சுதந்திரமா...








Slave.jpg


அஸ்ஸலாமு அலைக்கும்,

 

அரைக்குறை ஆடை

சுதந்திரமா;

நிர்வாணப்படுத்திப் பார்க்கும்

உலகத்தின் தந்திரமா!

 

கண்காட்சி உனக்கிட்டப் பெயர்

கலாச்சாரமா;

கண்களுக்குக் கிடைக்கும்

விபச்சாரமா!

 

கவர்ச்சிக் காட்டிக்

கிளர்ச்சியூட்ட நீ

என்ன போதையா;

வன்கொடுமைக்கு

அழைத்துச் செல்லும் பாதையா!

 

 

முன்னேறிவிட்டோம் என

முழக்கமிட்டுக் கொண்டு;

இன்னும் 33 சதவீதம்

கேட்கிறாய் இன்று!

 

கண்ணியம் காக்கும் பெண்மைக்கு

மருந்தொன்று உண்டு;

மணக்கும் இஸ்லாத்தைக் கொண்டு!

நுழைந்து விடு இன்று

 

-யாசர் அரஃபாத்

http://itzyasa.blogspot.com


--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.




--
Shajahan.S
Hash10 telecom pvt ltd,
shajahanhash10@gmail.com,
Cell No : 9790134301.

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

Fwd: (TMP) உணரப் படாத தீமை சினிமா



---------- Forwarded message ----------
From: A.M.Haris . <harisimam@hotmail.com>
Date: 2010/10/28
Subject: (TMP) உணரப் படாத தீமை சினிமா
To: sahara tamil groups <saharatamil@yahoogroups.com>


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

உணரப் படாத தீமை சினிமா

சகோதரர் M. அன்வர்தீன்


'நம் பிள்ளைகளுக்குப்

பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா

மீசை முளைக்க வைத்து விட்டது.

இந்த அழுக்குத் திரை

சலவை செய்யப்படுமா?

இல்லையெனில்…

மக்களைச் சுருள வைக்கும்

திரைப்பட சுருளையெல்லாம்

ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்'

சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் வைர வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.

கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், "அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா' என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி. தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லை போலும்; இல்லையென்றால் இந்நேரம் கண்டனக் கூட்டம் தான். இவையெல்லாம் சினிமாவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் கொடுக்கும் certificates.

முஸ்லிம்களால் உணரப்படாத தீமைகள் என்று பட்டியல் போட்டால் அதில் வட்டி, சினிமா, கிரிக்கெட் என்று தொடரும். இவற்றில் சினிமாவைப் பற்றிய இஸ்லாத்தின் பார்வையை குர்ஆன், ஹதீஸில் ஆதாரத்துடன் சுருக்கமாக ஆராய்வோம்.

அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடிய ஒரு தகவல் தொடர்பு சாதனம் 'சினிமா' என்று பட்டிமன்றம் வைக்காமல் முடிவு செய்து விடலாம். அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து விட்டது. ஆனால் அதன் அவலநிலை அதல் பாதாளத்தில் உள்ள்து.
 
நடிப்புத் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை,  தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள், இயற்கையாக ஏற்படக்கூடிய காம உணர்வை முக்கால் நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை தூண்டி பணத்துக்காக எதையும் செய்யும் நடிகைகள், மணிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள்,  ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள்,  சினிமாவைப் பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள்..  அப்பப்பா பட்டியல் நீள்கிறது!   இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
 
ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும் ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான் இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால் விபச்சாரம்.

'விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான நிலையில் இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை' எனற ஹதிஸை இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சாமானியர்கள் முதல் சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகி வருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம் பற்றிய அக்கறை கவலை கொள்ளச் செய்கிறது. "விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?" என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டியது அவசியம். இது சினிமா செய்த சாதனை.

'கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம்.  காதால் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும் விபச்சாரம்.  இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான உறுப்பு உண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித் தள்ளிவிடும்' – ஹதீஸின் சுருக்கம். 

சினிமாவில் நடிப்பவர்கள், மனித சமுதாயம் முழுவதையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது?  குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.
 
வேதனையான விஷயம் என்னவென்றால், நான் ஏகத்துவத்தில் இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய எத்தனையோ பேர் சினிமா பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.  முக்கியமாக வெளிநாட்டில் வசிப்பவர்கள்,  வார விடுமுறை நாட்களில் அன்றைய ரிலீஸ் படத்தை பார்த்துவிட்டு, தாமதமாக உறங்கி, ஷைத்தான் காதில் சிறுநீர் கழிப்பதையும் சட்டை செய்யாமல், கொரட்டை விட்டு தூங்கி, பஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு,  நேராக ஜும்ஆ தோழுகைக்கு எழுந்திருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?  சிலர் பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் போது தயாராவதை பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும்!  எதற்காக தொழுகக்காக அல்ல! தூங்குவதற்காக!  

'நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும்' 17:36.

சினிமவைப் பார்த்து பொழுதை கழிப்பவர்கள் மேற்கண்ட இறைவசனத்தின்படி, மறுமையில் இறைவனிடம் எப்படித் தான் பதில் சொல்லப் போகிறார்களோ!
 
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடவேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையை நடத்திக் கொண்டிருப்பார்கள்! முடிவாகாத நிலையில், TV யில் நடிகையின் two piece உடையை ரசித்து கொண்டிருப்பார்கள். வெட்கக்கேடு!

கலாச்சாரச் சீரழிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், "கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா' என்ற காலம் போய், "பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?' என்ற ரீதியில் அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்! கலாசார சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது.
 
கதையை நம்பி இருந்த காலம்போய், சதையை நம்பி இருக்கும் கலியுக காலம். "கருத்தம்மா' என்று படமெடுத்தாலும், அதில், "செவத்தம்மாவை' போட்டால் தான் படம் ஓடும்; அதனால், ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே இயக்குனர்கள் பதிலாக இருக்கும்.  அப்படியானால், இவர்கள் கூறுவது என்ன? மனிதனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும், அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே கிடையாதா? நவூதுபில்லாஹ்.

எதுவரை இந்த சினிமா சதையை நம்பி இருக்கிறதோ, ஆபாசத்தை காட்டுகிறதோ, வக்கிரங்களை ஊக்குவிக்கிறதோ, கலாசார சீரழிவை உண்டுபண்ணுகிறதோ, வன்முறைக்கு வித்திட்டுகிறதோ, இஸ்லாத்துக்கு எதிராக உள்ளதோ அதுவரை இந்த சினிமாவை புறம் தள்ளிவிடுவோம். 

அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையிலும் வாழ இறைவன் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக.


நன்றி- சுவனத்தென்றல்.காம்.

அன்புடன்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
துபாய்.

       

    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnl9tuaSx8P1dkTLZaCNULoQ4kSGdLa7LVdQyfddG0XQMqqdv083ulMqZI1KyOx6y5mrW4C0SPGMKM7J7oLQlmVCOnuy57T3eZNlFsaWrsajnAByb28FRzyc-Dx2tpZA20zQBQHuggrX6j/s1600-r/title.jpg

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

லண்டன்:பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி, முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டார்.

லண்டன்:பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி, முஸ்லிம்
மதத்திற்கு மாறிவிட்டார். "இஸ்லாமிய சமூகத்தில் உறுப்பினராக இருப்பதற்கு
பெருமைப்படுகிறேன்' என கூறியுள்ளார்.பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி
பிளேரின் மைத்துனி லாரன் பூத்(43). இவர், ஈரான் நாட்டு செய்தி நிறுவனமான,
"பிரஸ் டிவி'யில் பணியாற்றி வருகிறார். டோனி பிளேர், மத்திய கிழக்கு
நாடுகளுக்கான அமைதித் தூதராக இருந்த போது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க
நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று அடிக்கடி அவரை விமர்சித்து
வந்தார்.கடந்த ஆறு வாரங்களுக்கு முன், ஈரான் நாட்டில் புனித நகரமாகக்
கருதப்படும், "குவாம்' நகருக்குச் சென்றிருந்தார். லண்டன் திரும்பிய
லாரன் பூத், முஸ்லிம் மதத்திற்கு மாறினார். மது அருந்துவது, பன்றி
இறைச்சி உண்பது போன்றவற்றை கைவிட்டு ஐந்து வேளையும் தொழுகிறார்.
எதிர்காலத்தில் பர்தா அணியவும் திட்டமிட்டுள்ளார்.

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பைக்! எருமைப்பட்டி குளத்தில் முஹம்மது தவ்ஃபீக் சாதனை!

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பைக்! எருமைப்பட்டி குளத்தில் முஹம்மது தவ்ஃபீக் சாதனை!


திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி புது தெருவை சேர்ந்த 22 வயதான முஹம்மது தஃபீக் அலி இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படிப்பபை இந்த ஆண்டு முடித்துள்ளார். இறுதி ஆண்டு படிப்பிற்காக ஒரு ப்ராஜக்ட் செய்ய நினைத்த முஹம்மது தஃபீக் அதை ஒரு சாதனையாக செய்ய வேண்டும் என திட்டமிட்டார்.

தரையிலும் தண்ணீரிலும் ஒடும் பஸ் மற்றும் சைக்கிள்கள் தொழில்நுட்பத்தில் முன்னேரிய நாடான அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்கனவே இருக்கின்றது எனவே ‘எரவாஞ்சேரியில் இருக்கும் நாம் புதுமையாக தண்ணீரிலும் தரையிலும் ஓடும் ஸ்கூட்டரை தயாரிப்போம்’ என முடிவு செய்த முஹம்மது தவ்ஃபீக் 6 மாத காலத்தில் தனது இந்த கனவை நினைவாக்கி தற்போது சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு சொந்தான எம்எய்ட்டி பைக்கை வைத்து இந்த புதிய கண்டுபிடிப்பை அவர் தயாரித்துள்ளார். இதற்கு அவருக்கு ஆன செலவு ரூபாய் 6 ஆயிரம் மட்டும் தான்!

