Fwd: [saharatamil] மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...



---------- Forwarded message ----------
From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
Date: 2011/11/30
Subject: [saharatamil] மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...
To:


 

மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

----------------
தமிழினம் மீதான இலங்கை இராணுவத்தின் போர்க்கொடுமைகளை வெளிக்கொண்டு வந்த பிரபல ஊடகமான சேனல் 4, தன்னுடைய ஆவணப்படம் ஒன்றிற்கு வைத்த தலைப்பு தான் நீங்கள் மேலே காணுவது.
---------------

                     1904-ஆம் ஆண்டு. உலகின் மிகப்பெரிய கண்காட்சி ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்தது அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரம். இன்றைய காலக்கட்டத்தில் உலகில் நடக்கும் நிகழ்வுகளை தொலைக்காட்சி, இன்டர்நெட் வாயிலாக நாம் கண்டுவிடுகின்றோம். ஆனால் அந்த காலக்கட்டத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லாத போது, இம்மாதிரியான கண்காட்சிகள் தான் உலக நடப்புகளை அறிந்துக்கொள்ளும் இடங்களாக அமைந்தன. 

உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள், விலங்குகள், விவசாய யுக்திகள் என்று அனைத்தையும் ஒருசேர கண்டுகளிக்கும் இடங்களான திகழ்ந்தன இந்த கண்காட்சிகள். இதுப் போன்ற ஒரு பிரமாண்டமான கண்காட்சிக்கு தான் தயாராகிக் கொண்டிருந்தது செயின்ட் லூயிஸ் நகரம். 

அதெல்லாம் சரி.........விலங்குகளை, கண்டுபிடிப்புகளை, யுக்திகளை காட்சிக்கு வைக்கின்றார்கள்...ஓகே....

மனிதர்களை காட்சிக்கு வைத்தால்????? 

வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற பரிணாமக் கருத்தை நிரூபிக்க உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு இனத்தவரை அழைத்து வந்து காட்சிக்கு வைத்து, தாங்களே சிறந்தவர்கள் என்று நிரூபிக்க முற்பட்டால்??

ஆம். கேட்கவே கொடூரமாக இருக்கும் இதுப்போன்ற செயல்களை தான் அரங்கேற்றி காட்டியது அந்த கண்காட்சி. ஐரோப்பாவின் பெரிய நகரங்களில் இதுப்போன்ற கண்காட்சிகள் ஏற்கனவே நடைப்பெற்றிருக்கின்றன என்றாலும்,  பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் மனித இனத்தவரை அதிகமாக காட்சிக்கு வைத்தது இந்த கண்காட்சியில் தான்.  

மனிதனின் உடல், உள்ளம் மற்றும் கலாச்சாரம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்யும் துறைக்கு மானிடவியல் (Anthropology) என்று பெயர். இந்த துறையைச் சார்ந்தவர்களை மானிடவியலாளர் என்பார்கள். 

செயின்ட் லூயிஸ் கண்காட்சியின் மானிடவியல் துறையின் தலைவராக இருந்தவர் ஜான் மெக்கீ (John Mcgee) என்ற பிரபல மானிடவியலாளர். இவர் அமெரிக்க மானிடவியல் சங்கத்திற்கும் அப்போது தலைவராக இருந்தார். 

இவர் தான் நாம் மேலே பார்த்த கொடுமைகளுக்கு பின்னணியில் செயல்பட்டவர். வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வினின் கருத்தை இந்த கண்காட்சி வாயிலாக நிரூபித்துவிட வேண்டும் என்பதே இந்த விஞ்ஞானியின் நோக்கம். அதற்கு அவர் செய்த ஏற்பாடு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் இனத்தவரை இந்த கண்காட்சிக்கு அழைத்துவருவது, அவர்களது நடவடிக்கைகளை செயல்முறையாக காட்டி, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வீனிய கோட்பாட்டை நிரூபிப்பது. 

தன்னுடைய இந்த எண்ணத்தை நிறைவேற்ற செயல்முறையில் இறங்கினார் மெக்கீ. தென் அமெரிக்க பழங்குடியினத்தவர், வட அமெரிக்காவின் பூர்வகுடிமக்கள், எஸ்கிமோக்கள் என்று பல இனத்தவர் இவருடைய லிஸ்ட்டில் இருந்தார்கள். அவர்களை அழைத்துவர குழுக்களை அனுப்பினார் மெக்கீ. 

நீங்கள் மேலே பார்த்த இனத்தவரையெல்லாம் விட, மெக்கீ ஆர்வமுடன் எதிர்பார்த்த ஒரு இனம், மத்திய ஆப்பிரிக்காவின் பிக்மீக்கள் (Pygmy).

பிக்மீக்கள் - இவர்கள் சராசரி மனிதர்களை விட உயரம் குறைந்தவர்கள். சுருட்டலான முடியும், மிக கருமையான நிறமும் கொண்டவர்கள். மத்திய ஆப்பிரிக்க காடுகளில் வசிக்கும் பழங்குடியினத்தவர்.  

இவர்களை கண்காட்சியில் வைக்க ஏன் அவ்வளவு ஆர்வப்பட்டார் மெக்கீ என்பதை இந்நேரம் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். பிக்மீக்களை கொண்டு வரும் பொறுப்பை, பயண ஆராய்ச்சிகளில் (Explorer) சிறந்தவராக கருதப்பட்ட சாமுவேல் வெர்னெரிடம் (Samuel Verner) ஒப்படைத்தார் மெக்கீ. 

மத்திய ஆப்பிரிக்கா நோக்கிய தன்னுடைய கடல்வழி பயணத்தை தொடங்கினார் வெர்னெர்.

--------------------------

ஓடா பெங்கா:

அதே காலக்கட்டம். மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ நாடு.  

அப்போது பெல்ஜியம் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது காங்கோ. இந்நாட்டின் காங்கோ ஆற்றையொட்டிய காட்டுப்பகுதிகளில் அதிகளவில் வசித்து வந்தனர் பிக்மீக்கள். திடீரென இவர்கள் மீது படையெடுத்தனர் பெல்ஜியம் மன்னரின் படைகள். இதற்கு காரணம், பிக்மீக்கள் இருந்த பகுதியில் உள்ள ரப்பர் மரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவர பெல்ஜியம் மன்னர் எண்ணியதே ஆகும்.

பிக்மீக்கள் துடைத்தெரியப்பட்டனர். 

வேட்டைக்கு சென்று விட்டு தன் இருப்பிடத்துக்கு திரும்பிய ஓடா பெங்கா (Ota Benga) என்ற பெயருடைய பிக்மீக்கு மிகுந்த அதிர்ச்சி. தன்னுடைய மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் இந்த அசம்பாவிதத்தில் இழந்திருந்தார் பெங்கா. தன்னுடைய இனம் துடைத்தெரியப்பட்டிருப்பதை முழுவதுமாக அறிந்துக் கொள்வதற்குள் மற்றொரு பழங்குடியினத்தவரிடம் சிக்கிக்கொண்டார். 

அவர்கள் பென்காவை கூண்டில் அடைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகினர். 

---------------------------

பிக்மீக்களை தேடி காங்கோ ஆற்றில் வந்துக்கொண்டிருந்தார் வெர்னெர். ஆற்றின் ஒரு பகுதியில் வெர்னெரின் நீராவிப் படகு பழுதடைந்தது. உதிரிப்பாகங்கள் வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேலாகுமென சொல்லப்பட, அந்த இடத்திலிருந்து இறங்கி ஆற்றையொட்டிய காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார் வெர்னெர். 

ஆஹா...அவர் எதிர்ப்பார்த்து வந்த விசயம் கிடைத்துவிட்டது. ஆம், கூண்டில் அடைக்கப்படிருந்த பெங்காவை பார்த்தார் வெர்னெர். பரவசமடைந்தார்.

