt/index.php?action=headlines&type=2572 (special investigation team)  
http://indiatoday.intoday.in/story/sri-ram-sene-activists-pakistani-flag/1/167409.html
http://www.megamedianews.in/index.php/44924/gang-of-7-in-rama-sene-hoisted-the-pak-flag-6-arrested-one-absconds/

அப்புறம் ஒரு கேள்வி..!

இந்த சம்பவம் பற்றிய செய்திகளை ஜனவரி 2 மற்றும் 3 ம் தேதிகளில் நிறைய தமிழ் & ஆங்கில தளங்களில் நான் படித்த போது அங்கேயெல்லாம் தவறாமல்  நான் பார்த்த சில பின்னூட்டங்களின் கருத்து என்னவென்றால்... "பாகிஸ்தான் கொடியை நம் நாட்டில் ஏற்றிய இந்த தேசத்துரோத முஸ்லிம் '@$*#~^+}?!(%='களை உடனே பிடித்து பாகிஸ்தானுக்கு பார்சல் கட்டி பார்டருக்கு அந்தப்புறம் தூக்கி வீசிவிடவேண்டும்" என்பதுதான்..!   

 

ஆனால்இந்திய முஸ்லிம்களை  பாகிஸ்தானுக்கு விரட்டும் தீயோரின் சூழ்ச்சியில் மீண்டும் மீண்டும் மண்..! போகாதோரை கலவரம் ஆரம்பித்து இனச்சுத்திகரிப்பு செய்யும் பயங்கரவாத சூழ்ச்சியும் செத்தது..!  அல்ஹம்துலில்லாஹ்..!  

 

சரியான ஆதாரம், நிஜமான சாட்சி என்று ஏதும் இல்லாவிட்டாலும் ஊடகம் ஏற்படுத்திவிட்ட மாயையினால் 'பயங்கரவாதி' என்று மக்கள் மனதில் நன்கு பதியப்பட்டுவிட்ட அப்சல் குருவுக்கு... பெருவாரியான இந்திய மக்கள் ஆசைக்கிணங்க தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது போல....... 

........இந்தியமக்களான அந்த பெருவாரியான பின்னூட்டவாதிகளின் ஆசைக்கிணங்க... இந்த பச்சைக்கொடியேற்றிய காவிகள் ஏழு பேரையும் உடனே பார்ஸல் கட்டி இந்திய-பாகிஸ்தான் எல்லையோர இரும்பு முள் வேலிக்கு அந்தப்பக்கம் நைசாக ராவோடு ராவா தூக்கி கடாசி விட வேண்டும்..!  

 

இவர்கள் மீது, இப்படி ஒரு நீதி மன்ற தீர்ப்பு வந்தால் எனக்கு ஓகே..!  உங்களுக்கும் ஓகே தானே சகோ...?

Fwd: |TMB| உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது.



---------- Forwarded message ----------
From: shahul hameed <mmshahul@gmail.com>
Date: 2012/1/26
Subject: |TMB| உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது.
To: tamilmuslimbrothers@googlegroups.com



அஸ்ஸலாமு அலைக்கும்,,,

 

 

 