தண்ணீரில் சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த பைக்கை தரையிலும் ஓட்டிக்க கொள்ளலாம்.

தனது கண்டுபிடிப்பை எருமைப்பட்டியில் உள்ள குளம் ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் ஓட்டிக்காட்னார் முஹம்மது தஃபீக்!



இவரது இந்த கண்டு பிடிப்பை பற்றிய செய்தி சன்நியுஸ், கலைஞர் போன்ற அனைத்து தொலைக்காட்சிகளிலும் மற்றும் தினகரன் தினதந்தி போன்ற அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது குறிப்பிடதக்கது.

இவரது இந்த சாதனை மற்ற மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்

‘நம்ம ஊர்ல இருந்துகிட்டு என்னத்த செய்யமுடியும் என தங்களது இயலாமைக்கு வேறு பெயர் சூட்டிக் கொள்ளாமல் சாதனை செய்ய பணமோ வசதியோ நாம் வசிக்கும் ஊரோ ஒரு தடை அல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

முஹம்மது தஃபீக் அப்படி நினைத்திருந்தால் அவரது இந்த கண்டுபிடிப்பு வெளிவந்திருக்காது. தண்ணிடம் இருந்த பழைய பைக், வெறும் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அருகில் உள்ள குளம், இதுவே முஹம்மது தஃபீக் சாதனைக்கு போதுமானதாக இருந்துள்ளது.

தனது இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளதாக முஹம்மது தஃபீக் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

நமது சமுதாய மாணவர்களின் இது போன்ற சாதனைகள் தொடர வேண்டும்.

மேலும் புகைப்படங்கள்..

கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்" டாக்டர்.அப்துல்லாஹ்

---------- Forwarded message ----------
From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
Date: Fri, 22 Oct 2010 04:43:47 -0700 (PDT)
Subject: [saharatamil] கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்"
டாக்டர்.அப்துல்லாஹ்
To:

Mohammad Sultan


-
'கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்"
டாக்டர்.அப்துல்லாஹ்(பெரியார் தாசன்) அவர்களின
மனோதத்துவ உரை. குழந்தை வளர்ப்பு பற்றியது
. பெற்றோர்கள் அனைவரும்
தவறாமல் கேளுங்கள்.
Please don't miss it. (In Video format)

Part1.
http://www.jamath-circle.com/play.php?vid=955
Part.2
http://www.jamath-circle.com/play.php?vid=957


Mohammad Sultan

--
*hajas*

*http:llwww.hajacdm*.blogspot.com Tamil Muslim Tube
Page<http://hajacdm.blogspot.com/>


http://www.tamilmuslimemailpage.blogspot.com/

மன்னிப்பதால் நற்கூலி கிடைக்குமா? தீமைகள் யாவை!

---------- Forwarded message ----------
From: Siraj Abdullah <siraj.salaam@gmail.com>
Date: Tue, 19 Oct 2010 15:33:44 +0530
Subject: (TMP) மன்னிப்பதால் நற்கூலி கிடைக்குமா? தீமைகள் யாவை!
To: anaithuthowheethsagotharargal@googlegroups.com,
muslimmails@googlegroups.com, tmpolitics@googlegroups.com

தீங்கிழைப்பவர்<http://islamicparadise.wordpress.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b9%e0%af%80%e0%ae%a4%e0%af%8d/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/>

*கேள்வி*: *"**பிறர் **நமக்கு செய்கின்ற தீமைகளை மன்னித்து பொறுமையாக இருந்தால்
இம்மையிலும் **மறுமையிலும் அதற்கான நற்கூலி கிடைக்கும்" **என்று உள்ள ஹதீஸ்களை
விளக்கவும்…***

*நபிகளார் **பல நேரங்களில் தம் எதிரிகளை கூட மன்னித்துள்ளார்கள்… **தங்களுக்கு
தெரிந்த **சம்பவங்களை விளக்கவும்…**நபிகளாரின் பொறுமையை நமக்கும் அல்லாஹ்
அளிப்பானாக… **ஆமீன்… *
பதில்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாம் அலைக்கும் (வரஹ்)

தீமைகள்


தீமை என்பதை மூன்று வகையாக எடுத்துக்கொள்ளலாம்

1) அறிமுகமில்லாதவர் தற்செயலாக இழைக்கும் தீமை

2) ஒருவர் கூடவே பழகி வேண்டுமென்றே இழைக்கும் தீமை

3) கால்நடை மிருகங்களுக்கு இழைக்கும் தீமை

*அறிமுகமில்லாதவர் தற்செயலாக இழைக்கும் தீமை***

கடைத்தெருவில் நாம் நடந்து செல்லும்போது நம் உடல், பொருள் ஆகியவற்றிற்கு
தீமை ஏற்படுத்துபவர்
நமக்கு தீமை இழைத்தால் அதை மன்னிக்க இயலாது காரணம் அவன் வழிப்பறித்திருடனாக
இருப்பான் நம்மிடம் தீங்கு இழைத்துவிட்டு மீண்டும் பிறரிடமும் தீங்கு செய்ய
முற்படுவான் இவனை விட்டுவிட்டால் ரவுடியாக, மிகப்பெரிய தாதாவாக உருவெடுத்து
மக்களை மிரட்டி சம்பாதிப்பான். இவனை மன்னிக்க இயலாது உரியமுறையில்
காவல்துறையினரிடம் பிடித்துக்கொடுத்து உரிய தண்டனையை இம்மையில் பெற்றுத்தருவது
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமையாகிறது.


*ஒருவர் கூடவே பழகி வேண்டுமென்றே இழைக்கும் தீமை*
ஒருவர் நமக்கு தீமை இழைக்கிறார் என்றால் அவர் நம்மை நன்கு அறிந்தவராக
இருக்கவேண்டும்
அப்போதுதான் திட்டமிட்டு தீமையை இழைக்க முற்படுவார். அதற்கான காரணங்களை நாம்
ஆராய முற்படும்போது பொறாமைதான் அதிகம் இருக்கும் *அவன் என்ன என்னை விட
சிறந்தவனா? என்னை விட பணக்காரனா? என்னை விட அழகானவனா? என்னை விட
புத்திசாலியா?* என்ற
எண்ணம் உடன்பிறந்த சகோதரனுக்கு கூட தோன்றிவிட்டால் அவன் நம்மை ஒவ்வொரு
அங்குலமாக பின்தொடர ஆரம்பித்துவிடுவான் பின்னர் பொறாமை தலைக்கேறிவிடும் தீமையான
காரியத்தில் ஈடுபட்டு நம்மை ஏசுவான், அடிக்க வருவான், பெயர் கெடுப்பான், புறம்
செய்யவான்.

இதுபோன்ற தீமை ஒரு மன நோயாக கூட சில நேரம் மாறிவிடும், வைராக்கியம் வந்துவிடும்,
குலப் பெருமை வந்துவிடும் ஆனால் அதே சமயம் இப்படிப்பட்ட மக்கள் பிற மக்களிடமும்
சொந்தபந்தகங்களிடம் அன்பாகவும், நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள் ஆனால்
நம்மிடம்தான் தீய செயல்களை செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் சொந்த குடும்ப
இரத்த பந்தங்களை உதறிதள்ளிவிட்டு பிரிந்து வாழ்வார்கள். இப்படிப்பட்டவர்களிடம்
நாம் நலினமாகவும், பெருந்தண்மையாகவும் நடந்துகொண்டால் அவர்கள் உணர ஆரம்பித்து
தீமையை விட்டு விலகிவிடுவார்கள். பழைய நட்பு மீண்டும் தொடர வாய்புள்ளது.
இத்தீமையை மன்னித்துவிடலாம்.


*இதோ இறைவசனம்***

எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அக்கிரமத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால்
அதனால் அவன்
மீது யாதொரு குற்றமுமில்லை. குற்றமெல்லாம் அளவுமீறி மனிதர்கள் மீது அக்கிரமம்
செய்து நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோர்மீதுதான். இத்தகையோருக்கு மிக்க
துன்புறுத்தும் வேதனையுண்டு. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்
கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியமாகும்.
(அல்குர்ஆன் 42:39-43)

* *

*இதோ நபிமொழிகள்***

*நபி (**ஸல்) அவர்கள் கூறினார்கள்:"**நீ உன் சகோதரனுக்கு உதவிடு, **அவன்
**கொடுமைக்காரனாக
இருப்பினும் சரி, **கொடுமை இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் **சரி!" **ஒருவர்
வினவினார்:
"**அல்லாஹ்வின் தூதரே! கொடுமைக்கு ஆளானவன் **என்றால் நான் அவனுக்கு உதவுவேன்.
ஆனால், **கொடுமைக்காரனாக இருக்கும்போது **அவனுக்கு எவ்வாறு உதவுவேன்?"*

* *

*நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:** **"**கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ
தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும்." **அறிவிப்பாளர் : அனஸ் (ரழி)
(புகாரி, **முஸ்லிம்)***