பெங்காவை கூண்டில் அடைத்தவர்களிடம் பேசி, பணய பொருட்களை கொடுத்து பெங்காவை விடுதலை செய்தார். பிக்மீக்கள் குறித்து நன்கு அறிந்தவர் என்பதால், அவர்களுடைய மொழியையும் அறிந்திருந்தார் வெர்னெர். தன்னுடன் வரவேண்டுமென்று பெங்காவிடம் அவர் சொல்ல, இங்கே இந்த பழங்குடியினருடன் இருந்து வேதனைகளை அனுபவிப்பதைவிட வெர்னருடன் செல்வது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார் ஓடா பெங்கா. 

தன்னுடைய இந்த முடிவு, உலகின் கோரமான ஒரு நிகழ்வுக்கு காரணமாக இருக்கப்போகின்றது என்பதை அறிந்திருக்கவில்லை அந்த அப்பாவி. 

பின்பு, வேறு இடங்களில் இருந்த சில பிக்மீக்களை பெங்காவின் உதவிக்கொண்டு சம்மதிக்க வைத்து அவர்களை அழைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு பயணத்தை தொடங்கினார் வெர்னெர். 

செயின்ட் லூயிஸ் உலக கண்காட்சி:

வெர்னரின் நீராவிப் படகு பிக்மீக்களுக்கு முதல் ஆச்சர்யத்தை தந்தது. நீராவிப் படகு எப்படி வேலை செய்கின்றது என்று அவர்களுக்கு விளக்கினார் வெர்னெர். அமெரிக்காவை அடைந்தவுடன், உயர உயரமான கட்டிடங்களும் தொழில்நுட்ப விசயங்களும் பிக்மீக்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றன. 

தான் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவை அடைந்தவுடன், பிக்மீக்களை ரயிலில் ஏற்றி செயின்ட் லூயிஸ் நகருக்கு அனுப்பிவைத்து விட்டார் வெர்னெர்.

கண்காட்சியில் இவர்கள் காட்சிக்காக வைக்கப்பட, மானிடவியல் ஆய்வாளரான மெக்கீ, தன்னுடைய எண்ணம் நிறைவேறியதை எண்ணி ஆனந்தப்பட்டார். கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் பிக்மீக்கள். அதிலும் குறிப்பாக ஓடா பெங்காவின் மீது பலரின் பார்வையும் விழுந்தது. அதற்கு காரணம் அவரது பற்கள் தான். தன்னுடைய கலாச்சாரத்தின்படி சிறு வயதிலேயே தன்னுடைய பற்களை கூர்திட்டி இருந்தார் பெங்கா. 

கண்காட்சியின் நாட்கள் செல்ல செல்ல, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்று இவர்களை காட்டி தன்னுடைய பரிணாம எண்ணங்களை மக்களுக்குள் வலுவாக விதைத்தார் மெக்கீ. அறிவியல்ரீதியாக வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக மகிழ்ந்துக்கொண்டார். 

ஏழு மாத காலம் நடந்த இந்த கண்காட்சியை, சுமார் இரண்டு கோடி மக்கள் வரை பார்த்ததாக குறிப்பிடும் சேனல் 4, அவர்களில் பெரும்பாலானவர்கள், வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை அறிவியல்ரீதியாக இந்த கண்காட்சி நிரூபித்து காட்டிவிட்டதாக எண்ணினர் என்றும் கூறுகின்றது.

பிக்மீக்கள் அறிவில் குறைந்தவர்கள் என்ற வாதம் முட்டாள்தனமானது. ஏனென்றால், அவர்கள் இருந்த சூழ்நிலைகேற்ப அறிவில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். இவர்களுடன் அதிக காலம் கழித்த வெர்னெர், இவர்கள் மனிதர்களை காட்டிலும் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை என்று தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கண்காட்சியில் இவர்களின் சில நடவடிக்கைகளை விரும்பவில்லை மெக்கீ. ஏனென்றால் அவை புத்திசாலித்தனமாக, வெள்ளையர்களின் நடவடிக்கைகளுக்கு நிகராக இருந்தது. ஆக, பிக்மீக்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம், அறிவியல் அடிப்படையில் இனவெறியை நியாயப்படுத்த திட்டமிடப்பட்ட சதியே அன்றி வேறேதும் இல்லை.      

மலேரியாவில் இருந்து விடுபட்டு செயின்ட் லூயிஸ் நகருக்கு வந்த வெர்னெர், தான் அழைத்து வந்த பிக்மீக்கள் சிறைவாசிகள் போல நடத்தப்படுவதை உணர்ந்துக்கொண்டார். 

கண்காட்சி முடிந்தது. தன்னுடைய வாக்குறுதிக்கேற்ப பிக்மீக்களை மறுபடியும் ஆப்பிரிக்காவில் சென்று விட்டு விட்டார் வெர்னெர். 

தன்னுடைய இனம் அரசப்படையால் முழுவதுமாக அழிக்கப்பட்டிருப்பதை கண்டார் ஓடா பெங்கா. பிறகு, வேறொரு இனத்திலிருந்து ஒரு பெண்ணை மணமுடித்து கொண்டார். அந்த பெண் பாம்பு கடித்து இறக்க, பெங்கா மீது பேய் இருப்பதாக கூறி அவரை நிராகரித்தனர் அந்த இனத்தினர். தன்னை அனைவரும் ஒதுக்குகின்றனர் என்று வேதனை அடைந்த பெங்கா, தன்னை மறுபடியும் அமெரிக்காவிற்கு அழைத்து செல்ல சொல்லி வெர்னரிடம் கேட்டுக்கொண்டார். 

முதலில் மறுத்த வெர்னர், பின்னர் ஒப்புக்கொண்டார். மறுபடியும் அமெரிக்காவிற்கு பயணமாகினர். இந்த முறை அமெரிக்காவின் நியூயார்க். 

தான் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வந்திருந்த கைவினை பொருட்களை நியூயார்க் அருங்காட்சியகத்தில் விற்க முயன்றார் வெர்னெர். ஆனால், அவருடைய பொருட்களை வாங்க மறுத்துவிட்டது அருங்காட்சியகம். இதனால் விரக்தியடைந்த வெர்னெர், ஓடா பெங்காவை அருங்காட்சியகத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, பொருளாதார உதவி நாடி தன் குடும்பத்தினரை சந்திக்க சென்று விட்டார். 

மிக மிக கேவலமான, கேட்பவர் உள்ளங்களை கொதிப்படைய செய்யும் நிகழ்வுகள் நடந்தேற ஆரம்பித்தன. 

பரிணாமக் கோட்பாடு மறுபடியும் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்தது.

ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலை:

அருங்காட்சிகத்தில் ஓடா பெங்கா இருக்கும் செய்தி, நியூயார்கின் ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலையின் (Bronx Zoo) டைரக்டரான வில்லியம் ஹார்னடேவிற்கு (William Hornaday) எட்டியது.

ஹார்னடேவும், அமெரிக்க உயிரியல் கழகத்தின் செயலாளருமான மாடிசன் கிரான்ட்டும் (Madison Grant) சேர்ந்து ஒரு மிகப்பெரிய திட்டத்தை தீட்டினார்கள். அதாவது, டார்வினின் பரிணாம கோட்பாட்டை நிரூபிக்கும் ஆதாரமாக பெங்காவை காட்ட தீர்மானித்தார்கள்.

டார்வினின் கூற்றுப்படி, குரங்(கு போன்ற ஒன்றிலிருந்து)கிலிருந்து வந்தவன் மனிதன். அதாவது, குரங்கு போன்ற உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக மாறி பின்னர் மனிதன் வந்தான் என்பது டார்வினின் கருத்து.

டார்வினின் இந்த கூற்றை தான் நிரூபிக்க முயன்றனர் ஹார்னடேவும், கிரான்ட்டும். குரங்கிற்கும், மனிதனிற்கும் இடைப்பட்ட இனமாக (Missing link) பெங்காவை காட்ட தீர்மானித்தனர்.

ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலைக்கு பெங்காவை அழைத்து சென்றனர். Zoo-வில் உள்ள யானைகளை நிர்வகிக்க தான் (யானைகளை அடக்குவதில் கில்லாடிகள் பிக்மீக்கள்) தன்னை அழைத்து செல்கின்றார்கள் என்று நினைத்தார் பெங்கா. ஆனால், ஒரு ஆதாரமற்ற கோட்பாட்டை நிரூபிப்பதற்காக அவருடைய இனத்தை கேவலப்படுத்த போகின்றனர் என்பது தெரியவில்லை அவருக்கு.

1908-ஆம் ஆண்டு, செப்டெம்பர் 8-ஆம் தேதி அந்த கொடூரமான சம்பவம் நடந்தது. மிருகக்காட்சி சாலையின் குரங்குகள் கூண்டில், குரங்குகளுடன் அடைக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டார் பெங்கா. அந்த கூண்டிற்கு மேலே இருந்த விளம்பரப் பலகை இவரை "Missing Link" என்று சொல்லியது.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு குறிப்பு எழுதி கூண்டிற்கு வெளியே மாட்டுவார்களே, அதுபோல பெங்காவை பற்றி எழுதி கூண்டிற்கு வெளியே மாட்டியிருந்தார்கள். ஒவ்வொரு நாளின் மதியமும் பெங்காவை பார்க்கலாமென்றும் அந்த பலகையில் எழுதியிருந்தது.

என்ன கொடுமை இது?...ஒரு மனிதனை இன்னொரு சக மனிதன் இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது. இனவெறியின் உச்சக்கட்டம். பின்னணியில் பரிணாமக் கோட்பாடு. தடுப்பதற்கு யாரும் இல்லை. ஏனென்றால், இவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அறிவியலே சொல்லிவிட்டதல்லவா??

பார்க்கவரும் மக்களை நோக்கி தன்னுடைய வில் அம்பை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டார் பெங்கா. தன்னுடைய ஊஞ்சற் படுக்கையை அந்த கூண்டிலேயே பயன்படுத்த உற்சாகப்படுத்தப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்துக்கொண்டு உலாவ ஊக்குவிக்கப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்தவாறு இவர் நிற்கும் காட்சி பார்ப்பவர் உள்ளங்களை துளைப்பதாக உள்ளது.


மக்கள் மத்தியில் மிக பிரபலமானது இந்த நிகழ்வு. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் போது (Sep 16, 1908), சுமார் 40,000 மக்கள் பெங்காவை பார்த்து சென்றிருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பார்க்கவரும் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கின்றார் பெங்கா. சமயங்களில் ஆத்திரத்துடன் மக்களை நோக்கி தன் அம்பை எறிவாராம்.

இந்த நிகழ்ச்சி அமெரிக்க கறுப்பின மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது. கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். தாங்கள் ஏற்கனவே சமூகத்தால் கீழ்த்தரமாக நடத்தப்படும்போது, குரங்குகளுடன் தங்கள் இனத்தவரை அடைத்து வைத்து மேலும் கேவலப்படுத்த வேண்டுமா என்று கொந்தளித்தனர். ஆனால் இவர்களின் நியாயக்குரலை காதுக் கொடுத்து கேட்க (ஆரம்பத்தில்) முன்வரவில்லை நியூயார்க் நகரின் மேயர்.  ஏனென்றால், அறிவியலை தானே நிரூபிக்க முயல்கின்றனர் ஹார்னடேவும், கிரான்ட்டும்?

பெங்காவின் இறுதி நாட்கள்:

மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு மிருகக்காட்சி சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார் பெங்கா. இரண்டு வார zoo வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் அனாதைகள் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு கல்வி கொடுக்கப்பட்டார்.

ஆங்கிலம் பேசுவதற்கும், படிப்பதற்கும் கற்றுக்கொண்டார். மிருகக்காட்சி சாலையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை மறக்க முடியாமல் தவித்தார். "நானும் மனிதன் தான், நானும் மனிதன் தான்" என்று கூறி தன் மார்பில் அடித்துக்கொள்வாராம் பெங்கா.

ஆப்பிரிக்கா திரும்ப திட்டமிட்டார். அதற்காக வெற்றிலை தொழிற்சாலையில் வேலை செய்து பணம் சேர்த்தார். ஆனால், முதல் உலகப்போர் தொடங்கிவிட, அவரால் ஆப்பிரிக்காவிற்கு திரும்ப முடியவில்லை. இதனால் மன உளைச்சலடைந்த பெங்கா, 1916-ஆம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இனவெறியை நியாயப்படுத்தி மற்றொரு உயிரை பலிவாங்கிவிட்டது பரிணாமக் கோட்பாடு.

உலகம் மறந்து போயிருந்த இந்த அசிங்கமான இரகசியத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு (1992) வெளிக்கொண்டு வந்தார் வெர்னரின் பேரன். சில ஆண்டுகளுக்கு முன்பு (2009) இதுக்குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது சேனல் 4.

பெங்காவின் சோக வரலாற்றை கேட்கும் போது, இயல்பாகவே நம்முள் எழும் கேள்வி...இங்கே யார் தாழ்ந்தவர்கள்? பெங்காவா? இல்லை அந்த பரிணாமவியலாளர்களா?

முடிவாக:

விடைபெறும் முன் இந்த செய்திகளையும் அறிந்துக்கொண்டு செல்லுங்கள்....

1. பெங்காவை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்து வந்தாரே கிரான்ட்...அவருக்கும் ஹிட்லருக்கும் ஒரு இணைப்பு உண்டு.

கிரான்ட்டின் "The Passing Of The Great Race" என்ற புத்தகம் மிகப் பிரபலமான ஒன்று. இதில், வெள்ளையர்களை இயற்கை உயர்ந்த இனத்தவராக உருவாக்கியிருப்பதால் அவர்கள் தாழ்ந்த நிலை மனிதர்களோடு சேர்ந்து தங்களின் தனித்துவத்தை இழந்துவிடக்கூடாது என்று வாதாடினார் கிரான்ட். இந்த புத்தகம் ஜெர்மன் மொழியில் 1930-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட போது, இந்த புத்தகத்தை பாராட்டி கிராண்டிற்கு ஒரு கடிதம் வந்தது. எழுதியவர் வேறு யாருமல்ல, அடால்ப் ஹிட்லர். இந்த புத்தகத்தை தன்னுடைய பைபிள் என்று குறிப்பிட்டிருந்தார் ஹிட்லர்.

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் தானே ஹிட்லர்?? உயர்ந்த தன்னுடைய இனம், தாழ்ந்த இனத்தோடு சேர்ந்தால், இயற்கையின் ஆயிரமாயிர ஆண்டு கால உழைப்பு வீணாகிவிடும் என்று சொன்னவர் தானே அவர்?

2. இவ்வாண்டின் துவக்கத்தில் (Feb, 2011), Current Anthropology ஆய்விதழில் வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரை, ஆரம்ப கால மனிதர்களுக்கும் இக்கால மனிதர்களுக்கும் அதிக அளவில் வேறுபாடுகள் இல்லை என்று கூறியது. அதாவது, கற்கால மனிதர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்றும், பின்னர் வந்தவர்கள் அறிவில் சிறந்தவர்கள் என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா, அது தவறென்று கூறியது அந்த ஆய்வுக்கட்டுரை. மனிதன் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றானாம்.

3. இம்மாத துவக்கத்தில் (6th Oct 2011), Nature ஆய்விதழில் வெளிவந்த ஒரு புத்தக விமர்சனத்தில், Nature ஆய்விதழின் சீனியர் எடிட்டரான ஹென்றி ஜீ, மனித பரிணாம படத்தை முட்டாள்தனமானது (tosh) என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, குரங்கிலிருந்து சிறுகச் சிறுக மனிதன் வருவதாக படம் பார்த்திருப்போமே, அந்த படத்தை தான் முட்டாள்தனமானது என்று குறிப்பிடுகின்றார் ஹென்றி ஜீ.



பரிணாம கோட்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், கூடிய விரைவில் முழுவதுமாக அது ஒழிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...
   
