நான் அவர்களுக்கு முன் கண்ணீரை மறைத்துக் கொண்டேன்!!!



---------- Forwarded message ----------
From: Shahul Askar <shaaskar@gmail.com>
Date: 2011/1/29
Subject: (TMP) நான் அவர்களுக்கு முன் கண்ணீரை மறைத்துக் கொண்டேன்!!!
To: madhavalayam-brothers@googlegroups.com, TAFAREG@yahoogroups.com, thiruvai@mail.com, tamil-islam@yahoogroups.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, contact@koothanallurmuslims.com, adiraivoice@gmail.com, adiraimanam@gmail.com, admin@palanibaba.in, ervadidargah@gmail.com, EASTADIRAI8@gmail.com, alamanmail@gmail.com, alhira.rafi@gmail.com, kabeerahamed14@yahoo.com, rkmmrahman@yahoo.com, mdniyas86@gmail.com, mewafiq@gmail.com, sdpidt@gmail.com, mailtopetti@gmail.com, k-tic-group-owner <K-Tic-group-owner@yahoogroups.com>, shafiq.aym@gmail.com



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
நான் அவர்களுக்கு முன் கண்ணீரை மறைத்துக் கொண்டேன்!!!

முன்னாள் பாதிரியார்-இத்ரீஸ் தௌபீக்

இது இங்கிலாந்தின் கிறிஸ்தவப் பாதிரியார் இத்ரீஸ் தௌபீக்கிற்கு நிகழ்ந்தது.

அவர், இங்கிலாந்திலுள்ள ஒரு பாடசாலையில் தனது மாணவர்களுக்கு அல்குர்ஆனை ஓதிக்காட்டினார். அதுதான் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான ஆரம்ப எட்டாக அமைந்தது. அவர் கெய்ரோவிலுள்ள இங்கிலாந்து தூதரகத்தில் ஒரு விரிவுரையை நிகழ்த்தியபோது கூறிய கருத்துக்கள்தான் இவை.

நான் ஒரு பாதிரியாராக இருந்து சில வருடங்களாக மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சியடைந்தேன். என்றாலும் என் ஆழ்மனதில் சந்தோஷம் இருக்கவில்லை. சில விஷயங்கள் பிழை என்பதை நான் உணர்ந்தேன். உண்மையில் அது இறைவனின் அருள்தான். சில சம்பவங்களும் தற்செயல் நிகழ்வுகளும் எனது வாழ்வை இஸ்லாத்தை நோக்கி வழிநடத்திவிட்டன.

தௌபீக்கின் வாழ்வில் நடந்த மற்றுமொரு முக்கியமான நிகழ்வு எகிப்தை நோக்கிய அவரது பயணமாகும். அவர் அதனைப் பற்றிக் கூறும்போது, நான் எகிப்தை பிரமிட்டுகள், ஒட்டகங்கள், மணல், பாம் மரங்கள் உள்ள ஒரு நாடாகத்தான் நினைத்திருந்தேன். நான் அங்கு சென்றடைந்தபோது மிகவும் ஆச்சரியமடைந்தேன். ஐரோப்பாவைப் போன்றே அங்கும் அழகான கடற்கரைகள் இருந்தன. கெய்ரோ நோக்கிய எனது பயணம் எனது வாழ்வில் நான் கழித்த மிகச் சிறந்த காலமாகும். இந்தப் பயணம்தான் எனது வாழ்க்கையில் முஸ்லிம்களை, இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய முதல் சந்தர்ப்பமாகும். எகிப்தியர்கள் சிறந்த, இனிமையான ஆனால், உறுதியான மக்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

எல்லா இங்கிலாந்து மக்களையும் போலவே இஸ்லாம் பற்றிய, முஸ்லிம்களைப் பற்றிய எனது எண்ணமும் சிறந்ததாக இருக்கவில்லை. நான் அவர்களை தற்கொலையாளிகளாகவும் போராடுபவர்களாகவுமே தொலைக்காட்சிகள் மூலம் அறிந்திருந்தேன். அதனால், இஸ்லாம் குழப்பங்கள் நிறைந்த மார்க்கம் என நான் விளங்கியிருந்தேன். என்றாலும், நான் கெய்ரோவில் இருந்தபோது இந்த மார்க்கம் மிக அழகானது என்பதை தெரிந்துக் கொண்டேன்.