*
**2449 **இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:** **
**ஒருவர், **தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, **வேறு (பணம், **சொத்து
போன்ற) **விஷயத்திலோ, **இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்)
இருக்குமாயின், **அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும்.
தீனாரோ, **திர்ஹமோ (**பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும்
வாய்ப்பில்லாத நிலை (**ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப்
பெறட்டும்.) (**ஏனெனில், **மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின்
அவனுடைய **அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு
(**அநீதிக்குள்ளானவரின்
கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். **அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும்
இல்லையென்றால் அவரின் தோழரின் (**அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர்
கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு **அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.
என அபூ ஹுரைரா(ரலி) **அறிவித்தார். **ஆதாரம் – **புகாரி Volume:2 Book:46*

* *

* *

*விலங்கினங்களுக்கு இழைக்கப்படும் தீமைகள்***

*அபூஹுரைரா (ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: *"தாகித்திருந்த ஒரு நாயின் தாகத்தை
தீர்ப்பதற்காக கிணற்றில் இறங்கி நீர் கொண்டுவந்து நாயின் தாகத்தைத் தீர்த்த
மனிதனின் செயலை அல்லாஹ் நன்றியுடன் பொருந்திக் கொண்டு அவனின் பாவங்களை
மன்னித்து விட்டான் " என்று பெருமானார் சொன்னபோது, "இறைத்தூதரே, விலங்குகளுக்கு
உதவினாலும் அல்லாஹ்விடத்தில் வெகுமதி கிடைக்குமா?" என்று வினவிய போது, "ஆம்!
விலங்குகளுக்கு உதவி செய்தாலும் வெகுமதியுண்டு" என்றார்கள்.இன்னொரு
சந்தர்ப்பத்தில் *ஒரு பூனையை வீட்டிலடைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுக்
கொன்ற பெண் நரகில் வேதனை செய்யப்படுவதாகச் சொன்னார்கள் (புகாரி).***

*2435 **இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: **
*ஒருவரின் கால்நடையிடம் அவரின் அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம்.
உங்களில் எவரும் அவரின் சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, அவரின் உணவுக் கருவூலத்தை
உடைத்து, அவரின் உணவை எடுத்துச் சென்று விடுவதை விரும்புவாரா? இவ்வாறே, அவர்களின்
(கால்நடை உரிமையாளர்களின்) கால் நடைகளுடைய மடிகள் அவர்களின் உணவையே சேகரித்துப்
பாதுகாத்து வைத்திருக்கின்றன. *எனவே, **எவரும் ஒருவரின் **கால்நடையிடம் அவரின்
அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம்.* என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)
அறிவித்தார். ஆதாரம்-புகாரி Volume:2 Book:45

*உங்கள் அத்துமீறல்களுக்கு பயந்துக்கொள்ளுங்கள்***

2440 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளர்கள்
நரகத்திலிருந்து
தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில்
தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே
நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக்
கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி
விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். *முஹம்மதின்
உயிரைத் தன் கையில் **வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில்
உள்ள தம் **வசிப்பிடத்தை, **உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக
அடையாளம் கண்டு **கொள்வார்கள்*. என அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.
ஆதாரம்-புகாரி Volume:2 Book:46

*2448 **இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.** **அநீதியிழைக் **கப்பட்டவரின்
சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் **அநீதியைக்
குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை **புரிபவதைப் பற்றி)
அஞ்சுங்கள். ஏனெனில், **அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே **எந்தத் திரையும்
இல்லை" **என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (**ஆளுநராக)
அனுப்பி வைத்தபோது கூறினார்கள். ஆதாரம்-புகாரி Volume:2 Book:46***

*மூமின்கள் பண்புகள் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்***

*அனஸ் (**ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களோடு நடந்து
சென்று **கொண்டிருந்தேன்.
நபி (ஸல்) அவர்கள் ஒரம் தடித்த நஜ்ரானி போர்வை ஒன்றை **அணிந்திருந்தார்கள். அதை
ஒரு கிராமவாசி பிடித்துக்கொண்டு மிகக்கடுமையாக **இழுத்தார். நான் நபி (ஸல்)
அவர்களின் புஜத்தைப் பார்த்தேன். கடுமையாக **இழுத்ததன் காரணத்தால் அதில்
போர்வையின் ஒரத்தின் அடையாளம் பதிந்திருந்தது. **பின்பு அந்த கிராமவாசி
"**முஹ்ம்மதே!
உம்மிடமுள்ள அல்லாஹ்வின் **செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்க உத்தரவிடுங்கள்"
**என்று கூறினார். நபி (**ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பி சிரித்தவர்களாக
அவருக்கு சில **அன்பளிப்புகளைக் கொடுக்க உத்தரவிட்டார்கள். (ஸஹீஹ¤**ல் புகாரி,
**ஸஹீஹ் **முஸ்லிம்)***

*அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை **நிலைமையிலும் தானம்
செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி **விடுவார்கள். மனிதர்களை
மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே **நேசிக்கிறான். (அல்குர்ஆன்
3:134)***

*

**நன்மையும் தீமையும் **சமமாகிவிடாது. (ஆதலால் நபியே! தீமையை) நீர் நன்மையைக்
கொண்டே தடுத்துக் **கொள்ளும். அவ்வாறாயின், **உம்முடைய கொடிய விரோதியை அதே
சமயத்தில் உம்முடைய **மெய்யான, **மிக்க நெருங்கிய சினேகிதனைப்போல் காண்பீர்.
பொறுமையுடையோர்களைத் **தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும்
பாக்கியம் **உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்ஆன்
41:34,35)***

*அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே*

--
You received this message because you are subscribed to the Google
Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to
tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at
http://groups.google.com/group/tmpolitics?hl=en.


--
*hajas*

*http:llwww.hajacdm*.blogspot.com Tamil Muslim Tube
Page<http://hajacdm.blogspot.com/>


http://www.tamilmuslimemailpage.blogspot.com/

இலவசமாக M.E/M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு



---------- Forwarded message ----------
From: Islamic Service <service.islam@gmail.com>
Date: 2010/10/13
Subject: (TMP) இலவசமாக M.E/M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு
To: unitedtamilmuslims@yahoogroups.com


இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவங்களில் இலவசமாக M.E/M.Tech  படிக்க GATE நுழைவு தேர்வு

  GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech  படிக்க மத்திய அரசால்  நடத்தப்படும் தேர்வாகும்.  இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம்.  இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய http://www.gate.iitb.ac.in/gate2011/

  இந்தியாவில் 8 இடங்களில் உள்ள  IIT, 20 இடங்களில் உள்ள  NIT,  டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில்  M.E/M.Tech, Phd  படிக்க GATE  என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது,  இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது). இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview)  மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன 

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை.  தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது tntj.net (www.tntj.net/?p=8622) இணையதளத்தில் உள்ளது. 
 
பெற்றோர்களே!

நுழைவு தேர்வு இல்லாமல் நேரடியாக படிக்க சில லட்சம் ரூபாய் செலவாகும், ஆனால் இந்த தேர்வு மூலம் பணம் வாங்கி கொண்டு படிக்க முடியும். எனவே கல்வி கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவங்களுக்கு நாம் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொடுக்காமல் நீங்கள் மேற்படிப்பு படிக்க இது போன்ற தேர்வை எழுத சொல்லுங்கள். மாணவர்களும் மேற்படிப்பு என்றாலே லட்சங்களை பெற்றோர்காளிடம் இருந்து பெறவேண்டும் எண்ணத்தை மாற்றி இது போன்ற நுழைவு தேர்வை எழுதி குடும்பத்தின் சுமையை குறைத்து நீங்களும் நல்ல கல்வியை பெற்று அதிக சம்பளத்தில் வேலையில் சேருங்கள் இன்ஷா அல்லாஹ்

பெரும்பாலும் நாம் படிப்பது நமது கல்வி தரத்தை உயர்த்திகொள்வதற்க்கும், நல்ல வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் பெறுவதற்க்கும், வெளி நாடுகளில் சென்று படித்து சிறந்த கல்வியை பெற்று நல்ல சம்பளத்துடன் நல்லவேலையில் சேர்வதற்க்கும்தான். கல்வி துறையில் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற நுழைவு தேர்வு தேர்வுகளை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும். ஏதோ எல்லாரும் படிக்கின்றனர் நானும் படிக்கின்றேன் என்று இருந்துவிடக்கூடாது, பணத்தை வைத்து  கல்லூரியில் இடம்தான் வாங்கமுடியும், படிப்பை வாங்கமுடியாது, வேலையையும் வாங்க முடியாது, நன்றாக படித்தால் தான் நல்ல வேலைகிடைக்கும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள்,  எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி
 
GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 27,
ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். http://onlinegate.iitm.ac.in/iitweb
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : சென்னையில் உள்ள IIT மற்றும் குறிபிட்ட  State Bank of India  கிளைகள்  (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.)
விண்ணப்பத்தின் விலை : ரூ.1,000 (ஆன்லைனில் ரூ.8,00)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Chairman, GATE Office, Indian Institute of Technology Madras, Chennai 600 036,
மேலதிக விளக்கம் பெற தொடர்புகொள்ள வேடிய தொலைபேசி எண் : 044-2257 8200 (சென்னை IIT)

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
  1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
  2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்
  3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்

தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 13,
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : மார்ச் 15

GATE தேர்வு பற்றி மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்க அஹமது இப்ராஹிம் -  9841464521
அல்லது E-mail to  sithiqu.mtech@gmail.com 
 
 


--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

Beware Of Paper cups in Your pantry





 



--

பால்தாக்ரே எனக்கு கடவுள் மாதிரி: வெளுத்தது ரஜினியின் காவி முகம்



---------- Forwarded message ----------
From: Siraj Abdullah <siraj.salaam@gmail.com>
Date: 2010/10/5
Subject: (TMP) பால்தாக்ரே எனக்கு கடவுள் மாதிரி: வெளுத்தது ரஜினியின் காவி முகம்
To: tmpolitics@googlegroups.com


சினிமா கூத்தாடி ரஜினியின் தீவிர ரசிகராக இருக்கும் ஒருசில முஸ்லிம் இளைஞர்களே!
 