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


 விவாதத்தை டவுன்லோடு செய்து பார்க்க


 Pls Click -> http://onlinepj.com/bayan-video/vivathangal/debate-bible/


முதலில் இந்த விவாதத்தை சத்தியத்தை மடடுமே கூறும் நம் ஜமாஅத்துக்கு வெற்றியாக்கிய எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி கூறுகிறேன். அடுத்ததாக இதை உலகம் முழுவதும் பார்க்க அருமையான ஏற்பாட்டை செய்து தந்த வெப்மாஸ்டர் அப்பாஸ் அவர்களுக்கும், வாதங்களை திறம்பட வைத்த நம் ஜமாஅத் மார்க்க அறிஞர்களுக்கும் மற்றும் நான் மட்டுமல்ல சத்தியத்தை உணர்ந்தவன் அல்லாஹ்வின் அருளால் எப்பேர்பட்ட கொம்பனையும் வீழ்த்த முடியும் என்பதை உணர்த்தும் வண்ணம் சகோ பிஜே அவர்களின் குழுவினர் எடுத்த வைத்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஆபாசத்தை மட்டுமே வைத்திருக்கும் அவர்களால் பதில் கொடுக்க முடியாமல் தடுமாறினர். மேடை பிரச்சாரம போலவும் தோல்வியில் இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டக்கூடாது என்ற நோக்கில் அவர்கள் மக்களை தக்கவைக்க வேண்டுமென்றும் நாங்கள் கடவுளை உணர்கிறோம் எங்கள் மக்கள் உணர்கிறார்கள் ஆனால் நீங்கள் உணரவில்லை என்று ஏதேதோ பேசினார்கள். இது அவர்களால் சத்தியத்திற்கு முன்னால் நிற்க முடியவில்லை என்பதை படம் பிடித்து காட்டியது. இது வரை உலக வரலாற்றில் இப்படி ஒறு விவாதம் நடந்திருக்க முடியாது ஏனென்றால் மற்ற கிறிஸ்துவ விவாதங்களில் பட்டிமன்றம் போன்றோ அல்லது கோர்ட் வாத விவாதம் போன்றோதான் இருக்கும். மேலும் கைதட்டல் இருக்கும் ஆனால் இந்த விவாதம் மட்டுமே அவர்களுக்கும் விவாதம் என்றால் என்ன என்பதை கற்பித்து கொடுத்தது.

மனது பாதித்த விஷயம் சகோ பிஜேவையே அவர்களுடைய ஆபாசங்களை சைகை செய்ய வைத்ததுதான். இதை மட்டும் கொஞசம் தவிர்த்து இருக்கலாம். — ஒரு சின்ன விண்ணப்பம் இந்த விவாத சிடி தயாரிக்கும் போது ஆங்கிலம் மட்டும் தனியாக ஒரு பிரிண்ட் தயாரித்தால் மற்ற மொழி பேசுபவர்களுக்கு கொடுக்க ஏதுவாக இருக்கும் ஏனென்றால் இரண்டு மொழியும் இருந்தால் அவர்களுக்கு முழுமையான தகவல் சென்றடையாது. மொத்ததில் சத்தியத்திற்கு அல்லாஹ் கொடுத்த வெற்றி.

இப்படிக்கு,

அப்துல் ஹமிது, து.களத்தூர்


 விவாதத்தை டவுன்லோடு செய்து பார்க்க


 Pls Click -> http://onlinepj.com/bayan-video/vivathangal/debate-bible/

 

 

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது.உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21 : 18)


என்ற இறைவனின் வசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக கிறித்தவர்களுடனான விவாதம் இறைவனின் தனிப்பெரும் கிருபையால் சிறப்பாக நடந்தது.

 

கடந்த ஜனவரி 21 மற்றும் 22, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட்கள் சென்னையிலுள்ள சர் பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும், கிறித்தவ அறிஞர் ஜெர்ரி தாமஸ் தலைமையிலான குழுவினருக்கும் இடையே பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

 

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த விவாதம் நடந்தது.

 

இந்த பரபரப்பான விவாதத்தில், பைபிள் இறைவேதமாக இருக்க முடியாது என்பதை கிறித்தவ மக்களே சந்தேகத்துக்கு இடமில்லாத வகையிலும், தெள்ளத் தெளிவாகவும் விளங்கிக் கொள்ளும் விதத்திலும் அடுக்கடுக்

கான சான்றுகள் வைக்கப்பட்டன.

 

ஆட்டம் கண்ட அறிஞர்கள் :

 

பைபிள் இறைவேதம் தான் என்பதை நிரூபிப்பதற்காக விவாதம்

செய்ய வந்துவிட்டு, விவாதத்தை ஆரம்பித்த பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆங்கில மொழிப்

புலமை பெற்ற கிறித்தவ அறிஞர்களால் பைபிள் இறைவேதம்தான் என்பதற்கு இந்த விவாதத்தில் ஒரு

ஆதாரத்தைக்கூட எடுத்து வைக்க முடியவில்லை என்பதுதான் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம்.

 

ஆரம்பம் முதலே குர்ஆனில் இறைவன், தவ்ராத் மற்றும் இஞ்சீலைப் பற்றிக் கூறியுள்ள வசனங்களை எடுத்து வைத்துக் கொண்டு குர்ஆனில் சொல்லப்பட்ட தவ்ராத்தும், இஞ்சீலும் இதுதான். எனவே இதை நீங்கள் நம்புங்கள் என்று சொல்லி காமெடி செய்தனர்.