சாதாரண மக்கள் தெருவில் வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள். அல்லாஹ்வை வணங்க வருமாறு பள்ளிவாசலிலிருந்து அழைப்பொலி கேட்டது. அவர்கள் உடனடியாக மிகுந்த நம்பிக்கையுடன் பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். அவர்கள் தொழுகின்றார்கள்; நோன்பு நோற்கின்றார்கள்; தர்மம் செய்கின்றார்கள்; மக்காவிற்கு செல்ல வேண்டும் என்ற கனவு அவர்களுக்கு இருக்கின்றது. இந்த உலக வாழ்வின் பின்னர் நிலையான சுவன வாழ்க்கை இருக்கின்றது என அவர்கள் நம்புகின்றார்கள்.

நான் இங்கிலாந்திற்குத் திரும்பியவுடன் எனது மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் பதவியை ராஜினாமாச் செய்தேன். இங்கிலாந்தின் கல்வித் திட்டத்திலுள்ள ஒரே ஒரு கட்டாயப் பாடம் சமயமாகும். நான் கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம், பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களைப் பற்றி கற்பிப்பவனாக இருந்தேன். எனவே, நான் ஒவ்வொரு நாளும் இந்த மதங்களைப் பற்றிக் கற்பிப்பதற்காக தயாராக வேண்டி யிருந்தது. எனது மாணவர்களில் அதிகமானவர்கள் அகதிகளான அரபு முஸ்லிம்களாவர். இன்னொரு வகையில் சொல்வதானால் இஸ்லாம் பற்றிக் கற்பிப்பது எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத் தந்தது.

குறிப்பாக, டீனேஜ் பருவத்தினர் மிகுந்த பிரச்சினைகளைக் கொண்டவர். ஆனால், எனது மாணவர்கள் ஒரு முஸ்லிம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருந்தார்கள். அவர்கள் தூய்மையானவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு நட்புணர்வு வளர்ந்திருந்தது. அவர்கள் ரமழான் காலத்தில் தொழுவதற்காக எனது வகுப்பறையைக் கேட்டார்கள். அதிrஷ்டவசமாக எனது வகுப்பறை மட்டுமே 'காrpeட்' விரிப்பிடப் பட்டதாக இருந்தது. எனவே, அவர்கள் ஒரு மாதகாலமாக தொழும்போது நான் வழக்கமாக அவர்களுக்குப் பின்னால் இருந்து அவர்களை அவதானித்து வந்தேன். நான் ஒரு முஸ்லிமாக இல்லாதபோதும் அவர்களோடு சேர்ந்து நோன்பு நோற்றேன்.

ஒரு தடவை வகுப்பில் நான் அல்குர்ஆனைப் பற்றிக் கற்பிக்கும்போது இந்த வசனத்தை ஓதினேன்.

"அவர்கள் தூதருக்கு இறக்கப் பட்டவற்றைச் செவிமடுக்கும் போது அவர்களது கண்களி லிருந்து கண்ணீர் வழிந்தோடும். அவர்கள் சத்தியத்தை அறிந்து கொண்டார்கள்." (மாஇதா: 83)

எனது கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்தது. நான் அதனை மாணவர்களுக்குத் தெரியாமல் அதனை மறைத்துக் கொள்வதற்கு முயற்சித்தேன். எனது வாழ்க்கையின் இன்னுமொரு முக்கியமான நிகழ்வுதான் 2001 செப்டம்பர் 11 தாக்குதலாகும். அதற்கு அடுத்த தினம் நிலத்தின் கீழுள்ள ஓர் அறையில் நான் இருந்தேன். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அமெரிக்காவில் போன்று இங்கிலாந்திலும் தாக்குதல் நடக்குமோ என்ற பயம் எனக்கிருந்தது. அதேநேரம் மேற்கத்தியர்கள் இந்த மார்க்கத்தினால் மிகவும் பயந்திருந்தனர். முஸ்லிம்கள் பயங்கர வாதத்தைத் தோற்றுவிப்பதற்காக உருவாகியுள்ளனர் என்று அவர்கள் நினைத்தனர்.

