Fwd: |TMB| அறிவுப்பூர்வமாக - சிந்தித்து - செயல்படும் சகோதர-சகோதரிகளே !



---------- Forwarded message ----------
From: Abu Inaayaa <jeeyatrp2002@gmail.com>
Date: 2012/1/2
Subject: |TMB| அறிவுப்பூர்வமாக - சிந்தித்து - செயல்படும் சகோதர-சகோதரிகளே !
To: TAMIL MUSLIM BROTHERS GOOGLE <tamilmuslimbrothers@googlegroups.com>, Tamil Muslim <tamilmuslimbrothers@gmail.com>
Cc: K-Tic-group-owner@yahoogroups.com, k-tic-group@yahoogroups.com


அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்).

அன்புள்ள (அறிவுப்பூர்வமாக - சிந்தித்து - செயல்படும்) சகோதர-சகோதரிகளே !

மாற்றுமத கலாச்சாரமான புத்தாண்டை கொண்டாடுவது - வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது மற்றும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது ஆகியவற்றை தவறு என்றும், இது ஹராம் என்றும் இந்த வலைத்தளத்தின் மூலம், குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு (இது நபி வழிக்கு புறம்பானது - யார் மாற்று மத கலாசாரத்தை பின்பற்றுகின்றார்களோ அவர்கள் என்னை சார்ந்தவர்கள் இல்லை என்ற நபியவர்களின் கூற்றை பறைசாற்றி) உண்மையான தாவா பணி K-Tic என்ற வலைத்தளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆனால் தற்போது இதே வலைத்தளத்தின் மூலம் மாநபி (ஸல்) அவர்கள் செய்யாத-சொல்லாத-அங்கிகரிக்காத மாபெரும் பாதக செயலை (மீலாது நபி விழா) அரங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவுதுபில்லாஹ்.

மாற்று மத கலாச்சாரத்தைப் பின்பற்றக்கூடாது என்று நமக்கு எச்சரிக்கை செய்த அதே நபியவர்கள் தான், நான் செய்யாத-சொல்லாத-அங்கிகரிக்காத செயல்கள் அனைத்தும் பித்-அத், பித்-அத் அனைத்தும் வழிகேடு, வழிகேடு அனைத்தும் உங்களை நரகத்தில் சேர்க்கும் என்று எச்சரித்துள்ளார்கள்.

ஒரு தவறு எங்காவது நடைபெற்றால், அதை தங்களுடைய கரங்களால் தடுங்கள் அல்லது நாவால் தடுங்கள் அல்லது மனத்தால் வெறுத்து ஒதுங்கி விடுங்கள், இது ஈமானின் கடைசி நிலை என்று
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே ! அன்புள்ள (அறிவுப்பூர்வமாக-சிந்தித்து-செயல்படும்) சகோதர - சகோதரிகளே ! அறிவுப்பூர்வமாக சிந்தியுங்கள், செயல்படுங்கள். வல்ல நாயன் எனக்கும், உங்களுக்கும், நம் அனைவருக்கும் நேரான நல்ல வழியினை காட்டுவானாக.

இறுதியாக - இவ்வலைத்தள (K-Tic) நிர்வாகிக்கு, எதை வேண்டுமானாலும் மக்களிடம் பரப்பலாம் என்று இல்லாமல் ஆக்கப்பூர்வமான-மக்களுக்கு பயன் தரக்கூடிய நல்ல விசயங்களை மட்டும் குரான் - ஹதீசுக்கு உட்பட்டு பரப்புங்கள், வெளியிடுங்கள். மேலும் தீமை எங்கு நடந்தாலும், அது குரான் மற்றும் ஹதீசுக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக இருகரம் கொண்டு தடுங்கள்.

அன்புடன்,

ஜியாவுதீன். ஹ
திருப்பட்டினம்
0091-9790376510


K-Tic வலைத்தளத்தின் மீலாது நபி விழா பற்றிய அறிவிப்பு விபரம் :

ஜனவரி 27,2012 ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி! அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம் !!
 
துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி நடத்தி வரும் பேச்சுப்போட்டி 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷல் பள்ளியில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.

அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் உள்ளிட்ட கருத்துக்களில் உரை நிகழ்த்தலாம்.

அனைத்து சமூகத்தினரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். மேற்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் தமிழில் மட்டுமே பேச வேண்டும். போட்டி நடைபெறும் அரங்கினுள் போட்டியாளர்கள் 15 நிமிடங்கள் முன்னதாக வந்து தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.01.2012

மேலதிக விபரங்களுக்கு 050 5196 433 / 055 800 7909 / 050 58 53 888 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிகழ்விற்கு ஈடிஏ அஸ்கான், லேண்ட்மார்க் ஹோட்டல், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், அல் மஸ்ரிக் இண்டர்னேஷனல், அரபியா டாக்ஸி, அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ், இந்தியா சில்க் ஹவுஸ், நிக்காஹ்.காம் உள்ளிட்டவை அணுசரனை வழங்கியுள்ளன.

குறிப்பு : இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் மனத்தால் வெறுத்து ஒதுங்கி நம்முடைய கடைசி நிலை ஈமானை நிருபிப்போமாக !


--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

0 Responses

கருத்துரையிடுக