 

தவ்ராத்திலும், இஞ்சீலிலும் நேர்வழி இருந்தது என்றும், ஒரே இறைவனைத்தான் வணங்க வேண்டும் என்றும், மூன்று கடவுள்கள் இல்லை என்றும், கடவுளுக்கு மகன் இருக்க முடியாது என்றும், தீண்டாமை இல்லை என்றும் தெளிவாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

 

தவ்ராத்தும், இஞ்சீலும் குர்ஆனை மெய்ப்பிக்கும் என்றும் குர்ஆனில் உள்ளது. இதற்கெல்லாம் எதிராக உள்ள செய்திகளை மனிதக்கரங்களால் எழுதி வைத்துக் கொண்டு, இதை தவ்ராத் என்றும் இஞ்சீல் என்றும் நம்புங்கள் என்று எங்களை நம்பச் சொன்னால் நாங்கள் எப்படி நம்புவது என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டவுடன் கிறிஸ்தவ அறிஞர்கள் ஆட்டம் கண்டு விட்டனர்.

 

ஆரம்பமே அமர்க்களம் :

 

பைபிள் இறைவேதம் இல்லை என்பதற்கு ஆதாரமாக எடுத்த எடுப்பிலேயே அதிலுள்ள ஆபாசங்களை அள்ளிப் போட, ஆரம்பமே அமர்க்களமானது.

 

கடவுளுடைய வேதம் என்று சொல்லிக் கொண்டு நீங்கள் வைத்துள்ள இந்த வேதம், செக்ஸ் புத்தகங்களை மிஞ்சக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது என்றும், இது எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்று கேட்டு ஆதாரங்களை அள்ளிப்போட, போட கிறிஸ்தவ அறிஞர்கள் என்று தங்களை சொல்லிக் கொண்டவர்கள் விழி பிதுங்கினர்.

 

உன்னதப்பாட்டா? மன்மதப்பாட்டா? :

 

பைபிளில் உள்ள உன்னதப்பாட்டு என்ற ஒரு மகத்துவமிக்க(?) உன்னதமான ஒரு ஆகமத்தில், கள்ளக்காதலர்கள் செய்யும் காமச்சேட்டைகளும், ஆபாச வர்ணனைகளும் முதலில் பட்டியல் போடப்பட்டன.

 

பனை மரத்தில் ஏறுவதும், குலை பறிப்பதும், துவாரத்தில் கையை விடுவதும், வெள்ளைப்போளம் வடிவதும் என்று வரும் வாசகங்களை வாசித்து இதுதான் இறைவேதமா? என்று நாம் கேட்க, இவ்வாறு நீங்கள் வர்ணிப்பது ஏதோ படம் பார்த்துவிட்டு வந்து விளக்குவது போல உள்ளது என்று எதிர்தரப்பினர் கேள்வியெழுப்பினர்.

 

பைபிளை படித்தாலே படம் பார்த்தது போலத்தானே உள்ளது என்று நாம் கூற வாயடைத்துப் போயினர்.

இப்படிப்பட்ட ஆபாசங்களை நியாயப்படுத்த இது போன்ற காமச்சேட்டைகள் கணவன் மனைவி இடையே நடந்த விஷயம் என்று சப்பைக்கட்டு கட்டி பதில் வர, நீ என் அண்ணனாகவும், என் தாயிடத்தில் பால்குடித்த சகோதரனாகவும் இருந்திருந்தால் உன்னைக் கண்ட இடத்திலெல்லாம் முத்தமிடுவேனே! என்று காமச்சேட்டை செய்யும் காதலி சொல்கிறாளே! இப்படித்தான் கணவன் மனைவி பேசிக்கொள்வார்களா? என்று பீஜே கேள்வியெழுப்ப அப்படியே அதைவிட்டுவிட்டு அடுத்த மேட்டருக்கு தாவிவிட்டனர்.