எவ்வாறிருந்தபோதிலும் முஸ்லிம்களுடனான எனது முன்னைய அனுபவங்கள் என்னை வேறொரு வித்தியாசமானக் கோணத்தில் சிந்திப்பதற்கு இட்டுச் சென்றது. இஸ்லாம் ஏன்? நாம் ஏன் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகக் காண்கின்றோம். அவர்களுக்கு நடப்பதைப் போன்று கிறிஸ்தவர்களுக்கும் நடந்தால் கிறிஸ்தவர்களும் அதே வழியில் செல்வார்களா?

ஒரு நாள், நான் லண்டனிலுள்ள மிகப் பெரிய பள்ளிவாசலுக்கு இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காகச் சென்றேன். நான் லண்டன் மத்திய பள்ளிவாசலுக்குச் சென்றபோது அங்கு யூசுப் இஸ்லாம் இருந்தார் (இஸ்லாத்தைத் தழுவிய முன்னாள் பாப்பிசைப் பாடகர்). அவரைச் சுற்றி வட்டமாக சிலர் அமர்ந்திருந்தார்கள். அவர் அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம், நீங்கள் ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு என்ன செய்கின்றீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கவர் இவ்வாறு கூறினார். ஒரு முஸ்லிம் இறைவன் ஒருவன் என்பதை நம்ப வேண்டும். ஒரு நாளில் ஐந்து வேளைகள் தொழ வேண்டும். ரமழானில் நோன்பு பிடிக்க வேண்டும். நான் அவர் பேசும்போது குறுக்கிட்டு, இவை அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். ரமழானில் நோன்பும் பிடித்தேன் என்று கூறினேன்.

அவர் என்னிடம் அப்படியானால் எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? ஏன் பின்வாங்குகின்றீர்கள்? என்றார்.

நான், இல்லை. எனக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் உத்தேசமில்லை என்று கூறினேன். அப்போது தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் எழுந்து சென்று தொழுவதற்காக வரிசையில் நின்றார்கள். நான் பின்னால் அமர்ந்திருந்தேன். நான் அழுதேன். தொடர்ந்தும் அழுதுகொண்டிருந்தேன். நான் ஏன் முட்டாளாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன் என என்னிடமே நான் கேட்டுக் கொண்டேன்.

அவர்கள் தொழுகையை நிறைவு செய்த பின்னர் நான் யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.

அவரிடம் நான் இஸ்லாத்தை ஏற்பதற்காக சொல்ல வேண்டிய வார்த்தைகளைக் கற்றுத் தருமாறு கேட்டேன். அவர் எனக்கு அதன் கருத்தை ஆங்கிலத்தில் தெளிவு படுத்தினார். பின்னர் அவர் அரபு மொழியில் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்று கூறினார். நானும் அதனையே கூறினேன். இதனை கூறியபோது தௌபீக்கின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

பின்னர், தௌபீக் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் தொடர்பான ஒரு புத்தகத்தை எழுதினார். அதில் அவர் இஸ்லாத்தை பலரும் சகிப்புத்தன்மையுள்ள மார்க்கம்; அது தீவிரவாதத்தின் மார்க்கமல்ல என்று கூறுகின்றனர். ஆனால், அதனைத் தெளிவுபடுத்த ஒருவரும் முயற்சிக்கவில்லை. எனவே, நான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் பற்றி முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக ஒரு புத்தகத்தை எழுதத்தீர்மானித்தேன். நான் அதில் இஸ்லாம் ஓர் அழகான மார்க்கம் என்பதையும் அது நிறைய வரப்பிரசாதங்களைக் கொண்டிருக்கின்றது என்பதையும் மக்களுக்குச் சொல்ல முயற்சித்தேன்.

தௌபீக், நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றார். அந்தப் புத்தகம் அவர் பற்றி எழுதப்பட்டுள்ள ஏனைய அனைத்துப் புத்தகங்களை விடவும் வித்தியாசமானதாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவி க்கின்றார். அவர், இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தை உலகத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கு மிகச் சிறந்ததும் மிக விரைவானதுமான வழிமுறை, யதார்த்த வாழ்வில் ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை தனது வாழ்க்கையில் சிறந்த முறையில் எடுத்து நடப்பதாகும் என்று கூறுகின்றார்.

 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
 
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
 

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

Fwd: (TMP) Scholarship from TN Govt - முஸ்லிம்களுக்கு அரசின் கல்வி உதவி! தவற விடாதீர்!!