My Sincere thanks to:
1. Channel 4.
2. Mail Online.
3. Phillips V. Bradford

References: 
1. Caged in the human zoo: The shocking story of the young pygmy warrior put on show in a monkey house - and how he fuelled Hitler's twisted beliefs - Mail Online, 31st October 2009. link
2. The Human Zoo: Science's Dirty Secret - Channel 4 documentary. link.
3. The Human Zoo: Science's Dirty Secret (p1) - Youtube. link
4. Ota Benga (ca. 1883–1916) - Encyclopedia Virginia. link
5. Ota Benga: The Pygmy Who Was Caged in the Bronx Zoo's Monkey House - Environmental graffiti. link
6. The Scandal at the Zoo - The New York Times, 6th August 2006. link
7. Ota Benga's Life in Africa, Capture, and Journey to America - Phillips V. Bradford. link 
8. The Pygmy in the Zoo - concentric.net. link
9. Ota Benga - Wikipedia. link
10. Are Pygmies really human? - The Straight Dope, 20th Feb 2004. link
11. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 - Adolf Hitler
12. The Human Zoo:Science's Dirty Secret - Channel 4 Pdf documents. link
13. Human Zoo, Pygmy peoples, Madisan Grant, William Temple Hornaday, Louisiana Purchase Exposition, John McGee, Bronx Zoo - Wikipedia.
14. Earliest humans not so different from us, research suggests - 14th Feb 2011, Physorg.com. link
15. Palaeoanthropology: Craniums with clout - Nature 478, 34 (06 October 2011) doi:10.1038/478034a. link
16. Henry Gee in Nature: "We know that, as a depiction of evolution, this line-up is tosh. Yet we cling to it." - Uncommon Descent, 6th December 2011. link
17. Prejudices in ideas about human evolution - arn.org, 10th Oct, 2011. link
நன்றி:
ஆஷிக் அஹ்மத் அ.

Engr.Sulthan

__._,_.___
Recent Activity:
    .

    __,_._,___

    Fwd: [saharatamil] 'என் மகள்களின் மூன்று கேள்விகள்'



    ---------- Forwarded message ----------
    From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
    Date: 2011/11/30
    Subject: [saharatamil] 'என் மகள்களின் மூன்று கேள்விகள்'
    To:


     

    'என் மகள்களின் மூன்று கேள்விகள்'



    நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

    இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது.
    லாரன் பூத் (Lauren Booth) - அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.

    இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள்.

    அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய அந்த நிகழ்வுதான் காரணம்.

    தற்போதைய காலக்கட்டத்தில், இஸ்லாமை தழுவும் பலரும், குர்ஆனை முழுமையாக படித்து, பலவித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்தான் தழுவுகின்றனர்.

    ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறுவிதமானது. 

    இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைதான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்து, தானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக்கொண்டவர் இவர். பின்னர்தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.

    இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம்பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷா அல்லாஹ்.   

    ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக்கொள்வாராம்,
    Please God, என் அம்மாவையும், அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்க வை.
    டீனேஜ் பருவத்தின்போது பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டாமென்ற முடிவுக்கு வந்துவிட்டார்,
    வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம்தான் அவரை கொன்றோம்' என்று
    சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.
    ஒன்று, அவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவது, அவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை.  
    9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடங்கங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.

    பிறகு, சில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு, மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல்முறையாக மேற்குகரைக்கு சென்றார்.
    டெல் அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்கவிடாமல் என்னை திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.   
    சுமார் ஐந்து நாட்கள் மேற்குகரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந்தோட ஆரம்பித்தன.
    என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக்கொண்டார்கள்?. என்னிடம் பரிவோடு கூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது. 
    இஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிர, இஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மது, பார்ட்டிகள் என வழக்கம்போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.

    2008-ல் மறுபடியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின்போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

    சில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்கு, இஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

    தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒருநாள், இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி.

    "மன்னிக்கவும்" என்று கூறி தொடர்ந்த அவர் "உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப்படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது" என்று கூறி லாரனை சமாதானப்படுத்த தொடங்கினார்.

    பின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்குகரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வரவேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள்.

    ஆனால், திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்தபோது, இவரது ஆவணங்களை கிழித்தெறிந்து, இவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.

    இதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.
    கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும், இரண்டு குழந்தைகளையும் பார்க்கவில்லை இந்த சகோதரி. ஆனால், இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டு, என்னுடன் அழுதுக்கொண்டு, என்னை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை. 
    பாலஸ்தீனியர்களின் அன்பும், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும், இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன்,
    இப்போது அரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை. 
    ரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள்.

    பதினாறு உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங்கோபம். யார் மீது தெரியுமா?...முஸ்லிம்களின் கடவுள் மீது....ஏன்?
    இவர்களுக்கே சிறிதளவுதான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா? நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர்தான்.  
    ஆனால், அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும்விட தாங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதாகவும், அதனால், இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர்.

    அவ்வளவுதான்.....

    அவர்களின் அன்பும், இஸ்லாம் சொல்லியப்படி வாழ்ந்துவரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறிவிட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.
    'இதுதான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழுமனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.
    இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்து வருமென்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார் லாரன்.

    பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதே, தம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசைதிருப்பத்தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.


    மேற்சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் லாரன் பூத்.

    இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டுவரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதிவிலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்கவழக்கங்களை விட்டொழித்துவிட்டார் சகோதரி லாரன் பூத்.

    "எனக்கு புரியத்தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.

    இஸ்லாமை ஏற்றுக்கொள்ள நான் தயாரா? என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்? என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள நான் தயாரா? - இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

    ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டுவிட்டேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்வது எளிதாகவே இருந்தது.

    ஆம், இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் "நீங்கள் குர்ஆனை எவ்வளவு படித்திருக்கின்றீர்கள்?" என்று. நான் கூறுவேன், சுமார் நூறு பக்கங்கள் என்று.

    இதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ்நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்தவரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடுபடுகின்றேன். இது வாரப்பத்திரிகை அல்ல.

    அரபி மொழி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன். 

    By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரை, ஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான். 

    இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள்.

    முகத்தை மூடும்விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். ஆனால், இஸ்லாம் அதனை வலியுறுத்தவில்லை என்பது என்னுடைய புரிதல்.

    என் மனமாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

    என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன்.

    இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகும் என் நட்பு வட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்தவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.
    • இஸ்லாம் உன்னை மாற்றிவிடுமா?
    • நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா?
    • நாம் மது அருந்த வெளியே செல்லலாமா?

    முதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'ஆம்' என்பது. கடைசி கேள்விக்கான பதில், ஒரு பெரிய 'NO'. 

    என் அம்மாவை பொருத்தவரை, என்னுடைய மகிழ்ச்சிதான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம் கூறியபோது, 'அந்த மார்க்கத்திற்கா மாறினாய்?, நீ புத்தமதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்' என்று கூறினார். இப்போது புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

    மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. I simply don't want to.

    மறுமணம் குறித்து சிந்திக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமணமுறிவிலிருந்து தற்போது மீண்டுக்கொண்டிருக்கின்றேன். விவாகரத்து நடந்துக்கொண்டிருக்கின்றது.

    நேரம் வரும்போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக்கொண்ட மார்க்கதிற்கேற்ப, என்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும்.

    என்னிடம் பலரும் கேட்கின்றார்கள், 'உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா?' என்று.

    எனக்கு தெரியவில்லை. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.

    ஆனால், என்னுடைய மனமாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் காட்டிய அணுகுமுறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், 'Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்'.

    சொல்ல ஆரம்பித்தேன். 'நான் இப்போது முஸ்லிம்'. 

    இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக்கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகு, என் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், 'நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்'.  

    ஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெக்ஸ் ஆரம்பித்தாள், 'இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா?'

    என்னுடைய பதில்: 'இல்லை'. 

    'இனியும் புகைபிடிப்பீர்களா?' 