இதோ நீங்கள் படிக்க வேண்டிய ஒரு செய்தி கீழே உள்ளது கிளிக் செய்க!



--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

Fwd: [saharatamil] [சஹாரா தமிழ்] அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!



---------- Forwarded message ----------
From: ?????? ??????? <harisimam474@gmail.com>
Date: Oct 3, 2010 1:37 AM
Subject: [saharatamil] [சஹாரா தமிழ்] அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!
To: saharatamil@yahoogroups.com

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSDR06ly6sTZGJTBPJ0ozi0XGYt_GAO-yd1XBneJwnoNvo2VdgG_ruPytDHdYr68-UhWAPZv57OXgtKHkh5b5Cd9MdODIClBXCdmCdtcwuA5tzCByipAJpZfmmFjZsUeAFGsUprX_KzLqg/s1600/india-map.jpg"கடந்த கால கசப்பு அனுபவங்களை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வோம்" - ஆர் எஸ் எஸ் தலைவன் மோகன் பகவத் சொல்கிறான். பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஆதாரமற்ற கசப்பனுபவமாம் ராமன் கோயில் இடிப்பு என்ற கதையை வைத்துக் கொண்டு பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் சொல்கிறான் இதை.

"நமது சமூகத்தில் மதவெறியர்களுக்கு(fanatics) இடமில்லை, இந்தத் தீர்ப்பு நல்ல தீர்ப்பு" இப்படி சொல்வது வேறுயாருமல்ல குஜராத் பாசிச மோடி என்ற மதவெறியன் தான்.

"தேசிய இணைவுக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது, உடனே ராமன் கோயிலை பெரிதாக கட்டுவோம்" இப்படி புரிய வேண்டியவர்களுக்கு மட்டும் புரிகின்றபடி உளறியது போல தெளிவாக உளறியிருப்பவன் திருவாளர் மார்க்கெட் போன அத்வானி.

அயோத்தித் தீர்ப்பு என்ற அயோக்கியத்தனம் செய்யும் மாயம் இந்த அதிசய பேச்சுக்களையெல்லாம் நாம் கேட்க வேண்டிய காலக் கொடுமை நிகழ்ந்துவிட்டது. நேற்று எல்லா தொலைக்காட்சிகளும் இந்து மத வெறித் தலைவர்களின் நல்லொழுக்க பேச்சுக்களால் நிரம்பி வலிந்தன. இது அயோத்தித் தீர்ப்பு அல்ல, அயோக்கியத் தீர்ப்பு என்பதை இதுவே உரக்க ஒலித்தது.

இந்தத் தீர்ப்பில் இந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் மனசாட்சியாக நீதிமன்றத்தின் குரல் ஒலித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பாபர் மசூதி மற்றும் அது இருந்த இடத்தின் மீதான முஸ்லீம்களின் உரிமை என்னென்ன காரணங்களை நிராகரித்து பறிக்கப்பட்டதோ அதே நிராகரிக்கப்பட்ட காரணங்களை/வாதங்களை ஏற்றுக் கொண்டு ஆர் எஸ் எஸ் காவி வெறியர்களுக்கு அந்த இடத்தின் மீது உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது முரன்பாடு என்று கேட்டவர்கள் எல்லாம் நேற்று தேசவிரோதிகள் என்று தூற்றப்பட்டார்கள், கேலி செய்யப்பட்டார்கள்.

'அங்குதான் ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை எனவே அந்த இடம் அவர்களுக்கே சொந்தம்' (தீர்ப்பு நகல்1 மற்றும் 2) என்று சொல்லும் நீதிமன்றம்,

'அது பாபருக்கு சொந்தமான இடம் என்பதும், அதைக் கட்டியது பாபர்தான் என்பதும் போதுமான அளவு நிருபிக்கப்படவில்லை, எனவே உரிமையில்லை' (தீர்ப்பு நகல் 2, சரத்து 2) என்று கூறி முஸ்லீம்களின் உரிமையை மறுத்துள்ளது. ஆதாரமே இல்லாத ராமன் பிறந்த இடம் என்ற கட்டுக்கதை உண்மை ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை. ஆனால் நேரடி ஆதாரமற்றது(தீர்ப்பு நகல் 1, சரத்து 2.) என்பதாலேயே 1992ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பொய் ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.

இதைத்தான் இந்திய வரலாற்று முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான இர்பான் ஹபீப் இப்படிக் கூறுகிறார்: "இந்த நாட்டின் இராண்டம்தர குடிமகனாக உணர்கிறேன்". இப்படித்தான் பெரும்பான்மை முஸ்லீம்களும் உணர்கிறார்கள். உலகின் இரண்டாவது மிகப் பெரிய முஸ்லீம் மக்கள் தொகையை கொண்ட நாட்டின் முஸ்லீம்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாக உணர வைக்கப்பட வேண்டும், அதன்படி அவர்கள் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என்பதுதான் ஆர் எஸ் எஸ்ன் இலட்சியமும் ஆகும்.இதைத்தான், 'தேசிய ஒருங்கிணைப்புக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது' என்று முழங்குகிறான் அத்வானி.

இல்லாத ராமனுக்கு அந்த இடம் சொந்தமாம், ஆனால் பாபர் கட்டவில்லையென்பதாலேயே அது மசூதிக்கு சொந்தமில்லையாம். அப்படியென்றால் இடிக்கப்பட்ட மசூதி என்ன அந்தரத்திலா தொங்கிக் கொண்டிருந்தது, அந்த இடத்தில்தானே இருந்தது? யார் கட்டினால் என்ன? மசுதி இருந்தது என்ற உண்மைதானே இங்கு முக்கியமானது? 1949ல் ராமன் சிலையை அங்கு வைத்த திருடன் யார் என்று நீதிமன்றம் ஆராய்ந்துதான் தீர்ப்பளித்ததா? அப்போது மட்டும் இந்துக்களின் நம்பிக்கை முக்கியம், அதன் பூர்வாசிரமம் தேவையில்லை?

'1949ல்தான் மசூதியின் மைய கோபுரத்திற்குக் கீழே ராமன் சிலை வைக்கப்பட்டது (தீர்ப்பு நகல் 1,2,3). எனவே அது இந்துக்களுக்குச் சொந்தம்' என்று கூறியுள்ள நீதிமன்றம்.

'மசூதியை இஸ்லாம் சொல்லுகின்ற விதிகளின் படி கட்டவில்லை எனவே அது மசூதியில்லை(தீர்ப்பு நகல் 3), அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை" என்று கூறியுள்ளது. ராமன் சிலை மட்டும் இந்து விதிமுறைகளின் படித்தான் 1949ல் அங்கு திருட்டுத்தனமாக வைக்கப்பட்டதா என்ன? விதிமுறைகளெல்லாம் முஸ்லீமுக்கு மட்டும்தான் போலும்?

1949க்குப் பிறகு மைய கோபுரத்தின் கீழ் ராமன் சிலை வைக்கப்பட்டதால் அது இந்துவுக்குச் சொந்தம்(தீர்ப்பு நகல் 1, 2,3) எனில் 1949க்கு முன்புவரை அங்கு சிலையும் கிடையாது ஒன்றும் கிடையாது. பல நூறு வருடங்களாக அங்கு முஸ்லீம்கள்தான் தொழுதார்கள்(தீர்ப்பு நகல் 1,2). எனில், அவர்களுக்கு உரிமையில்லையா என்று யாரும் கேள்வி எழுப்பிவிடாதீர்கள். தேவைப்பட்டால் ஆயிரம் வருட பழய நம்பிக்கை(ராமன்) என்று நியாயப்படுத்தவும், தேவையில்லையெனில் லேட்டஸ்ட்(1949ல் சிலை வந்தது) என்னவென்று பாருங்கள் என்று நிராகரிக்கவும் ஆர் எஸ் எஸ்ன் மனசாட்சியாம் நீதிமன்றங்களுக்குத் தெரியும்.

அதாவது மைய கோபுரம் முஸ்லீம்களுக்குச் சொந்தம் என்பது நிருபிக்கப்படவில்லை என்கிறது நீதிமன்றம். சரி இருக்கட்டும். ஆனால் இந்துக்களுக்கு மைய கோபுரம் சொந்தம் என்பதை மட்டும் எப்படி நீதிபதிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள்? அங்கு 1949ல் சிலை வைக்கப்பட்டதாலேயும், அதற்கு முன்பு வரை பொதுவாக அயோத்தியில் ராமன் பிறந்தான் என்று நம்பிக் கொண்டிருந்த இந்துக்கள், மசூதி உருவான பிறகு அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இராமன் பிறந்தான் என்று மாற்றிக் கொண்ட இந்துக்கள், பிறகு 1949ல் திருட்டுத்தனமாக ராமனது சிலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழே வைக்கப்பட்டது எனவே அது இந்துக்களுக்குச் சொந்தமாம்(தீர்ப்பு நகல் 1, 2,3). நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படித்தான் சொல்கிறது.

நீதிமன்ற தீர்ப்பில் எங்கேயுமே மைய கோபுரம் உள்ள பகுதி இந்துக்களுக்கு சொந்தம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளதால் அதை அவர்களுக்குத் தருகிறோம் என்று சொல்லவில்லை. நிருபணம் எல்லாம் முஸ்லீம்களுக்குத்தான், இந்துக்களுக்கு நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பதுதான் இதன் பொருள்.