---------- Forwarded message ----------
From: Shahul Askar <shaaskar@gmail.com>
Date: 2011/1/25
Subject: (TMP) Scholarship from TN Govt - முஸ்லிம்களுக்கு அரசின் கல்வி உதவி! தவற விடாதீர்!!
To: madhavalayam-brothers@googlegroups.com, TAFAREG@yahoogroups.com, thiruvai@mail.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, tamil-islam@yahoogroups.com, contact@koothanallurmuslims.com, alamanmail@gmail.com, ihwanali@gmail.com, shafiq.aym@gmail.com, paalaivanathoothu@gmail.com, vidialvelli@gmail.com, kabeerahamed14@yahoo.com


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....


---------- Forwarded message ----------
 

முஸ்லிம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்!

 

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .

இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது

 

 

1 - 10 வகுப்பு வரை

தகுதிகள் :
*
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*
குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
*
ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

பயன்கள் :
*
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
*
சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
*
விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
*
கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
*
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*
சாதி சான்றிதல் நகல் (xerox)
*
பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

 

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26


கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
*
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
*
பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

 

11, 12 , ITI, டிப்ளமோ, ஆசிரியர் பயிற்சி, பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு (Ph.D)


தகுதிகள் :
*
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*
குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
*
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30%
கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு

* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
*
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி


சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*
சாதி சான்றிதல்

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26


கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
*
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்

* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

 

தொழிற்படிப்புகள் ( Engineering )



தகுதிகள் :
*
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (
சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்

* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை

* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்

* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி


சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*
சாதி சான்றிதல்

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
*
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
*
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்


மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் : http://www.tn. gov.in/bcmbcmw/ welfschemes_ minorities. htm


 

 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
 
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
 

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் குற்றங்களுக்கு பலிகடாவான முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கு தயாராகும் மத்திய அரசு!!!



---------- Forwarded message ----------
From: Shahul Askar <shaaskar@gmail.com>
Date: 2011/1/25
Subject: (TMP) ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் குற்றங்களுக்கு பலிகடாவான முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கு தயாராகும் மத்திய அரசு!!!
To: madhavalayam-brothers@googlegroups.com, TAFAREG@yahoogroups.com, tamil-islam@yahoogroups.com, thiruvai@mail.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, adiraivoice@gmail.com, adiraimanam@gmail.com, admin@palanibaba.in, admin@satyamargam.com, alamanmail@gmail.com, afnaasmohamed@gmail.com, contact@koothanallurmuslims.com, k-tic-group-owner <K-Tic-group-owner@yahoogroups.com>, fromgn@googlegroups.com, mailtopetti@gmail.com, mdniyas86@gmail.com, paalaivanathoothu@gmail.com, vidialvelli@gmail.com, babarmasjid@gmail.com, shafiq.aym@gmail.com, mewafiq@gmail.com, tamilmuslimbrothers@googlegroups.com, tamilmuslimbrothers@gmail.com, ihwanali@gmail.com




அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
 

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் குற்றங்களுக்கு பலிகடாவான முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கு தயாராகும் மத்திய அரசு!!!

பாலைவனத் தூது
புதுடெல்லி,ஜன.24:இந்தியாவில் நடந்தேறிய பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் காரணம் என்பது நிரூபணமாகிவிட்ட சூழலில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளின் குற்றங்களுக்கு பலிகடாவாகி பல்வேறு கொடுமைகளையும், சித்திரவதைகளையும் அனுபவித்து சிறைக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் பயங்கரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு நிரபராதிகளாக நிரூபிக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் இளைஞர்களுக்கும் தேவையான அனைத்து சட்டரீதியான, பொருளாதரீதியிலான உதவிகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அப்பாவிகளான முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்து, அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ போன்ற சமுதாய அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய மலேகான், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் ஆகிய குண்டுவெடிப்புகளில் நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம்கள் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோருக்கு இதுவரை ஜாமீன் கூட கிடைக்கவில்லை. 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இத்தகைய குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைமையில் சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத் போன்ற பயங்கரவாத அமைப்புகள் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு லஷ்கர்-இ-தய்யிபா, இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு(சிமி), ஹர்கதுல் ஜிஹாத் அல் இஸ்லாமி போன்ற தடைச் செய்யப்பட்ட இயக்கங்கள் மீது குற்றம் சும்த்தப்பட்டன. பின்னர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் செயல்பட்டது ஹிந்துத்துவா அமைப்புகள்தான் என்பது ஹேமந்த் கர்காரே நடத்திய மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும், தற்போது ராஜஸ்தான் ஏ.டி.எஸ், சி.பி.ஐ, என்.ஐ.ஏ போன்ற புலனாய்வு ஏஜன்சிகள் நடத்திய விசாரணையிலும் தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் இதனை ஒப்புக்கொண்டுள்ளான்.