 

தொடரும் அசிங்கங்கள் :

 

ஆபாச வர்ணைனை அசிங்கத்தை எடுத்து வைத்ததைத் தொடர்ந்து

 

அண்ணனும் தங்கையும் உடலுறவு கொண்ட அசிங்கம்,

தன் மகளை திருமணம் முடித்துத்தர 100 நுனித்தோலை தனது மகளுக்காக மஹர் கேட்ட சவுல் ராஜாவின் அசிங்கம், அதற்கு தாவீது ராஜா 200 நுனித்தோல்களை கொண்டு வந்தக் கொடூரம்.

ஆண்களின் மர்ம உறுப்புகளின் அளவுகளை பற்றியே விதவிதமாக விளக்கும் பரிசுத்த(?) வேதாகமத்தின் பரிசுத்த(?)வரிகள்,

மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே நடைபெற்ற அசிங்கங்களை புனித பைபிள் விவரிக்கும் அசிங்கம்,

பெற்ற தகப்பனோடு மகள்கள் உடலுறவு கொண்ட கேவலம்,

மகளுக்கு திருமணம் முடிக்க ஆளில்லாவிட்டால் பெற்ற தகப்பனே மகளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அது பாவமல்ல என்று சொல்லும் கேவலத்திலும் கேவலம்,

சந்தேகப்படும் மனைவியைக் கண்டுபிடிக்க அற்புதமான(?) ஆபாச ஐடியா,

கர்த்தர் யாகோபுடன் ரெஸ்ட்லின் சண்டை போட்ட கதை,

கர்த்தர் யாகோபுடன் சண்டை போட்ட போது யாகோபுடைய தொடைச்சந்துக்குள் கையைவிட்ட ஆபாசம் கர்த்தர் தீர்க்கதரி ஒருவரை அம்மணமாக நடக்க சொன்ன ஆபாசம்,

கர்த்தரே அம்மணமாக ஓடிய கேவலம்,

கர்த்தர் நரியைப்போல ஊளையிட்ட விஷயம்,

பாவாடையை தூக்கிக் காட்டுவதாக பைபிள் விவரிக்கும் விபரீத வர்ணனை

விதை நசுங்கியவன் மற்றும் ஊன முற்றவர்கள் தேவாலயத்தினுள் வரக் கூடாது என்ற அநீதியான சட்டம்

ஒருவர் தனது தகப்பனை ஏசுவுக்காக தியாகம் செய்தால் அவருக்கு நூறு அப்பாக்கள் கிடைப்பார்கள் என்று கூறும் உளறல்

இது போன்ற கேவலமான விஷயங்கள் இறைவனுடைய வார்த்தைகள் என்று சொல்லப்படும் வேதத்தில் இருந்தால் இது வேதமா? அல்லது வேறு எதுவுமா? என்று நாம் கேட்க, கேவலப்பட்ட எதிர்தரப்பினரால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை.

 

பைபிளில் கைவரிசையைக் காட்டியது அம்பலம் :

 

இவர்கள் தற்போது வைத்திருக்கும் பைபிளின் வரலாறு என்ன?

அதில் இவர்கள் தற்போது என்னென்ன கைவரிசையை காட்டியுள்ளார்கள்?

அதில் நீக்கப்பட்ட வசனங்கள் என்னென்ன?

பல வசனங்களை மட்டும் நீக்கவில்லை; பல ஆகமங்களையே நீக்கியுள்ள அவலம்

பைபிளின் மூலப்பிரதிகளின் லட்சணம் என்ன?

பரிசுத்த ஆவியால் உந்தி எழுதப்பட்ட பைபிள் வசனங்களில் அடைப்புக்குறி போட்டு ஆவிகள் பேசிய அதிசயம் எப்படி?

ஏசுவுடைய காலத்தில் இருந்த பழைய ஏற்பாட்டில் இவர்கள் தற்போது விளையாடிய ஆட்டங்கள் என்னென்ன?

இவர்கள் தற்போது வைத்துள்ள புதிய ஏற்பாடு என்பது என்ன என்றே ஏசுவுக்குத் தெரியாது

சினாடிகானஸ், வாடிகானஸ் என்று இவர்கள் எடுத்து வைத்திருக்கும் மூலப்பிரதிகளின் நம்பகத்தன்மை என்ன?