"மசூதி இருந்த இடத்தின் மீதான உரிமையை சன்னி வக்பு வாரியம் நிருபிக்கவில்லை. மேலும், மசூதி இருந்த இடம் பாபருக்கு சொந்தமானது என்பதும் நிருபனமாகவில்லை" என்று கூறியுள்ளது நீதிமன்றம் (தீர்ப்பு நகல் 1, 2, 3).

ராமன் பிறந்த இடம் என்பதும்தான் நிருபிக்கப்படவில்லை, அங்கு ராமன் கோயில்தான் இருந்தது என்பதோ அல்லது கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதோ கூடத்தான் நிருபிக்கப்படவில்லை(தீர்ப்பு 1, 2). அந்த இடம் இந்துக்களுக்கானது என்பதும் கூடத்தான் நிருபிக்கப்படவில்லை. ஆனாலும் இந்துக்களின் நம்பிக்கை என்பதால் அது மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்குத் தரப்படவேண்டும் என்கிறது தீர்ப்பு.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் படி நிருபிக்கப்பட்டவையெல்லாம் இவைதான், 1) ஏற்கனவே, இடிந்த கோயில் ஒன்று இருந்துள்ளது, அங்குதான் மசூதி கட்டப்பட்டது. 2) கோயிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை. 3) மசூதி கட்டப்பட்ட பிறகுதான் மசூதி இருக்கும் அந்தக் குறிப்பான பகுதியில் ராமன் வழிபாடு நடக்கத் தொடங்கியது. 4)அதுவும் வெளிப் பிரகாரத்தில்தான். 5)1853 வரை மசூதி ஒரு பிரச்சினையாகவே இல்லை, இரு மதத்தவரும் அக்கம் பக்கமாக வழிபட்டு வந்துள்ளனர்.

இதிலும் கோயில்தான் இருந்ததா என்பதை ஆணித்தரமாக அகழ்வாராய்ச்சியால்` சொல்ல இயலவில்லை. பூசி மெழுகவே செய்கிறார்கள்.

இவைதான் நிருபிக்கப்பட்டவையெனில், இதே நிலையை மீண்டும் கொண்டு வருவதுதானே நியாயம்? மசூதியின் பிரகாரத்தில் இந்துவின் வழிபாட்டையும், மசூதி இருந்த இடத்தில் மசூதியையும் கொண்டு வருவதுதானே நியாயம்?

தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், வெளிப் பிரகாரத்தில் சீதா மற்றும் ராமன் வழிபாடு நிகழ்ந்ததால் அது நிர்மோகி அகாராவுக்குச் சொந்தம், உள்ளே மைய ஸ்தூபியில் 1949ல் ராமன் சிலையை வைக்கப்பட்டதாலும் அதையே இந்துக்கள் அன்றிலிருந்து நம்பத் தொடங்கியதாலும் அந்த இடம் இனிமேல் மசூதிக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ சொந்தம் கிடையாது இந்து மகா சபைக்கே சொந்தம், 1992ல் மசூதி இடிக்கப்படும் வரை அங்கு மசூதி இருந்தது என்பது மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுவிட்டது எனவே போனால் போகிறது மூனாவது பங்கு முஸ்லீம்களுக்கு என்று தீர்ப்பு சொல்லியுள்ளனர்.

அதாவது 400 வருடம் மசூதி இருந்தது ரெவின்யு டிப்பார்மெண்டிலோ அல்லது நிலப் பட்டா மூலமோ ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை (பாபருக்கு இந்த சட்டப் பிரச்சினையெல்லாம் தெரியாமல் போனதற்கு பாவம் நீதிபதிகள் என்ன செய்வார்கள்) எனவே அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை போலும். 400 வருட மசூதிக்கு உரிமையில்லை ஆனால் 61 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட ராமனது திருட்டு சிலைக்கு உரிமையுண்டு. ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை(புதிய நம்பிக்கையா, பழைய நம்பிக்கையா என்பதெல்லாம் நீதிமன்றத்திற்கு தேவையில்லாத விசயம்).

இப்போது இந்தப் பிரச்சினையின் காலனி ஆட்சிக்கால பரிணாமத்தை புரிந்து கொள்வது தேவையாக உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இந்து முஸ்லீம் பிரித்தாளும் சூழ்ச்சியும், காலனியாதிக்க பிரிட்டிஷ்க்காரர்களின் ஏவல் படையாகச் செயல்பட்ட இந்துத்துவவாதிகளின் முஸ்லீம் எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு அரசியலும் இந்த பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன.

நிர்மோகி என்ற குழு அங்கு கோயில் இருந்ததை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்று களத்தில் இறங்கிய பிறகுதான் 1853ல் அங்கு முதல் மத மோதல் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு வருடங்கள் நடந்த கலவரங்களின் விளைவால், நவாபின் ஆட்சியின் கீழ் இருந்த அங்கு கூட்டாக இந்துக்களும், முஸ்லீம்களும் உள்பிரகாரத்தில் வழிபடுவது தடை செய்யப்பட்டது. ஏற்கனவே மசூதி இருந்தபடியால், இந்துக்களின் வழிபாடிற்கு என்று வெளிப் பிரகாரத்தில் ஒரு இடம் கட்டப்பட்டது.

இதுதான் பிரச்சினையின் மையமான பகுதி. 1850களில் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருங்கிணைந்து பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றும் சுதந்திரப் போரை நடத்திக் கொண்டிருந்தனர். திப்பு சுல்தான் தலைமையில் தென்னிந்தியாவில் ஒரு கூட்டிணைவு உருவாகி அது பிரிட்டிஸால் சிதைக்கப்பட்டிருந்தது. திப்பு சுல்தான் தலைமையில் தந்திரப் போரில் ஈடுபட்ட அரசர்கள் மூட்டிய கனல் 1805ல் வேலூர் சிப்பாய்க் கலகமாக வெடித்தது. பிற்பாடு, 1857ல் இந்திய சுதந்திரப் போராக இந்தியா முழுவதும் வெடித்துக் கிளம்பியது. இவையிரண்டும் பிரிட்டிஷ்க்காரர்களால் ஒடுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு புரட்சியை எதிர்நோக்கி இருந்தது.

மத பிரிவினைகள் இன்றி மக்கள் ஒன்று பட்டு நின்றது பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு அபாயமானது எனவே, பிரித்தாளும் தந்திரம் விரிவாக அமல்படுத்தப்பட்டது. இன்னொரு பக்கம், புரட்சிகரமான இந்த காலகட்டத்தில்தான் துரோகமமும் உத்வேகத்துடன் முன்னுக்கு வந்தது. அந்தத் துரோகத்தின் வரலாற்றுக் குரலாக பதிவு செயப்பட்டதுதான், பக்கிம் சந்தர் சாட்டர்ஜியின் 'ஆனந்த மடம்' என்ற புதினம், அதில் முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்டுவதே முக்கியம், பிரிட்டிஷ்க்காரர்களின் ஆட்சி நமக்குத் தேவையானது என்ற அரசியலும் பேசப்பட்டது. முஸ்லீம்களை விரட்ட செல்லும் கூட்டத்தினரின் 'தேசபக்த'ப் பாடலாக வந்தேமாதரம் பாடலும் புதினத்தில் இயற்றப்பட்டது.

இந்துத்துவாதிகளின் மதவெறி முஸ்லீம் வெறுப்புப் பிரச்சாரமும், பிரிட்டிஷ்க்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாளமும், லயமுமாக இணைந்து செயல்பட்டு இந்திய விடுதலைப் போராட்ட அரசியலை பிழைப்புவாத லாவணிக் கச்சேரியாகவும், மதவாத பிரிவினையாகவும் சிதைத்தன. இவைதான் பாபர் மசூதிப் பிரச்சினையில் தெரிந்தே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மோதலைத் தூபம் போடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தன.

ஒரு நீதிமன்றத் தீர்ப்பு முற்றுமுதலாக பெரும்பான்மையினரின் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் வழங்க இயலுமா? அத்தகைய நம்பிக்கை பெரும்பான்மையினருடையது என்பது கூட ஜனநாயக முறையில் நிருபிக்கப்படாத பொழுது தீர்ப்பின் தன்மையை நியாயமானதாக எப்படி புரிந்து கொள்ள இயலும்? மசூதியை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லியதை மீறி அது இடிக்கப்பட்டுள்ளதற்கு நீதிமன்றத்தின் எதிர்வினை என்ன? இவையெல்லாம் உண்மையில் இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதையல்ல மாறாக இன்னும் சில பல வருடங்களுக்கு அடித்துக் கொண்டு அப்பாவி மக்களை பலி கொடுக்கப்படுவதையே உறுதி செய்யும். அதைத்தான் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளும் விரும்புகிறார்கள்.

இது தீர்ப்பு அல்ல, துரோகம். இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகம்.


அசுரன்
தீர்ப்பு நகல் 1
தீர்ப்பு நகல் 2
தீர்ப்பு நகல் 3
காலக் குறிப்புகள்

காலக் குறிப்புகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

அயோக்கியத் தீர்ப்பு

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
ராமனுக்கே மயிர் பிடுங்கிய அலகாபாத் நீதிமன்றம்..