இந்நிலையில் பொய்வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான அனைத்து முஸ்லிம் இளைஞர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சி.பி.எம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கூடுதலான குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது அஸிமானந்தாவின் வாக்குமூலத்தில் தெரியவந்ததாக சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
 
 
 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
 
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
 

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்!!!



---------- Forwarded message ----------
From: Shahul Askar <shaaskar@gmail.com>
Date: 2011/1/21
Subject: (TMP) கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்!!!


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
 

கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்!!!





[ ''தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்'' என்று தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்கவும்.

''உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்'' என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.

பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள்.

அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் பெண்கள் எதிரில் வரும்பொழுது பார்வையை தாழ்த்திக் கொள்கிறார்கள்!

இருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.]

o அதிகாரம் படைத்த ஆண்கள் எந்த விஷயத்திலும் பெண்களிலேயே குறை காண்பார்கள். ஆனால் தங்களை வசதியாக மறந்து விடுவார்கள்.

o அந்நிய ஆண்கள் இருக்குமிடத்திற்கு பெண்கள் செல்வதை குறையாக காண்பவர்கள் அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு இவர்கள் செல்வதை குறையாக எண்ண மாட்டார்கள்.

o அந்நிய ஆண் பார்க்கும் விதத்தில் பெண் முகம் திறந்து செல்வதை குறை சொல்பவர்கள், அந்நியப் பெண்களை இவர்கள் பார்ப்பதை குறையாக நினைக்க மாட்டார்கள்.

o அந்நிய ஆணிடத்தில் பெண் பேசுவதை குறை பார்ப்பவர்கள் அந்நிய பெண்ணிடத்தில் இவர்கள் பேசுவார்கள்.

இப்படியாக கற்பின் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியது என்பதாக நினைத்து வாழும் முஸ்லீம் ஆண்கள் குர்ஆனையும் ஹதீஸையும் புரட்டிப்பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அல்லாஹ் திருக்குர்ஆனின் 33 ஆவது அத்தியாயமான 'அல் அஹ்ஸாப்' – ன் 35 ஆவது வசனத்தில்; இஸ்லாம், ஈமான், இறைவழிபாடு, உண்மை, பொறுமை, இறையச்சம், தான தர்மம், நோன்பு, கற்பொழுக்கம், திக்ரு செய்வது ஆகிய இந்த பத்து விஷயங்களை குறிப்பிட்டு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுவனம் செல்ல இந்த பத்து தன்மைகளும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறான்.

இதோ அந்த திருவசனம்;

"நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் -ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்." (33:35)

இதில் ஒன்பதாவதாக "தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்" என்று கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிட்டிருப்பதை எவரும் கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.

திருமணமாகாத நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணையும், ஆணையும் நூறு கசையடி அடியுங்கள் என்றுள்ள அல்குர்ஆனின் 24/2 வது வசனத்தின் மூலமாக கூறி, ஒழுக்கம் தவறும்போது இருபாலரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை தெளிவு படுத்துகின்றான்.

ஃகாத்திமிய்யா என்ற வமிசத்தை சார்ந்த பெண்ணொருத்தி திருமணம் முடித்த பின் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு, "யா ரசூலல்லாஹ், நான் தகாத உறவில் ஈடுபட்டு விட்டேன்" என்று கூறியபோது அப்பெண்மணியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். அதுபோல் மாயிஜ் என்ற நபித்தோழர் தவறான உறவு வைத்து விட்டு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபோது அவரையும் கல்லெறிந்து கொல்லச்செய்தார்கள்.