கிரேக்க மொழியில் உள்ள மூலப்பிரதிகளில் உள்ள குளறுபடிகள்

இவை அனைத்தும் ஆதாரப்பூர்வமாக அதன் மூலப்பிரதிகளில் இருந்து ஸ்கேன் செய்யப்பட்ட ஆதாரங்களை அக்குவேறு ஆணிவேறாக எடுத்துப்போட்டவுடன், தாங்கள் பைபிளில் செய்த தில்லுமுல்லுகள் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டதை கண்டு ஆட்டம் கண்ட கிறிஸ்தவ அறிஞர்கள், அதிலிருந்து நழுவி ஓடுவதற்கு, மூலமொழியிலிருந்து எடுத்துக்காட்டி விமர்சனம் செய்வதற்கெல்லாம் கிரேக்க மற்றும் ஹீப்ரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.

 

இதைப்பற்றி எங்களுக்கும் முழு அறிவு இல்லை; உங்களுக்கும் முழு அறிவு இல்லை. எனவே நாம் அதைப்பற்றி இங்கே பேச வேண்டாம் என்று அசடு வழிந்தனர்.

 

சவால் விட்டதும் சறுகிவிட்ட எதிர்தரப்பினர் :

 

உங்களுக்கு இது குறித்து அறிவு இல்லை என்று ஒப்புக்கொண்டு விட்டீர்கள். ஆனால் எங்களுக்கு இது குறித்து அறிவு இல்லை என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம். எனக்கு கிரேக்கமும், ஹீப்ருவும் தெரியும். பேச இயலாதே தவிர, வாசித்து அர்த்தம் வைக்கும் அளவுக்கு தெரியும்.

 

அராமிக்தான் எனக்கு தெரியாது. நாங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் மூலமொழியில் இருந்து ஒப்பீடு செய்து நிரூபிக்க தயார்! நீங்கள் அதை மறுக்க தயாரா? என கலீல் ரசூல் பகிரங்க சவால்விட எதிர் தரப்பினர் கப்சிப்.

 

நமக்கு ஆதரவாக ஆதாரத்தை அளித்த பாதிரிமார்கள்:

 

இரண்டு மூலப்பிரதிகளில் இருந்து அவற்றில் உள்ள வேறுபாடுகளை அடுக்கடுக்காக கலீல் ரசூல் அவர்கள் அள்ளிப் போட்டவுடன், இரண்டு மூலப்பிரதிகளிலிருந்து அதிலுள்ள வேறுபாடுகளை அள்ளிப்போட்டுக் கொண்டு இருக்கிறீர்களே! மூலப்பிரதிகள் இரண்டு மட்டுமா? உள்ளது.

 

கிட்டத்தட்ட 27,000 (இருபத்து ஏழாயிரம்) மூலப்பிரதிகள் உள்ளன. அவற்றைப்பற்றி உங்களுக்குத் தெரியாது என்று கூற, இரண்டு மூல மொழிபெயர்ப்பிலிருந்தே ஆயிரக்கணக்கான முரண்பாடுகளை காட்டிக் கொண்டிருக்கின்றோம். அதுவே இவ்வளவு இருந்தால், 27000 (இருபத்து ஏழாயிரம்) மூலப் பிரதிகளில் எத்தனை குளறுபடிகள் இருக்கும்? நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு என்ன? நீங்கள் சொல்லும் பதில் என்ன? எங்களுக்கு ஆதரவாக கூடுதல் ஆதாரத்தையல்லவா நீங்கள் தருகின்றீர்கள் என கேள்வியெழுப்பிய வுடன் தேவையில்லாமல் உளறிவிட்

டோமோ என்று தங்களது உளறலை தங்களின் மவுனத்தின் வாயிலாக ஒப்புக் கொண்டு விட்டனர் கிறிஸ்தவ அறிஞர்கள்.

 

பரபரப்பாக்கிய விஷப்பரீட்சை:

 

கிறித்தவ பாதிரிமார்களுக்கு அவர்களுடைய உண்மை விசுவாசத்தைச் சோதிப்பதற்காக பைபிளில் இருந்து பீஜே அவர்கள் வைத்த விஷப்பரீட்சைதான் கிறித்தவ விவாதத்தில் மிக மிக பரபரப்பாக்கிய மற்றும் ஹைலைட் ஆன விஷயம்

 

பைபிள் புதிய ஏற்பாடு பகுதியில் மாற்கு 16வது அதிகாரத்தில்,

 

17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

 

18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

 

19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.