                                                                 Link -  http://poar-parai.blogspot.com/2010/10/blog-post.html

--
10/03/2010 03:07:00 AM அன்று சஹாரா தமிழ் இல் ஜன்னத் மைந்தன் ஆல் இடுகையிடப்பட்டது

__._,_.___
Recent Activity:
.

__,_._,___


--
*hajas*

*http:llwww.hajacdm*.blogspot.com           Tamil Muslim Tube Page<http://hajacdm.blogspot.com/>


http://www.tamilmuslimemailpage.blogspot.com/

Fwd: (TMP) யார் இந்த நிர்மோஹி அகரா? (Safron Terrorism)



---------- Forwarded message ----------
From: Siraj Abdullah <siraj.salaam@gmail.com>
Date: Oct 2, 2010 1:24 PM
Subject: (TMP) யார் இந்த நிர்மோஹி அகரா? (Safron Terrorism)
To: tmpolitics@googlegroups.com


யார் இந்த நிர்மோஹி அகரா? (Safron Terrorism)

சிராஜ் அப்துல்லாஹ் | அக்டோபர் 2, 2010 at 9:12 மு.பகல் | Categories: Uncategorized | URL: http://wp.me/pzWg2-gb

அவுஜுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

யார் இந்த நிர்மோஹி அகரா?

பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தை சொந்தம் கொண்டாடும் சாதுக்களின் அமைப்பிற்கு பெயர்தான் நிர்மோகி அகரா. இவர்கள் ஹிந்து சமயத்தைச் சார்ந்த வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் அனுமாரின் தீவிர பக்தர்கள். மொத்தம் வடஇந்தியாவில் 14-அகரா பிரிவுகள் உள்ளன இந்த பிரிவுகளைத்தான் அகில இந்திய அகரா பரிஷத் (அகில் பாரதிய அகரா பரிஷத்) அங்கீகரித்துள்ளது

அகரா என்றால் என்ன?

அகரா என்ற சமஸ்கிருத வார்த்தையை அகதா என்றும் அழைப்பார்கள் அதாவது சாதுக்களின் பிரிவில் தற்காப்பு படையினர் என்று பொருள்படும். ஆதாரம் இதோ

ஹிந்து சமயத்தில் சாதுக்கள் என்றால் அமைதியானவர்கள் என்றும் புளு பூச்சியை கூட கொல்லமாட்டார்கள் என்றும்தான் நாம் அறிவோம் ஆனால் அதே சாதுக்களின் அமைப்பில் தற்காப்புக்காக கொலை செய்வதும் உண்டு என்பது இந்த அகரா என்ற அமைப்பின் மூலம் தெரியவருகிறது! இந்த சாதுக்களின் அமைப்பில் மிக முக்கிய பிரிவான அகரா என்ற சாதுக்கள் அமைப்பு தந்திரமான அமைப்பாகும் அதாவது இவர்கள் சாதுக்கள் போல் காட்சியளித்தாலும் தாங்கள் கொண்ட கொள்கைக்காக எதிரணியில் இருப்பவர்களுடன் போர் தந்திரத்தாலும், குஷ்டி மோதல்களாலும் சண்டையிட்டு தாங்கள் மட்டும் வெற்றி பெறுவதாகும் இதன் மூலம் சாதுக்கள் அசுர குணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பாபர் மசூதியின் பிரச்சினையில் உண்மையாகிறது. அகரா எனப்படும் இவர்களை சாதுக்கள் என்று கூறுவதைவிட அசுர வர்க்கத்தினர் என்று கூறுவதுதான் சிறந்ததாகும் எனவே இந்திய ஒற்றுமையை சீர்குலைக்க அரங்கேற்றிய கூத்துக்களை இங்கு முன்வைக்கிறோம்!

அகரா பிரிவின் வரலாறு


இந்து சமயத்தில் அகரா என்ற பிரிவு கி.மு 2500ம் ஆண்டு வாக்கில் ஆதி சங்கராச்சாரியாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது. இவர்களின் வரலாறுபடி இந்த ஆதி சங்கராச்சாரியார் 7 அகாரா பிரிவினரை தோற்றுவித்தவராகிறார் இவைகளின் பெயர்களாவான!

1.      மஹாநிர்வானி

2.      நிரஞ்சனி

3.      ஜுனா

4.      அடல்

5.      அவஹன்

6.      அக்னி

7.      அனந்த் அகரா

இந்த 7 அகரா பிரிவினர் பிற்காலத்தில் பல்கிப் பெருகி 14 பிரிவினராக மாறின இவைகளில் உள்ள பாபர் மசூதியை இடிக்க துணை நின்று பெயர் சம்பாதித்த ஒரு பிரிவுதான் நிர்மோகி அகரா!

சில அகாரா யோகிகள் தங்கள் அமைப்பை ஆதி சங்கராச்சாரியார் தோற்றுவிக்கவில்லை என்றும் தங்கள் மத குருவான கோரக்நாத் என்ற முனிவர்தான் தோற்றுவித்தார் என்று கூறுகின்றனர்.

அகரா பிரிவுகளின் பலம் மற்றும் பலவீனம்

கைகளில் வாள் ஏந்தும் நிர்வாண அகராக்கள் (சாது அசுரர்கள்)

மஹாநிர்வாணி, நிரஞ்சனி, ஜுனா ஆகிய அகரா சாதுக்களின் பிரிவுகள் மிகவும் பலமானதாகும். எனவே மற்ற பிரிவுகள் இந்த பலமான பிரிவுகளுடன் சமரசமாயின அவைகளாவன

  • அடல் அகரா என்ற பலவீனமான பிரிவு மஹாநிர்வாணி என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது!

  • அனந்த அகரா என்ற பலவீனமான பிரிவு நிரஞ்சனி என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது

  • அவஹன் என்ற பலவீனமான பிரிவு ஜுனா என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது!

இந்த பலவீனமான பிரிவுகள் பலமான அகராவுடன் இணைந்தாலும் சிற்சில நேரங்களில் தங்களுடைய எண்ணங்கள், வெற்றி தோல்விகள், தங்கள் குருதேவ் ஆகிய விஷயங்களில் வேறுபாடு கண்டு பொறாமை மனப்பாண்மையினால் உயர்வுதாழ்வு கொள்ளும்

அகராக்களின் வழிபாட்டு முறைகள்

அகராக்கள் பல்வேறு பிரிவினராக இருப்பதுடன் தங்கள் இஷ்ட தெய்வங்களின் முறைப்படியும் சண்டையிட்டு பிரிந்துவிடுவார்கள்

கடவுள் வழிபாட்டு முறையில் வேறுபாடு
சிவ அகராக்கள் சிவனை வழிபடுபவர்கள்
கல்பவஸிஷ் அகராக்கள் பிரம்மாவை வழிபடுபவர்கள்
வைராகி அகராக்கள் விஷ்ணுவை வழிபடுபவர்கள்

கடவுளுக்கு தவம் இருப்பதில் வேறுபாடு

ஒரு அகரா பிரிவு 8 வகை தவங்களை மேற்கொள்ளும் அந்த 8 தவங்களுக்கும் 52 வகையான மர்ஹிஸ்கள் (MARHIS நடுவன்) உள்ளது. ஒவ்வொரு மர்ஹிசும் மஹந்த் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது.  இந்த நிர்வாகத்திற்கு தலைமை வகிப்பவர் ஸ்ரீ பஞ்ச் (பஞ்ச் என்ற ஐந்து தலைவர்கள் – பஞ்சாயத்து தலைவர் போன்று). இந்த ஸ்ரீ பஞ்ச் என்ற தலைவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவா, சக்தி, கணேசா ஆகிய கடவுள்களை பின்பற்று பவர்களாவர். இந்த ஸ்ரீபஞ்ச் என்ற 5 தலைவர்களையும் கும்ப மேளா என்ற விழாவின் போது தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

கும்ப மேளா என்பது என்ன?

கும்பா என்பது சமஸ்கிருத வார்த்தையாகும் இதற்கு PITCHER என்று ஆங்கிலத்தில் அழைப்பர் அதாவது கலசம் என்று கூறப்படும் கைப்பிடி இல்லாத மண் பானையாகும். அதாவது கும்ப ராசிக்காக காட்டப்படும் ஒரு வகை பானை. மேளா என்பது சந்திப்பு, கூட்டம் கூடுதல், சந்தை என்று பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள்.

இந்த கும்ப மேளாவின் ஆரம்பத்தை பற்றி கி.பி. 602-664ன் இடைப்பட்ட காலத்தின்படி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட சீன துறவி (Huan Tsang or Xuanzang)யின் குறிப்பு படி ஹர்ஷவர்த்தனர் என்ற மன்னர்தான் இதை ஆரம்பித்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய யோகி முனிபர்கள் இதை மறுக்கின்றனர்.

கும்ப மோளாவில் என்ற நடைபெறுகிறது

இங்குதான் அகரா பிரிவுகள் சங்கமிக்கிறார்கள். நிவாணமாக நடனமாடுகிறார்கள், நிர்வாணமாக வழிபடுகிறார்கள், ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக குஷ்டி மோதல்களில் ஈடுபட்டு தங்கள் திறமைகளை அகரா சாதுக்களின் தலைவர்கள் முன் காட்டுகிறார்கள். இறுதியாக நிர்வாணமாக அனைவரும் ஆற்றில் குளிக்கிறார்கள்.

இதோ இவர்கள்தான் நிர்மோஹி அகரா!

நீங்கள் மேலே கண்ட அகரா பிரிவுகளில் நிர்மோஹி அகராவும் ஒன்றாகும் இது பிற்காலத்தில் தோன்றிய 14 பிரிவுகளில் இந்த நிர்மோஹி அகரா என்ற பிரிவை அகில இந்திய அகரா பரிஷத் (அகில் பாரதிய அகரா பரிஷத்) அங்கீகரித்தது!

நிர்மோஹி அகராவின் நோக்கமும் உண்மை நிலையும்!