ஒரு பெண் அந்நிய ஆணின் மூலமாக நிர்பந்திக்கப்பட்டு உறவு கொள்ளப்படும்போது தன் கற்பு சூறையாடப்பட்டு விட்டது என்று நீதிமன்றங்களின் படிகளில் ஏறுவதுபோல் அமெரிக்காவில் படித்துக்கொடுக்கும் ஒரு பெண் ஆசிரியர் தன்னுடைய மாணவனிடத்தில் தவறான உறவு வைத்தபோது "எங்களது குடும்பப் பையனின் கற்பு சூறையாடப்பட்டு விட்டது" என்று மாணவனின் உறவுக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர் என்ற பத்திரிகை செய்தி பெண்ணுக்கு கற்பு இருப்பது போல் ஆணுக்கும் கற்புண்டு என்பதை நிரூபித்தது.

இருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

இறை உதவி ஆணுக்கும் பெண்ணுக்கும்

கற்பொழுக்கத்திற்கு பெயர் போனவர்கள் ஹளரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். எந்த அந்நிய ஆணையும் சந்தித்திராதவர்கள். ஆனால், கணவன் இல்லாத இவர்கள் ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தபோது ஊர்மக்கள் தூற்றினார்கள். அப்போது தொட்டில் குழந்தையாக இருந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பேச வைத்து மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கற்பொழுக்கத்தை நிரூபித்தான் ஏக இறைவன்.

அதுபோலவே யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை நாடி வந்த அரசியிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஒழுக்க சீலராக நடந்து கொள்கிறார்கள். ஆனால், தன் ஆசைக்கு இணங்காத யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்மீது அவப்பெயரை அரசி ஏற்படுத்துகிறார். இந்த நேரத்தில் அரசியின் குடும்பத்தை சார்ந்த ஒரு தொட்டில் குழந்தையை பேச வைத்து யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்தினித்தனதை இறைவன் நிலைநாட்டினான்.

இதுபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் வாழ்ந்த ஜுரைஜ் என்ற நல்ல மனிதருடைய விஷயத்திலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடை பெற்றதாக "ரியாளுஸ்ஸாலி ஹீன்" எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகள் ஈமானுள்ள ஆண்களுக்கு நல்ல படிப்பினைகளாகவே திகழ்கின்றன.

கற்பொழுக்கத்தை இழக்கச் செய்யும் செயல்கள்

o அந்நியப் பெண்களைப் பார்ப்பது இரு கண்கள் செய்யும் விபச்சாரம்.

o அந்நியப் பெண்களை பற்றி பேசுவது நாவு செய்யும் விபச்சாரம்.

o அந்நியப் பெண்களை தொடுவது கரம் செய்யும் விபச்சாரம்.

o அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு நடந்து செல்வது கால்கள் செய்யும் விபச்சாரம். (அல் ஹதீஸ்)

மேற்கூறப்பட்ட ஹதீஸின் மூலம் ஒரு ஆணோ, பெண்ணோ தகாத உறவு கொள்வதின் மூலம் மட்டுமே கற்பொழுக்கத்தை இழக்கிறார்கள் என்பதல்ல; தகாத பார்வை, செவி, தொடுதல், பேசுதல், நடப்பது போன்றவற்றின் மூலமாகவும், கற்பொழுக்கத்தை இழக்கிறார்கல் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள்.

பார்வை

இவைகளில் எல்லவற்றிலும் மனிதனை அதிகமாக வழி தவறச்செய்யக்குடியது பார்வை. பார்வையை ஒரு மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் இன்ஷா அல்லா ஹ் நிச்சயம் அவன் கற்பொழுக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைக் காணுவான். எனவேதான் திருமறையிலும், திருநபி போதனைகளிலும் பார்வை பேணுதலைப்பற்றி அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

"நபியே! முஃமினான ஆண்களுக்கு நீங்கள் கூறிவிடுங்கள் அவர்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக்கொள்ளட்டும் (அல் குர் ஆன் 24:30)

இந்த வசனத்தை எத்தனை ஆண்கள் பின்பற்றுகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்,.எத்தனை ஆண்களுக்கு இப்படியொரு வசனம் திருக்குர்ஆனில் இருக்கிறது என்பது தெரியும். பெண்களை எச்சரித்து பேசக்கூடியவர்கள் இந்த வசனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டியது அவசியமல்லவா?!