 

மேற்கண்டவாறு கர்த்தர் சொல்லியுள்ளாரே! நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால் இதோ விஷபாட்டில் இங்கே உள்ளது.

 

இந்த விஷத்தை இப்போதே நீங்கள் குடித்து, பைபிள் இறைவனுடைய வேதம் என நிரூபியுங்கள் என்று சொல்லி அவர்கள் கையில் விஷத்தை கொடுக்க, ஆடிப்போன எதிர்தரப்பினர் இப்படியெல்லாம் கர்த்தரை பரீட்சை பார்க்கக் கூடாது என்று சொல்லி அசடு வழிந்தனர்.

 

மேலும், இது போல ஒரு பரீட்சையை சாத்தான் ஏசுவிடத்தில் செய்யச்சொன்ன போது இயேசு மறுத்து விட்டார். எனவே நாங்கள் கர்த்தரை பரீட்சை பார்க்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு, புகாரியில் நபிகளார் சொன்னதாக ஒரு செய்தி உள்ளது. யார் அஜ்வா பேரீச்சம்பழத்தை சாப்பிடுகின்றாரோ அவருக்கு விஷமோ சூனியமோ ஒன்றும் செய்யாது என்று வரக்கூடிய ஹதீஸை குறிப்பிட்டு, இந்த விஷத்தையும், பேரீச்சம்

பழத்தையும் நீங்கள் சாப்பிட்டு முஹம்மது நபி இறைத்தூதர்தான் என்பதை நிரூபியுங்கள் என்று கூறி அந்த விஷ பாட்டிலையும், பேரீச்சம்பழத்தையும் நமக்கு அளித்தனர்.

 

உயிருக்குப் பயந்து கொண்டு பைபிளை பொய்யாக்கிய கேவலம்:

 

பேரீச்சம்பழத்தையும், விஷபாட்டிலையும் நமக்குக் கொடுக்க, இப்படி, "யார் அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகின்றாரோ அவருக்கு விஷமோ சூனியமோ ஒன்றும் செய்யாது" என்று வரக்கூடிய செய்தி பொய்யான செய்தி. இதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பல வருடங்களுக்கு முன்பே இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

 

குர்ஆனுக்கு முரண்படும் இத்தகைய செய்திகளை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று எங்களது நிலையை தெளிவுபடுத்தியுள்ளோம். நீங்கள் சுட்டிக்காட்டியது பொய்யான செய்தி.

 

நாங்கள் சொல்வது போல, பைபிளில் உள்ள மாற்கு அதிகாரத்தில் வரும் விஷம் குடிக்கும் செய்தி பொய்யான செய்தி என்று நீங்கள் சொல்லிவிட்டால் நாங்கள்

 

உங்களை விஷம் குடிக்க சொல்ல மாட்டோம் என்று பீஜே அறிவித்தார்.

 

கர்த்தரை பரீட்சை பார்க்கலாம்:

 

கர்த்தரை பரீட்சை பார்க்கக்கூடாது என்பதால் தானே நீங்கள் விஷத்தை குடிக்க மாட்டேன் என்கிறீர்கள். பைபிளை நன்றாகப் படித்துப் பாருங்கள். யாத்திரகாமம் 17வது அதிகாரத்தில் மோசேவுடன் பயணித்த மக்கள் கர்த்தரை பரீட்சை பார்க்க, தண்ணீர் கேட்டனர். அவர்களை மோசே திட்டிவிட்டு அற்புதத்தை கொண்டு வந்தார். அதைப்போல, இயேசுவிடத்திலும் அவரை சோதித்துப் பார்ப்பதற்கு, ஒரு அடையாளம் கேட்டதாகவும், அவர் ஒரு அடையாளத்தை அறிவித்ததாகவும் உள்ளது.