    புகைபிடிப்பது ஹராம் இல்லை (??). எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.   

    அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது. 

    'தற்போது முஸ்லிமாகிவிட்டதாக கூறுகின்றீர்கள், இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா?'

    என்ன???????

    இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும்விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று.  

    'இப்போது நான் முஸ்லிம்' , தொடர்ந்தேன், 'இனியும் அப்படி உடையணிய மாட்டேன்'. 

    'நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்' என்று கூறி ஆரவாரம் செய்துவிட்டு விளையாட சென்றுவிட்டார்கள். 

    நானும் சொல்லிக்கொண்டேன், 'நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்'."

    சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்து, இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.

    டோனி பிளேர், தான் குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும், தான் இறைநம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக...ஆமீன்.  

    Please Note:
    இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.

    அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

    Sr. Lauren Brown's Official Website:
    1. http://www.laurenbooth.co.uk. link

    References:
    1. Lauren Booth explains why she feel in love with Islam - news.com.au. link
    2. Lauren Booth's Spiritual Journey to Islam - The American Muslim. link

    நன்றி:
    ஆஷிக் அஹ்மத் அ. 
    ehirkkural.com

    Engr.Sulthan

    __._,_.___
    Recent Activity:
      .

      __,_._,___

      நேரமில்லை” - ஓர் இஸ்லாமியப் பார்வை!



      ---------- Forwarded message ----------
      From: Muhammad shahjahan <md_shahjahan2001@yahoo.com>
      Date: 2011/11/28
      Subject: [TMMKGULF] "நேரமில்லை" - ஓர் இஸ்லாமியப் பார்வை!
      To: mohamed shahjahan <md.shahjahan2001@gmail.com>


       

       

      "நேரமில்லை" – ஓர் இஸ்லாமியப் பார்வை!


      அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
      நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!
      நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் வகுப்புகள், பின்னர் ஓரிரு மணி நேரம் விளையாட்டு என்று அவனுடைய இளம்பருவத்தின் வயது கழிகின்றது. ஓரளவு மார்க்கப்பற்றுள்ள சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் காலையிலோ அல்லது பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வந்த பின்னர் மாலையிலோ அல்-குர்ஆனை (பொருளறியாமல்) ஓதுவதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை பயில்வதற்கும் அனுப்புகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை செய்வதில்லை!
      முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஒரு சில கல்விக்கூடங்களிலே உலகக் கல்வியுடன் சேர்த்து இஸ்லாத்தின் அடிப்படைகள் சிலவற்றையும் சேர்த்து கற்றுத் தருகின்றனர். இவ்வாறு மார்க்கத்தின் அடிப்படையை சிறுபிராயத்திலேயே கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் மிக மிக அரிதானதாகவே இருக்கின்றது. ஏன் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலே கூட மேலை நாட்டின் நாகரீகத்தைப் பின்பற்றி அந்நிறுவனங்களிலே படிக்கின்ற குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் பெற்றோர் தனிப்பட்ட முறையில் அக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தாலே தவிர, அந்தப் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவு என்பதே இல்லாமல் போகின்றது.
      இதைவிட வேதனை என்னவென்றால், சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் நடத்தப்படுகின்ற 'முஸ்லிம் சிறுபாண்மையின' பள்ளிக் கூடங்களிலே வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுவதற்கு கூட வாய்ப்புத் தராமல் பள்ளி நேரங்களை அமைத்திருக்கின்றார்கள். மதிய உணவுக்காக விடப்படுகின்ற சொற்ப இடைவெளி நேரத்தில் மதிய உணவருந்தினால் ஜூம்ஆவுக்குச் செல்ல இயலாது; ஜூம்ஆவுக்குச் சென்றால் மதிய உணவருந்த முடியாமல் பட்டினியாக இருக்க வேண்டியது தான்!
      ஜூம்ஆவிற்கே இந்த நிலை என்றால் மற்ற நேரத் தொழுகைகளைப் பற்றி பேசவே தேவையில்லை!
      இந்தச் சூழ்நிலையில் மார்க்க அறிவு அறவேயில்லாத அல்லது போதிய மார்க்க அறிவில்லாமல் வளர்க்கப்படுகின்ற அந்த சிறுவன் வாலிப பருமடைந்து கல்லூரிக்குச் சென்றால் அவன் சேருகின்ற கல்லூரியைப் பொறுத்து அவன் சிறுபிராயத்தில் நடைபெற்ற அதே நிகழ்வு ஏற்படுகின்றது.
      சிறுபாண்மையினரால் நடத்தப்படுகின்ற ஒருசில கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்கள் தொழுவதற்காக பள்ளிவாயில்கள் போன்றவை கட்டித் தரப்பட்டிருந்தாலும் கல்வித் தரம், கல்வி நிறுவனத்தின் மதிப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நம் பெரும்பாண்மையான முஸ்லிம் மாணவர்கள் விரும்புவது என்னவோ மாற்று மதத்தவர்களால் நடத்தப்படும் இஸ்லாமிய சூழல்களில்லாத கல்வி நிறுவனங்களைத் தான்! எனவே இங்கேயும் அந்த மாணவர்களால் இஸ்லாத்தைப் பற்றி பயில்வதற்கு வாய்ப்பு குறைந்து விடுகின்றது.
      அவர்கள் படிப்பை முடித்தவுடன் மூஸ்லிமாக பிறந்த ஒரே காரணத்திற்காக அவர்களுக்குத் தகுந்த வேலை கிடைப்பது என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. அப்படியே ஒருவழியாக வேலை கிடைத்துவிட்டால் அந்த வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக அரும்பாடுபட்டு உழைத்து தம் மேலதிகாரிகளை திருப்திபடுத்த வேண்டியதிருக்கின்றது.
      இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து ஒருவழியாக நல்ல வேலையில் செட்டில் ஆனவுடன் திருமணம்! பிறகு சந்தோசமான குடும்ப வாழ்க்கை, குழந்தைகள்; பிறகு அக்குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி என்று ஹாஸ்பிடல் அலைச்சல்; பிறகு அக்குழந்தைகளை பள்ளிக்கூடம் சேர்த்து நம்மைப் போலவே அக்குழந்தைகளையும் நல்லமுறையில் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும்!
      அண்டை வீட்டார்களெல்லாம் புதிய சொகுசு வீடு கட்டி வசதியாக வாழ்வது போல் நாமும் புதிய பங்களா கட்டி நல்ல முறையில் வாழ வேண்டும். இதற்காக இரவு, பகல் பாராமல், நேரம் காலம் பார்க்காமல் பகுதி நேர ஊழியம் கூட பார்த்து பொருள் ஈட்ட வேண்டும்! அதற்கு நம் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் பரவாயில்லை! ரிடையர்ட் ஆனவுடன் அமைதியான முறையில் வாழவேண்டும்!
      இவ்வாறாக ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்க்கை அலுவலகம், வீடு, மனைவி மக்களை கவனிப்பது என்று நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. அலுவலக நேரம் போக மீதமுள்ள நேரங்கள் டீ.வி, நியூஸ், இமெயில், இன்டர்நெட் பிரவுசிங் ஆகியவற்றுக்கே போதவில்லை!
      குழந்தைகள் பருவ வயதையடைந்து பள்ளிப்பருவத்தின் இறுதியை அடைந்துவிட்டால் அவர்களை நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரி அல்லது பயன்தரும் படிப்பைத் தருகின்ற பிற நல்லக் கல்லூரிகளில் சேர்ப்பதற்காக அவர்களின் படிப்பின் மீது நமது நேரங்களைச் செலவிட்டு அவர்கள் நன்றாக படிக்கின்றார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பின்னர் அவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அதிகமாக கேபிடேசன் ஃபீஸ் கட்ட வேண்டும்; அதற்காக கடினமாக உழைத்து அதிக பொருளீட்ட வேண்டும்.
      ஒருவழியாக அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில் அமர்ந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்வித்து அழகுபார்க்க வேண்டும். பிறகு பேரக்குழந்தைகள், அவர்களோடு கொஞ்சுவது, அகமகிழ்வது அப்பப்பா! வாழ்க்கையிலே நேரமே போதவில்லை!!
      நீங்களும் இந்த சராசரி முஸ்லிமின் வட்த்திலிலுள்ளவரா! அப்படியாயின் இந்தக் கட்டுரை உங்களுக்களுக்காகத் தான். தொடர்ந்து வாசியுங்கள்!
      இந்த சராசரி முஸ்லிமிடம் போய் தொழுகை, மார்க்க கல்வியைக் கற்பது பற்றிப் பேசினால் அவர்களின் உடனடி பதில் 'நேரமில்லை' என்பது நாம் சொல்லித் தான் தெரிய வேண்டு மென்பதில்லை!
      அன்பு சகோதர, சகோதரிகளே!
      நாம் ஒரு பேருண்மையை மறந்து விட்டோம்! ஆம் சகோதர, சகோதரிகளே! அது தான் இறைவன் நம்மைப் படைத்ததன் நோக்கம்! இறைவன் நம்மை எதற்காகப் படைத்தான்? எதற்காக இப்பூமியில் வசிக்கின்றோம்?  வேலை செய்வது, சாப்பிடுவது, குடும்ப வாழ்வில் ஈடுபடுவது, பிள்ளைக் குட்டிகளுடன் மகிழ்வாக இருப்பது, செல்வம் சேர்ப்பது, காலமெல்லாம் உழைத்து சிறுக, சிறுக பொருள் சேர்த்து வீடு கட்டுவது இதுதான் இறைவன் நம்மைப் படைத்ததன் நோக்கமா?  இல்லை சகோதர, சகோதரிகளே! நாம் படைக்கப்பட்டதன் உண்ணத நோக்கம் இதுவல்ல!
      மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை!
      அல்லாஹ் கூறுகின்றான்:
      "இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை" (அல்குர்ஆன் 51:56)
      இங்கு நம்மில் சிலருக்கு ஒரு ஐயம் ஏற்படலாம்! மனிதப் படைப்பின் நோக்கம் இறைவனை வழிபடுவது மட்டுமென்றிருந்தால் நாம் எவ்வாறு உண்பது, உறங்குவது, குடும்ப வாழ்வில் ஈடுபடுவது போன்ற செயல்களைச் செய்ய இயலும் என்ற சந்தேகம் எழலாம்!
      இதுவும் இஸ்லாத்தைப் பற்றிய போதிய தெளிவின்மையால் ஏற்படுவதாகும். "இபாதத் – வணக்கம்" என்பது விரிந்த பொருடைய பதமாகும். சுருங்க கூறுவதென்றால், 'அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் கட்டளையிட்ட ஏவல்-விலக்கல்களை ஒருவர் முறையாகப் பேணி நடந்தால்' அதுவே இபாதத்-வணக்கம்' ஆகும். மற்றொரு வகையில் கூறுவதென்றால் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை இஸ்லாம் காட்டித் தந்த நெறிமுறையில் அமைத்துக் கொள்வாரேயானால் அதுவே வணக்கமாகும்.
      அடுத்தது தொழுகை! நாம் திருமறையை எடுத்துப் படித்தோமென்றால் அதில் பல இடங்களில் தொழுகையைப் பற்றியும் ஜக்காத் பற்றியும் இறைவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருப்பதைக் காணலாம். அந்த அளவிற்கு தொழுகை இஸ்லாத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
      ஒரு முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் உள்ள வித்தியாசமே தொழுகை தான் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்.
      முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)
      "நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்" (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
      இனி தொழுகையை விடுபவர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கையைப் பார்ப்போம்!
      நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்:
      'உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?' (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: 'தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. 'அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. '(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். 'இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். 'உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்' எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)
      "நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது" (அல்-குர்ஆன் 4:103)
      ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)
      "இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்." (அல்-குர்ஆன் 107:4-5)
      மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்:
      அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      "மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)
      எனவே அலுவலக வேலையின் காரணமாகவோ அல்லது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் காரணமாகவோ "நேரம் கிடைக்கவில்லை! அதனால் தொழவில்லை" என்ற கூற்று அடிப்படையற்ற இஸ்லாத்திற்கு முரணான வாதமாகும் என்பதையும் மனிதன் படைக்கப்பட்ட முதல் நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத்தான் என்பதையும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
      தொழுகைக்கு கூட அனுமதியில்லாத இடங்களில் வேலை செய்வதைப் பற்றியும் நாம் மறுபரிசீலனை செய்து இஸ்லாமிய சூழல் நிறைந்த வேலையில் சேருவதற்கு நம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் நமது பிரதான கடமையாகிய தொழுகையை விட்டுவிடக்கூடாது.
      முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையில் உள்ள வித்தியாசமே தொழுகை என்றிருப்பதால் அத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு எங்கு வசதிப்படுமோ அவ்விடத்தை நோக்கி அல்லது தொழுகைக்கு இடையூறு ஏற்படுத்தாத நிறுவனம் எதுவோ அதில் சேர்ந்து நம்முடைய பணியினை அமைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் இறைவனின் இப்பூமியோ விசாலமானது! இறை மறுப்பாளர்களின் சூழலில் நாம் விரும்பி சேர்ந்துக் கொண்டு பிறகு அங்கு இறைவணக்கத்திற்கு நேரம் கிடைக்கவில்லை அல்லது அவர்கள் எங்களை தொழுவதற்கு அனுமதிப்பதில்லை என்பது அறிவுடைய வாதமாகாது! மாறாக நஷ்டத்திற்குள்ளானதுமாகும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.
      அல்லாஹ் கூறுகின்றான்:
      "(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது,
      'நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?' என்று கேட்பார்கள்.
      (அதற்கவர்கள்) 'நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்' என்று கூறுவார்கள்.
      அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?' என (மலக்குகள்) கேட்பார்கள்;
      எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர – ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்" (அல்-குர்ஆன் 4:97-98)
      அடுத்ததாக, 'மனிதப் படைப்பின் நோக்கம் இறைவனை வணங்குவதே' என்றிருப்பதால் அவன் தன் வாழ்வை இறைவனை வணங்குவதற்காகவே அமைத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். அதாவது அவன் தன்வாழ்வை இஸ்லாமிய வாழ்வு நெறியில் அமைத்துக்கொள்வது!
      இஸ்லாமிய வாழ்வு நெறி என்றால் என்ன? எவை எவை அவசியமானவை? எவை எவற்றை அவசியமாக நிறைவேற்ற வேண்டும்? எவை எவற்றை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் தண்டணை உண்டு? எந்தெந்த காரியங்களைச் செய்தால் ஒருவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிடுவான்? எந்தெந்த காரியங்களைச் செய்தால் மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் செல்ல நேரிடும்? (நவூதுபில்லாஹ்), எந்தெந்த காரியங்களைச் செய்தால் நாம் இரவு, பகல் பாராமல் கண்விழித்து கஷ்டப்பட்டுச் செய்த தொழுகை, காலமெல்லாம் உழைத்துச் சேர்த்த செல்வங்களையெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் ஜக்காத் கொடுத்தது, பகலெல்லாம் பட்டினி கிடந்து நோற்ற நோன்புகள் போன்ற அமல்கள் எல்லாம் மறுமையில் பரத்தப்பட்டப் புழுதியைப் போன்று எவ்வித பலன்களும் இல்லாமல் பாழாகிவிடும்?  (நவூதுபில்லாஹ்) எந்தெந்த காரியங்களைச் செய்தால் மறுமையில் இறைவனுக்கு உகந்த அவனுடைய நல்லடியார்களின் கூட்டத்தினருடன் சுவர்க்கச் சோலையில் நுழைவோம்? எந்தெந்த காரியங்களைச் செய்தால் நரகத்தின் அடிப்பாதாளத்திற்கு முகம் குப்புறத் தள்ளப்படுவோம்? (நவூதுபில்லாஹ்)
      இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்வது எப்படி?
      அன்பு சகோதர, சகோதரிகளே!
      இவ்வுலக வாழ்க்கையில் சொகுசான வீடு, கார் மற்றும் இன்னபிற வாழ்க்கை வசதிகளுடன் வாழ்கின்ற மற்றவர்களைப் போல நாமும் நமது பிள்ளைகளும் வாழ வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் உண்டு! பொருளாதார வசதிகளைப் பெருக்கிக் கொள்வதையோ அல்லது அதற்கு வழிவகுக்கின்ற இவ்வுலகக் கல்வியைக் கற்பதையோ இஸ்லாம் ஒரு போதும் தடைசெய்யவில்லை! மாறாக இஸ்லாம் கல்வி கற்பதை ஊக்குவிக்கின்றது.
      ஒரு முஸ்லிமின் வெற்றி என்பது மறுமையில் சுவர்க்கத்தை அடைவதாகும்! இதுவே மகத்தான வெற்றி! மறுமை வெற்றியை புறந்தள்ளியவர்களாக மறுமைக்குப் பலனளிக்காத இவ்வுலகக் கல்வியை மட்டும் பலவருடங்கள் பயின்று இவ்வுலகில் கோடி கோடியாக சம்பாதித்து இவ்வுலக வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தால் நிச்சயமாக அது நம்முடைய வெற்றியல்ல! மாறாக அது நம்மை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்தில் ஆழ்த்திவிடும். அல்லாஹ் நம்மைக் பாதுகாப்பானாகவும்.
      அல்லாஹ் கூறுகின்றான்:
      "(நபியே!) நீர் கூறுவீராக: 'இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது" (அல்-குர்ஆன் 4:77)
      அழியக்கூடிய இவ்வுலகத்தின் அற்ப சுகங்களை அடைவதற்காக அழிவே இல்லாத மறுமை வாழ்வை புறந்தள்ளியவர்களாக இவ்வுலகக் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து மார்க்கக் கல்வியைப் புறக்கணித்தோமேன்றால் அல்லாஹ்வின் எச்சரிக்கையை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.
      அல்லாஹ் கூறுகின்றான்:
      "எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். எனவே, எவன் வரம்பை மீறினானோ- இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்" (அல்-குர்ஆன் 79:34-39)
      எனவே நாம் இறைவனின் வழிகாட்டுதலின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு மார்க்கக் கல்வியைக் கற்பது அவசியமாகும். இம்மையில் வெற்றிபெற இவ்வுலகக் கல்வி எந்த அளவிற்கு முக்கியமோ அது போல மறுமையில் வெற்றி பெற மார்க்கக் கல்வியை கற்பதும் அவசியமாகும். இதை முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீதும் நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியிருக்கிறார்கள்.
      "ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்" (திர்மிதி)
      எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைககளை பள்ளிக்கு அனுப்பி  ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் இவ்வுலகக் கல்வியைப் பயிற்றுவிக்கும் போது குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவழித்து மறுமைக்குப் பலனளிக்கக் கூடிய மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது அவசியமாகும்.  அடுத்து நம்முடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது எந்தப் பள்ளியில் தரமான கல்வியுடன் மறுமைக்குப் பலன்தரும் மார்க்கக் கல்வியையும் சேர்த்துக் கற்றுத் தருகிறார்கள் என்பதைப் பார்த்து சேர்க்க வேண்டும்.
      அடுத்து சமுதாய நலனில் அக்கரை உள்ள நமது சகோதர, சகோதரிகள் முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிகளின் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு குழந்தைகளுக்கு மார்க்கக்கல்வியை போதிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் உலகக் கல்வியில் சிறந்து விளங்குவதோடு அல்லாமல் மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் மார்க்க கல்வியையும் சேர்த்தே போதிக்கின்ற சிறந்த கல்வி நிறுவனங்களாக மாறுவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும். வசதியுடைய சகோதரர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இதுபோன்ற பள்ளிக்கூடங்கள் பலவற்றை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
      பன்னிரண்டாம் வகுப்பிலிருந்து வெளிவரும் ஒரு மாணவன் பொறியியல், மருத்துவம் போன்ற சிறந்த மேற்கல்விக்கு  தகுதியான சிறந்த மாணவனாக வெளிவருவதோடல்லாமல் குர்ஆன், ஹதீதுகள் மற்றும் இறைவன் நமக்கருளிய சட்டத்திட்டங்களின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அதை பிறருக்கு எடுத்துச் சொல்கின்ற அளவிற்கு சிறந்த ஆலிமாகவும் அவன் வெளிவர வேண்டும்.
      இது ஒன்றும் முடியாத காரியம் இல்லை! இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக சாத்தியமானதே! If there is a will, there is a way!
      இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது போன்ற கல்வி நிறுவனங்கள் பல வெற்றிகரமாக செயல்படுகின்றன. ஏன் இந்தியாவில் கூட டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இது போன்ற கல்வி நிறுவனத்தை துவக்கி தலைசிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கி வருகின்றார். எனவே நாமும் முயற்சித்தால் இன்ஷா அல்லாஹ் நமது வருங்கால சந்ததியினர் சிறந்த மார்க்க அறிவைப் பெற்ற ஆலிம்களாகவும் அதே சமயத்தில் சிறந்த பொறியியல் வல்லுனர்களாகவும், மருத்துவ மேதைகளாகவும் திகழ்வார்கள்.
      அடுத்ததாக நாம் நம்முடைய அலுவலக நேரம் போக மீதியுள்ள நேரங்களிலும், அலுவலக விடுமுறை நாட்களிலும் நமது குடும்பத்திற்காக நமது நேரத்தைச் செலவழித்தது போக எஞ்சியுள்ள நேரங்களை சினிமா, டீ.வி. சீரியல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களிலும் தேவையற்ற இன்டர்நெட் சாட்டிங், பிரவுசிங் போன்ற அத்தியாவசியமற்ற செயல்களில் நம்முடைய நேரத்தை வீணடிக்காமல் நமது மறுமை வாழ்விற்குப் பலன் தரக்கூடிய மார்க்க கல்வியை கற்பது, குர்ஆனை பொருளறிந்து ஓதுவதற்கு முயற்சிப்பது, குர்ஆனின் அரபி இலக்கணத்தைப் படிப்பது, பிறருக்கு குர்ஆனை கற்றுக்கொடுப்பது, மாற்றுமதத்தவர்களுக்கு இஸ்லாத்தைக் எடுத்துச் சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும்.
      ஏனெனில், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தை மற்றவர்களுக்குப் போதிப்பதை இறைவன் நம்மீது விதித்திருக்கின்றான்.
      "காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)." (அல் அஸ்ர் 103: 1-3).
      இவ்வசனத்தின் மூலம் நஷ்டத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்காக ஒருவருக்கொருவர் உபதேசம் செய்வது அவசியம் என்பதை உணரலாம்.
      எனென்றால் நம்முடைய ஒவ்வொரு மணித்துளி நேரத்திற்கும் அதை எந்த முறையில் செலவிட்டோம் என்பதை இறைவனிடம் கணக்குக்கூற கடமைப்பட்டுள்ளோம்.
      "வாழ்நாளை எப்படி கழித்தான்? வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்து, எவ்வழியில் செலவு செய்தான்? கற்றவைகளில் எதை செயல்படுத்தினான்? என ஐந்து விசயங்கள் பற்றி விசாரிக்கப்படாத வரை மறுமை நாளில் எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி); ஆதாரம்: திர்மிதி.
      டி.வி, சீரியல், அரட்டை அடிப்பது, வீண் விளையாட்டுகள் மற்றும் பிற பயனற்ற வழிகளில் தமது ஓய்வு நேரத்தைச் செலவழிப்பவர்கள் பின்வரும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை மீறியவர்களாவர்கள் என்பதையும் நாம் இங்கு நினைவூட்டுகின்றோம்.
      'ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)
      அன்பு சகோதர, சகோதரிகளே!
      'நேரம் பொன் போன்றது' – இது முதுமொழி! இஸ்லாத்தைப் பொறுத்தவரை இது உண்மைதான். ஒரே ஒரு முறை நமக்கு இவ்வுலக வாழ்வில் கிடைத்திருக்கின்ற இந்தப் பொன்னான நேரத்தை இறைவனுக்கு உவப்பான வழியில் நாம் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
      அல்லாஹ் அதற்குரிய மனவலிமையை நமக்குத் தந்து நம் அனைவரையும் அவனது நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.
      நன்றி: சுவனத்தென்றல்.காம்