"தீய பார்வை ஷைத்தானின் விஷமூட்டப்பட்ட அம்புகளில் ஒன்று" (அல் ஹதீஸ்)

ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;

"அலீயே! யதார்த்தமாக அந்நிய பெண்ணின் மீது முதல் முறையாக உமது பார்வை பட்டு விட்டால் இரண்டாவதாக அதே பெண் மீது உம் பார்வையை தொடராதே! ஏனெனில் முதல் பார்வையினால் உமக்கு குற்றமுமில்ல. ஆனால், இரண்டாவது பார்வை உமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல." (அல் ஹதீஸ்)

பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள். அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் இதனைப் பின்பற்றுகின்றனர்.

ஹளரத் மூஸா அலை ஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு பயணத்தில் ஓர் இடத்திற்கு வருகிறார்கள். அங்கு ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு பெண் மக்கள் தங்களின் கால்நைடைகளுக்கு தண்ணீர் புகட்ட சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உதவுகிறார்கள்.

வீட்டிற்கு சென்ற இரு பெண்களில் ஒருவர் திரும்ப வந்து "எங்களின் தந்தை உங்களை அழைத்தார்" என் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். செல்லும்போது வழிகாட்டுவதற்காக அப்பெண்மணி முன்னே செல்கிறார்.

நடக்கும்போது அப்பெண்ணின் கால் பகுதியில் ஆடை சற்று விலகுவதைப் பார்த்த முஸா அலைஹிஸ்ஸலாம், தங்களின் பார்வையை பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பெண்ணை பின்னால் வரச்சொல்லிவிட்டு தானே முன்னால் சென்றார்கள் என திருமறையின் விரிவுரைகள் நம் வாழ்க்கையின் படிப்பினைக்கக இந்நிகழ்வை எடுத்துச் சொல்கின்றன.

ஸஹாபாக்கள் ஒரு யுத்த்திற்காக நாடு கடந்து செல்கிறார்கள் அந்நாட்டை நெருங்கியபோது முஸ்லீம் எதிரிகள் முஸ்லீம்களை முறியடிப்பதற்காக தந்திரம் செய்கிறார்கள். அதாவது பல நாட்களாக மனைவியர்களைப் பிரிந்து வாழும் இந்த முஸ்லீம்களை பெண்களைக் கொண்டு தான் வீழ்த்த வேண்டும். அதன்படி ஊரின் ஆரம்பத்திலுள்ள கடைத்தெரு வழியாகவே இஸ்லாமிய படை நுழைய வேண்டும். எனவே, தங்களுடைய இளம் வாலிபப் பெண்களை அரைகுறை ஆடையுடன் கடைத்தெருவில் நிற்க வைத்துவிட்டு "நீங்கள் இங்கு வருகின்ற முஸ்லீம் வீரர்களை தொட்டு சீண்ட வேண்டும்" என்றும் யோசனை சொல்லித்தருகிறார்கள்.

ஊரை நெருங்கிய ஸஹாபாக்களுக்கு நிலைமை தெரியவந்த போது இஸ்லாமிய படைத்தளபதி உபைதுப்னுல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு, போர் வீரர்கள் அனைவரும் பார்வையை தாழ்த்தும்படி கட்டளையிடுகிறார்கள். எல்லா ஸஹாபாக்களும் பார்வையை தாழ்த்தியவர்களாக ஊருக்குள் நுழைகிறார்கள். இவர்களின் இந்த செயல் யுத்தமில்லாமல் வெற்றி கிடைக்க காரணமாகிவிட்டது. நின்றிருந்த பெண்களும், ஊர்மக்களும் இஸ்லாத்தை தழுவினார்கள் என இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.

"உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்" என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.

"புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது" என பழமொழி கூறுவார்கள். அதுபோல் பெண்களிடம் எவ்வளவுதான் கலாச்சார சீர்கேடுகள் வந்தாலும் ஒரு நல்ல தரமான முஃமின் தன் கற்பொழுக்கத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

வல்ல ரஹ்மான் சீர்கேடுகள் நிறைந்திருக்கும் இக்காலத்தில் கற்பொழுக்கமுள்ள வாழ்க்கை வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

 

மவ்லவி கே.எஸ்.ஸிராஜுத்தீன், காஷிஃபி, பள்ளபட்டி

 
 
 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
 
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
 

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.