 

அதுமட்டுமில்லாமல், தன்னை நம்பாத மக்களிடத்தில் அவரை நம்பவைப்பதற்காக இயேசு அற்புதம் நிகழ்த்தியதாக உள்ளதே எனவே நம்பவைக்க அற்புதம் செய்துள்ளதால், நீங்கள் இப்போது விஷம் குடித்து அற்புதம் செய்து பைபிள் இறைவேதம்தான் என்று நிரூபித்துவிட்டால் அதை நாங்கள் ஏற்றுக் கொண்டு விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கின்றோம் என்று பீஜே அறிவித்து விஷபாட்டிலை திரும்பவும் அவர்களிடம் தூக்கி கொடுக்க, பைபிளை உண்மையென்று நிரூபிப்பதை விட அவர்களுக்கு பைபிளை விட தங்களது உயிர்தான் பெரிது என்று விஷத்தைக் குடிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

 

அதுமட்டு மல்லாமல் பைபிள் இறைவேதமில்லை என்று தாங்களே தங்களது செய்கையின் வழியாக சாட்சி கொடுத்தனர்.

 

பேப்பர் வெயிட்டைக்கூட நகர்த்த முடியாமல் தலைகுனிந்த பேரறிஞர்கள் :

 

அடுத்ததாக,

 

கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 17:20

 

அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

லூக்கா 17:6

 

மேற்கண்ட வசனங்களை பீஜே அவர்கள் வாசித்துக் காண்பித்து உங்களில் யாருக்கேனும் கடுகளவு விசுவா

சமிருந்தால், இந்த மலையைப்பார்த்து நகர்ந்து கடலில் போய் விழு என்று கட்டளையிட்டால் அது அப்படியே கேட்கும் என்று சொல்லும் பைபிள் உண்மையிலேயே இறைவேதமாக இருக்குமானால், இதோ ஒரு பேப்பர் வெயிட் இங்குள்ளது.

 

நீங்கள் மலையை எல்லாம் நகர்த்திக் காட்ட வேண்டாம். இதோ இந்த பேப்பர் வெயிட்டை மட்டும் கொஞ்சம் நகர்த்திக் காட்டுங்கள் என்று சவால்விட, தங்களுக்கு கடுகளவு கூட விசுவாசமில்லை; பைபிள்இறைவேதமுமில்லை என்று தங்களது செய்கையின் மூலம் நிரூபித்து தலைகுனிந்தனர்.

 

உலகம் முழுவதும் பார்க்கப்பட்ட விவாதம்:

 

இந்த நேரடி விவாதம் நமது ஆன்லைன்பீஜே இணையதளம் மற்றும் tntj.netமற்றும் ஜீஸஸ் இன்வைட்ஸ் மற்றும் தவ்ஹீத் வீடியோ ஆகிய இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 

தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருவாரியான மாவட்டங்களில் தங்களது மர்கஸ்களில் இணையதளத்தின் வாயிலாக நேரடி ஒளிபரப்பை ஒளிபரப்பு செய்து அதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்தனர்.

 

அதுமட்டுமில்லாமல், லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகள், மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் உள்ளவர்கள் இந்த நேரடி விவாதத்தை கண்டுகளித்து தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

விவாதம் நடைபெற்ற ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு நாளும் 23000 (இருபத்தி மூவாயிரம்) சிஸ்டங்கள் வழியாக இந்த நேரடி ஒளிபரப்பு பார்க்கப்பட்டுள்ளது.

 

ஒரு சிஸ்டத்தில் குறைந்தது 5 பேர் பார்த்திருந்தாலும் கிட்டத்தட்ட ஒன்னேகால் லட்சம் பேர்கள் பார்த்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், மாவட்டங்களில் பல மர்கஸ்களில் ஒரு சிஸ்டத்திலேயே ஸ்கோப் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.

 

அதுமட்டுமில்லாமல் மொபைல் போன் வழியாகவும் நேரடி ஒளிபரப்பை பார்க்கும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

 

நேரடி ஒளிபரப்பு பணியை நமது இணையதள வெப்மாஸ்டர் அப்பாஸ் அவர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தார்.