இந்த அமைப்பு வைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி தோற்றுவிக்கப்பட்டது. இவர்களின் கடவுள் ஹனுமான் அதாவது ராமாயணம் என்ற இதிகாச கற்பனைக் கதையின் கதாநாயகனான ராமனுடை சேவகன் ஹனுமான்! இந்த அமைப்பின் தலைவர் மஹந்த் பாஸ்கர தாஸ் என்பவராவார்.  இந்த அமைப்பினுடைய பெயரான நிர்மோஹி அகார என்பதற்கு ஒரு பொருள் உள்ளது அதாவது யாருடனும் ஒன்றிப்போகாத குழு. (NIRMOHI AKHARA means GROUP WITHOUT ATTACHMENT) இதன் தலையயை கோட்பாடு யாருடனும் ஒத்துப்போகாமல் வாழ்வதே!

நிர்மோஹி அகராவின் ஆரம்பகால சதியும் தோல்வியும்!

இந்த நிர்மோஹி அகரா அமைப்பு 1949ம் ஆண்டுதான் பாபர் மசூதியுடன் தொடர்புடையது என்று அனைவராலும் பேசப்படுகிறது ஆனால் அது முற்றிலும் தவறான கருத்தாகும் இந்த அமைப்பு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திலேயே இனக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டு 1885ல் பாபர் மசூதியின் இடத்தை சொந்தம் கொண்டாடியது!

அடிமை இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கத்தின் நீதிமன்றத்தில் 1885ம் ஆண்டு ஃபைசாபாத் (FAIZABAD) ஒரு சூட் பைல் (நீதி மன்ற வழக்கு) ஒன்றை தாக்கல் செய்தது அந்த வழக்கில் இவர்கள் முன்வைத்த வாதம் இதோ "அயோத்தி என்ற பகுதியில் ராமர் (ராம் சபுத்ரா) கோவில் இருந்ததாகும்  இது பாபர் மசூதிக்கு மிக அருகாமையில் இருந்ததாகும் கூறப்பட்டிருந்தாக அறியப்படுகிறது. ஆனால் அன்றைய ஃபைசாபாத் நீதிமன்ற நீதிபதிகள் இந்த பிரச்சினையை வளர்க்கவிடாமலும் பிரச்சினை நீடித்தால் இனக்கலவரம் ஏற்பட்டு சமுதாயம் பிரச்சினைக்கு ஆளாக நேரிடும் என்றும் கருதி ஆங்கில ஏகாதிபத்திய அரசாங்கம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது! மேலும் கோவிலை கட்ட இந்த யோகி அமைப்பு முறையிட்ட பரிந்துரையின் மீதும் தடை விதிக்கப்பட்டது. இது நிர்மோஹி அகரா என்ற இந்த இந்துத்துவா அமைப்பின் மீது விழுந்த முதல் அடியாகும்!  இந்த பலமான இடியை தாங்கிக்கொள்ள இயலாத இந்த அமைப்பு 64 ஆண்டுகாலமாக பொங்கிக்கொண்டே இருந்தது! பின்னர் 1949ல் சுதந்திர இந்தியாவில் மீண்டும் தன் பழைய கதையை தொடர்ந்து வழக்கு தொடர்ந்தது! இந்த நேரத்தில் இவர்கள் முன்வைத்த வாதம் பாபர் மசூதி அந்த பகுதியில் இல்லை என்பதே!

இறுதியாக இந்த நிர்மோஹி அமைப்பு 1989ல் உத்திரப்பிரதேச அரசாங்கத்தின் மீதே லாசூட் (LAWSUIT) என்ற வழக்கை தொடர்ந்தது. அதன்படி இவர்கள் நீதிமன்றத்தை அணுகி பாபர் மசூதியின் இடத்தை தங்களுக்கு வழங்கி ராமரை வழிபட வழிவகை செய்வதேயாகும். இந்த வழக்கு உத்திரப் பிரதேச அரசாங்கத்தின் மீது தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் பிறகு நடைபெற்றவை படங்களாக உங்கள் முன் இதோ

யார் இந்த நிர்மோஹி அகரா?

முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்


 

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.


--
*hajas*

*http:llwww.hajacdm*.blogspot.com           Tamil Muslim Tube Page<http://hajacdm.blogspot.com/>


http://www.tamilmuslimemailpage.blogspot.com/

ஹலாலான உழைப்பின் சிறப்பு

ஹலாலான உழைப்பின் சிறப்பு


M. முஹம்மது இப்ராஹீம் பாகவி, பேராசிரியர், மதரஸா காஷிபுல் ஹுதா, சென்னை.


இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)

உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)

பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :

நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை - மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.

எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.

நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்

நபி லூத்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி யஸஃ (அலை) அவர்கள் - விவசாயம்

நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்

நபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்

நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்

நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்

நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்

நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்

நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல

நபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்

சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.

3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.

7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.

10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.

11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், "இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்" எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.

ஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:

நான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.

ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37

ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. "பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், "சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்" என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203) நன்றி:மனாருல்ஹுதா ஜூலை 2007

இறுதி நாளும் அதன் அடையாளங்களும்

இறுதி நாளும் அதன் அடையாளங்களும்


1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:

நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. (54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக இருக்கிறார்கள்.(21:1)

எனினும் அது நெருக்கமாக இருக்கிறதென்பது மனித அறிவால் அறிந்து கொள்ளக்கூடிய விஷயமல்ல. அதை அவர்கள் அறிந்து கொள்ளவும் முடியாது. எனினும் அல்லாஹ்வின் விசாலமான அறிவையும் உலகத்தில் கடந்துவிட்ட கால அளவையும் கவனிக்கும்போது மறுமைநாள் சமீபமானது என அறியலாம். மறுமை பற்றிய அறிவு அல்லாஹ் தனக்கே சொந்தமாக்கிக் கொண்ட மறைவான விஷயங்களிலுள்ளதாகும். அவன் இவ்விஷயத்தைத் தனது படைப்புகளில் எவருக்கும் அறிவித்துக் கொடுக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

மக்கள் உம்மிடம் மறுமை நாள் பற்றிக் கேட்கிறார்கள். நிச்சயமாக அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறதென நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபமாக வந்துவிடலாம். (33:63)

நபி(ஸல்) அவர்கள் இறுதி நாள் நெருங்கிவிட்டது என்பதை அறிவிக்கக்கூடிய அடையாளங்களைக் கூறியுள்ளார்கள். அவை: தஜ்ஜால் வருவது இது மக்களுக்கு மிகப் பெரும் குழப்பமாக அமையும். மக்களில் அதிகமானோர் ஏமாந்து போகுமளவிற்கு சில அற்புதங்களைச் செய்து காட்டுவதற்கு அல்லாஹ் அவனுக்கு சக்தி வழங்குவான். அதாவது வானத்திற்கு உத்தரவு போடுவான். அது மழை பொழியும். புற்பூண்டுகளை முளைவிக்கும்படி பூமிக்கு ஆணையிடுவான். அது அவற்றை முளைவிக்கும். இறந்தவனை உயிர்ப்பிப்பான். இன்னும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்வான்.

அவனைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவன் ஒற்றைக் கண்ணன். சுவர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சுவர்க்கம் என்று கூறுவானோ அது நரகமாகும். அவன் எதை நரகமென்று கூறுவானோ அது சுவர்க்கமாகும். அவன் பூமியில் நாற்பது நாட்கள் இருப்பான். அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும் ஒரு நாள் ஒரு மாதம்;; போன்றும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதரண நாட்கள் போன்றுமிருக்கும். பூமியில் மக்கா மதீனா வைத்தவிர அவன் நுழையாத இடங்களே இருக்காது.

மேலும் அதன் அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது சுபுஹுத் தொழுகை நேரத்தில் டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளை மனாராவிலிருந்து ஈஸா(அலை) அவர்கள் இறங்கி வருவார்கள். அவர்கள் சுபுஹுத் தொழுகையை மகளுடன் தொழுவார்கள். அதன் பின் தஜ்ஜாலை தேடிச் சென்று கொன்று விடுவார்கள். சூரியன் மேற்கில் உதிப்பதும் இறுதி நாளின் அடையாளமாகும். அதை மக்கள் காணும்போது நடுங்கி ஈமான் கொள்வார்கள். எனினும் அவர்களின் ஈமான் அவர்களுக்குப் பலனளிக்காது. இறுதி நாளுக்கு மேலும் பல அத்தாட்சிகளுள்ளன.

2- இறுதி நாள் பாவிகளின் மீதே ஏற்படும். அதாவது இறுதி நாள் ஏற்படும் முன் முஃமின்களின் உயிர்களைக் கைப்பற்றக்கூடிய தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்பிவைப்பான். அதன் பின்னர் அல்லாஹ் எல்லா படைப்பினங்களையும் மரணிக்கச் செய்து இவ்வுலகத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று நாடினால் சூர் ஊதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மலக்கிடம் அதில் ஊதும்படி ஏவுவான்.(சூர் என்பது ஒரு பெரும் கொம்பாகும்) மக்கள் அந்த சப்தத்தைக் கேட்டவுடன் மயங்கிவிடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்:

சூர் ஊதப்படும். அப்போது அல்லாஹ் நாடியவர்களைத் தவிர வானம் பூமியிலுள்ள அனைவரும் மயங்கிவிடுவார்கள்.(39:68) இது வெள்ளிக்கிழமை ஏற்படும். அதன் பின்னர் அனைவரும் மரணித்துவிடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.