      Engr.Sulthan
      __,_._,___

      --
      ~~~TMMKGULF வளைகுடா தமுமுக : tmmkgulf@googlegroups.com~~~
      வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!
      ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு.
      தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!
       
      இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      Fwd: |TMB| ஒரு ஹிந்து பிராமின் முஸ்லிம் ஆனதை அவரே கூரும் வீடியோ - A BRAHMIN CONVERTS TO MUSLIM VIDEO



      ---------- Forwarded message ----------
      From: Asalam SMT <asalamsmt@gmail.com>
      Date: 2011/11/20
      Subject: |TMB| ஒரு ஹிந்து பிராமின் முஸ்லிம் ஆனதை அவரே கூரும் வீடியோ - A BRAHMIN CONVERTS TO MUSLIM VIDEO
      To: TMB <tamilmuslimbrothers@googlegroups.com>





      From: Esa Mohiadeen <esa786@hotmail.com>
       


      நண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும்
       
       
      கிழே உள்ள லிங்கில் ஒரு பிராமின்  ஏன் முஸ்லிமாக மாறினேன் என அவரே சொல்லும் வீடியோ . கேளுங்கள் மற்றும் உங்கள் முஸ்லிம் , மற்ற முஸ்லிம் அல்லாத  நண்பர்களுக்கு அனுப்பி வையுங்கள். ,
       
       
      http://www.islamreligion.com/videos/2519/
       
       
      வஸ்ஸலாம்
      ஈஸா

      __._,_.___
      Recent Activity:
      *** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
      .

      __,_._,___

      --
      நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
       
      இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

      Fwd: |TMB| போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார் இஷ்ரத் ஜஹான்- எஸ்ஐடி அதிரடி அறிக்கை



      ---------- Forwarded message ----------
      From: Sahib Aleem <saleem@saudioger.com>
      Date: 2011/11/21
      Subject: |TMB| போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார் இஷ்ரத் ஜஹான்- எஸ்ஐடி அதிரடி அறிக்கை
      To: "tamilmuslimbrothers@googlegroups.com" <tamilmuslimbrothers@googlegroups.com>


      போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார் இஷ்ரத் ஜஹான்- எஸ்ஐடி அதிரடி அறிக்கை Newsletter

      Its Free!

      உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்

       

      திங்கள்கிழமை, நவம்பர் 21, 2011, 15:33 [IST]

      அகமதாபாத்: அகமதாபாத் அருகே இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டனர் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வுக் குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

      நரேந்திர மோடி அரசுக்கு இந்த அறிக்கை பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

      19 வயது கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான்
      , ஜாவேத் ஷேக் என்கிற பிரனீஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அகமதாபாத் அருகே குற்றப் பிரிவு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

      இதுகுறித்துக் கூறிய குஜராத் காவல்துறை
      , இந்த நால்வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல வந்த படையினர் என்றும் தெரிவித்தது.

      ஆனால் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரும் அப்பாவிகள் என்றும்
      , இவர்களை போலி என்கவுண்டரில் கொலை செய்துள்ளனர் என்றும் கூறி இஷ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர், பிரனீஷின் தந்தை கோபிநாத் பிள்ளை ஆகியோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.

      இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையையும் அது நேரடியாக கண்காணித்து வருகிறது.

      இந்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது
      , இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரும் கொல்லப்பட்டது நிஜமான என்கவுண்டரிலா அல்லது போலியான சம்பவமா என்பது குறித்து தனது இறுதி அறிக்கையை சமர்பபிக்குமாறு எஸ்ஐடிக்கு நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் அபிலாஷா குமாரி ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று எஸ்ஐடி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

      திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்

      அதில் இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்
      , இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று மரணமடையவில்லை. மாறாக அதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டு விட்டார். இது என்கவுண்டர் மரணம் அல்ல, மாறாக கொலையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

      புது வழக்கு தொடர உத்தரவு

      இதையடுத்து என்கவுண்டர் சம்பவத்தில் தொடர்பு கொண்ட அத்தனை போலீஸார் மீதும் 302வது செக்ஷன்படி புதிதாக வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையை யார் பதிவு செய்வது
      , யார் இந்த வழக்கை புலனாய்வு செய்வது என்பது குறித்து உயர்நீதிமன்றம் விவாதித்து முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மத்திய விசாரணை அமைப்பு ஒன்றிடம் ஒப்படைக்குமாறும் குஜராத் அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு சிபிஐ வசம் செல்லும் என்று தெரிகிறது.

      எஸ்ஐடியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற விவரங்களை உயர்நீதிமன்றம் வெளியிடவில்லை. அவை வெளியிடப்பட்டால் வழக்கு விசாரணையை அது பாதித்து விடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

      குஜராத் அரசு மீது முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் கடும் குற்றச்சாட்டு:

      இந் நிலையில் முன்னாள் குஜராத் டிஜிபி ஸ்ரீகுமார் கூறுகையில்
      , இஷ்ரத் ஜஹான் என்கவுண்டரில் மரணமடையவில்லை. அவர் முன்பே கொல்லப்பட்டு விட்டார். என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை ஒரு கொள்கையாகவே குஜராத் அரசு வைத்திருந்தது என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

      2002ம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் உச்சத்தில் இருந்தபோது
      , குஜராத் உளவுப் பிரிவின் தலைவராக இருந்தவர் ஸ்ரீகுமார். பின்னர் அவர் டிஜிபியானார்.

      அவர் கூறுகையில்
      , குஜராத் அரசின் போக்கு தற்போது அம்பலமாகியுள்ளது. இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று கொல்லப்படவில்லை என்ற வாதம் உண்மையாகியுள்ளது. 2002ல் நடந்த கலவரங்கள், போலீஸ் அடக்குமுறைகள், கொலைகள் உள்ளிட்டவற்றுக்கு குஜராத் அரசே காரணம் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்றார்.

      முன்பு ஒருமுறை அகமதாபாத்தில் ஸ்ரீகுமார் அளித்த பேட்டியின்போது
      , குஜராத் அரசு என்கவுண்டர் மூலம் கொலைகள் செய்வதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தது.

      2002ம் ஆண்டு கலவரத்தின்போது நான் அப்போதைய தலைமைச் செயலாளர் சுப்பா ராவிடம் பேசியபோது
      , என்னிடம் அவர் கூறுகையில், நாம் சிலரையாவது கொலை செய்தால்தான், குஜராத் அரசின்கொள்கை என்ன என்பது அனைவருக்கும் வலிமையாக புரியும் என்றார். அதற்கு நான் ஆட்சேபனை தெரிவித்தேன். அப்படிச் செய்தால், அது இந்திய அரசியல் சட்டம், 120 பி பிரிவின்படி அது சதிச் செயல் என்று அவருக்குச் சுட்டிக் காட்டினேன். ஆனால் குஜராத் அரசு என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை கொள்கையாகவை கடைப்பிடித்து வந்தது என்றார் அவர்.

         [ அனைத்து கருத்துக்களையும் படிக்க ]   [ கருத்தை எழுதுங்கள் ]   [ நண்பருக்கு அனுப்ப ]

      Newsletter

      Its Free!

      உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்

       

       

       

       

      S.N.ABDUL ALEEM,

       

      --
      நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
       
      இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.