 

சிறப்பாக அமைந்த ஆங்கில மொழியாக்கம்:

 

நாம் தமிழில் வைக்கும் வாதங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கர்நாடக நிர்வாகிகளான பெங்களூர் முஹம்மது கனி மற்றும் பெங்களூர் யூசுப் ஆகியோர் மிகச் சிறந்த முறையில் மொழிபெயர்த்தனர். பீஜே மற்றும் நமது குழுவினர் வைத்த வாதங்களை முழுமையாக கிரகித்து உணர்வுப்பூர்வமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்த விதம் இந்த விவாதம் உலகம் முழுவதும் சென்றடைய வழிவகுக்கும் வகையில் அமைந்தது.

 

எந்த விவாதத்திலும் நடக்காத அதிசயம்:

 

இறுதியாக ஜெர்ரி தாமஸ் நிறைவுரை ஆற்றும் போது சில கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பீஜே அரை மணி நேரத்துக்கு முன்பு தான் விளக்கமாக பதில் கூறி இருந்தார்.

 

இது பற்றி பீஜே தனது நிறைவுறையில் குறிப்பிடும் போது பதில் சொன்ன பிறகு கேள்வி கேட்கும் அதிசயத்தை இப்போது தான் நாம் பார்க்கிறோம்.

 

இவர்கள் எந்த அளவுக்கு குழம்பியுள்ளனர் என்று எடுத்துக் காட்டினார்.

 

பைபிள் இறைவேதம் என்பதற்கு ஒரு ஆதாரத்தையும் இவர்கள் காட்டவில்லை என்பதையும் பீஜே எடுத்துக் காட்டினார்.

 

குர்ஆனில் தவ்ராத் இஞ்சீல் பற்றி கூறியது தான் பைபிள் இறைவேதம் என்பதற்கு ஒரே ஆதாரமாக இவர்கள் கூறினார்கள்.

 

முஸ்லிம்களை அவர்களின் நம்பிக்கையை வைத்தே ஏமாற்றி வசப்படுத்த நினைத்தனர் அதில் இவர்கள் தோல்வி அடைந்தனர்.

 

ஒரு முஸ்லிமாவது இவர்கள் வாதம் செய்ததை நம்புகிறீர்களா? என்று பீஜே கேட்டார். ஒரு முஸ்லிமும் கை உயர்த்தவில்லை.

 

ஒவ்வொரு தரப்புக்கும் 150 பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் ஆனால் முஸ்லிம் தரப்பில் ஒருவர் கூட வெளியேறவில்லை. ஆனால் கிறித்தவ தரப்பில், பொறுக்குமணிகளாக கூட்டி வந்த 150 பேரில் 85 பேர் இவர்களின் உளறலைப் பார்த்து வெளியேறி விட்டனர் என்பதையும், இங்கு இந்த விவாதத்தை பார்த்துக் கொண்டிருந்த கிறுஸ்தவ பார்வையாளர்களில் பாதிபேர் எப்படி உங்களது வாதம் சரியில்லை என்பதை உணர்ந்து பாதியிலேயே வெளியேறினார்களோ அது போலத்தான் இந்த விவாதத்தை டிவிடிக்கள் மற்றும் இணையதளம் வாயிலாக பார்ப்பவர்களும், உலகமக்களும் உணர்வார்கள் என்பதையும் பீஜே எடுத்துக் காட்டினார்.

 

இறைவனுடைய மகத்தான அருளால், பைபிள் இறைவேதமல்ல; அது மனிதக்கரங்களால் எழுதப்பட்ட, பொய்களும், முரண்பாடுகளும், தவறுகளும், கேடுகெட்ட ஆபாசங்களும், உளறல்களும், நிறைந்த ஒரு மனித உளறல்தான் என்பது மீண்டும் நிரூபணமானது. அல்ஹம்துலில்லாஹ்

"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது" என்றும் கூறுவீராக!

அல்குர்-ஆன் 17 : 81

 

 

 

--
அன்புச் சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். குழுமத்தின் அனைத்து தொடர்புகளுக்கும் payanullathagaval@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு மெயில் செய்யவும்.
அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கி இருப்பான்.மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகிறான்.தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான்.நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிக்கபடுவீர்கள்.
அல் குர்ஆன்.16:93
 

please forward to this website address for all islamic,christian and hindu brothers.
http://www.onlinepj.com - http://www.jesusinvites.com - http://thowheedvideo.com
http://payanullathagavalgal.blogspot.com/

--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.