3- மனிதனின் உடலனைத்தும் அழிந்துவிடும். மனிதனின் முதுகந்தண்டின் கடைசியிலுள்ள ஒரு சிறு எலும்பைத் தவிர வேறு எல்லாவற்றையும் பூமி தின்றுவிடும். எனினும் நபிமார்களின் உடல்களைப் பூமி தின்னாது. அல்லாஹ் வானிலிருந்து ஒரு தண்ணீரை இறக்கிவைப்பான். (அழிக்கப்பட்ட) உடல்கள் வளர்ந்துவிடும். அல்லாஹ் மக்களை உயிரூட்டி எழுப்ப நாடினால் சூர் ஊதும் பொறுப்பிற்குரிய மலக்கு இஸ்ராஃபீல் அவர்களை உயிர்ப்பிப்பான். அவர் இரண்டாம் முறை சூர் ஊதுவார். அல்லாஹ் எல்லாப் படைப்புகளையும் உயிர்ப்பிப்பான். மக்கள் தம் மண்ணறைகளிலிருந்து அல்லாஹ் அவர்களை ஆரம்பமாக படைத்தது போன்று செருப்பு அணியாதவர்களாக நிர்வாணிகளாக விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக வெளிவருவார்கள். அல்லாஹ் சொல்கிறான்:

சூர் ஊதப்படும் அந்நேரம் அவர்கள் மண்ணறையிலிருந்து அவர்களின் இறைவனிடம் விரைந்து வருவார்கள். (36:51)

அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) கற்களின் பால் விரைந்து செல்பவர்களைப்போல் அந்நாளில் கபுருகளிலிருந்து வெளியேறுவார்கள். அவர்களின் பார்வை கீழ்நோக்கி இருக்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அந்நாள் தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்த நாளாகும். (70:43-44)

82-1 வானம் பிளந்து விடும்போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும். (82:1-5)

இதன் பின் மக்கள் மஹ்ஷர் மைதானத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். அது பரந்த விசாலமான பூமியாகும். காஃபிர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவார்கள். எப்படி அவர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவர்கள்? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்களைப் பாதங்களால் நடக்க வைத்தவன் அவர்களை முகம் குப்புறவும் நடக்க வைக்க சக்தி உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் நல்லுரையை; புறக்கணித்து நடந்தவன் மறுமையில் குருடனாக எழுப்பப்படுவான். அந்நாளில் சூரியன் மக்களை நெருங்கியிருக்கும். அப்போது மனிதர்கள் அவரவர்களின் செயல்கள் அளவிற்கு வேர்வையிலிருப்பார்கள். சிலருக்கு கணுக்கால் வரை வேர்வை இருக்கும். சிலருக்கு இடுப்பளவு இருக்கும். இன்னும் சிலர் முழுக்க வேர்வையில் மூழ்கிவிடுவார்கள்.

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அவனின் நிழலின் கீழ் சிலர் நிழல் கொடுக்கப்படுவார்கள். அங்கு இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான். நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன் அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன் தனது உள்ளத்தைப் பள்ளியுடன்; தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன் அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு மனிதர்கள் அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன் வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன் தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன். இது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.

அந்நாளில் மக்கள் கடினமான தாகத்திலிருப்பார்கள். அன்றைய ஒரு நாள்(நம் கணக்குப் படி) ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். எனினும் முஃமினுக்கு ஒரு தொழுகையை நிறைவேற்றும் அளவுக்கு அந்நேரம் கழிந்துவிடும். முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களின் தண்ணீர்த் தடாகத்திற்கு வந்து தண்ணீர் அருந்துவார்கள். தண்ணீர்த் தடாகமென்பது நமது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த மிகப்பெரும் மரியாதையாகும். மறுமை நாளில் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் இதில் நீர் அருந்துவார்கள். அதன் தண்ணீர் பாலை விட மிக வெண்மையானதாகவும் தேனைவிட மிகச் சுவையானத கவும்; கற்பூர மணத்தை விட மிக நறுமண முள்ளதாகவுமிருக்கும். அதன் பாத்திரங்கள் வானின் நட்சத்திரங்கள் அளவு இருக்கும். அதில் ஒரு முறை நீர் அருந்தியவன் அதன் பின் ஒருபோதும் தாகிக்கவே மாட்டான்.

மஹ்ஷர் மைதானத்தில் மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதையும் கேள்வி கணக்குக் கேட்கப்படுவதையும் எதிர்பார்த்தவர்களாக அங்கு நீண்ட நேரமிருப்பார்கள். கடினமான வெப்பத்தில் நிற்பதும் எதிர்பார்ப்பதும் நீண்டு விடுகிறபோது மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதற்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்பவர்களைத் தேடுவார்கள். அப்போது ஆதம்(அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்கள் தம் இயலாமையைக் கூறிவிடுவார்கள். பிறகு முறையே நூஹ்(அலை) இப்றாஹீம் (அலை) மூஸா(அலை) ஈஸா(அலை) என ஒவ்வொரு நபியிடமும் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தமது இயலாமையைக் கூறிவிடுவார்கள். இறுதியாக முஹம்மது(ஸல்) அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்கள் அதற்கு தாமே தகுதியானவர் எனக் கூறி அர்ஷிற்குக் கீழ் சுஜுது செய்வார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதிக்கச் செய்கின்ற எல்லாப் புகழ் வார்த்தைகளையும் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்வார்கள். அப்போது முஹம்மதே! உமது தலையை உயர்த்தும் நீர் கேளும் கொடுக்கப்படுவீர். பரிந்துரை செய்யும் உமது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்படும். அப்போது அல்லாஹ் தீர்ப்புச் செய்யப்படுவதற்கும் கணக்குக் கேட்கப்படுவதற்கும் அனுமதிவழங்குவான். முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தினர்தாம் முதன் முதலில் கேள்வி கணக்கு கேட்கப்படுவார்கள்.

அடியான் செய்த செயல்களில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகை பற்றியாகும். அது சரியாக இருந்து எற்றுக்கொள்ளப்பட்டு விட்டால் ஏனைய செயல்கள் கவனிக்கப்படும்;. அது மறுக்கப்பட்டு விட்டால் ஏனைய செயல்களும் மறுக்கப்பட்டு விடும். இதுபோன்றே ஒரு அடியான் ஐந்து காரியங்கள் பற்றி விசாரிக்கப்படுவான். அதாவது அவன் தனது வாழ்நாளை எவ்வாறு கழித்தான் தன் வாலிபத்தை எப்படி பயன்படுத்தினான் தன் பொருளை எப்படி சம்பாதித்து எவ்வழியில் செலவழித்தான் தான் கற்றதில் எந்த அளவுக்கு செயல்படுத்தினான் என்றெல்லாம் விசாரிக்கப்படுவான்.

மேலும் அடியார்களிடையே தீர்ப்புச் செய்யப்படும் முதல் காரியம் இரத்தங்கள் (கொலை, காயம்)பற்றிய தீர்ப்பாகும். அந்நாளில் நன்மை தீமைகளைக் கொண்டே நியாயம் வழங்கப்படும். ஒரு மனிதனின் நன்மை எடுக்கப்பட்டு அது அவனால் பாதிக்கப்பட்டவனிடம்; கொடுக்கப்படும். நன்மைகள் தீர்ந்து விட்டால் பாதிக்கப்பட்டவனின்; தீமையை எடுத்து இவனிடம் போடப்படும். அங்கு ஸிராத் என்னும்; பாலம் அமைக்கப்படும். அது முடியை விட மெல்லிய தாகவும் வாளைவிட கூர்மையானதாகவுமிருக்கும். அது நரகத்தின் மீது அமைக்கடிருக்கும். மக்கள் அதில் அவரவர் செயல்களைப் பொருத்து கடந்து செல்வார்கள். சிலர் கண் சிமிட்டும் நேரத்திற்குள் கடந்து விடுவார்கள். சிலர் காற்று வேகத்தில் செல்வார்கள்;. வேறு சிலர் மிக விரைவாகச் செல்லும் குதிரை போன்றும் செல்வார்கள்;. இன்னும் தவழ்ந்து தவழ்ந்து செல்பவர்களுமிருப்பார்கள். அப்பாலத்தின் மீது கோர்த்திழுக்கக் கூடிய கொழுத்துச் சங்கிலிகளுமிருக்கும். அது மனிதர்களைப் பிடித்து நரகில் தள்ளிவிடும்.

காஃபிர்களும் அல்லாஹ் நாடிய பாவிகளான முஃமின்களும் நரகில் விழுந்து விடுவார்கள். காஃபி‏ர்கள் நிரந்தரமாக நரகிலேயே இருப்பார்கள். பாவியான முஃமின்கள் அல்லாஹ் நாடிய அளவிற்கு வேதனை செய்யப்பட்டு பின் சுவர்க்கம் செல்வார்கள் நரகம் சென்று விட்ட சிலருக்கு பரிந்துரை செய்வதற்காக நபிமார்கள் ரசூல்மார்கள் நல்லடியார்களில் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பரிந்துரை செய்ய அனுமதி வழங்குவான். இவர்களால் பரிந்துரை செய்யப்படுபவர்களை அல்லாஹ் நரகிலிருந்து வெளியேற்றுவான்.

இப்பாலத்தை கடந்து சென்ற சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அமைக்கப்பட்டிருக்கும்; ஒரு பாலத்தில் நிற்பார்கள். அங்கு அவர்களில் சிலருக்கு சிலரிடமிருந்து கணக்குத் தீர்க்கப்படும். யார் தனது சகோதரனுக்கு அநியாயம் செய்திருக்கிறாரோ அவருக்கு நியாயம் வழங்கப்படாதவரை அல்லது பாதிக்கப்பட்டவர் அவனை திருப்தி கொள்ளாத வரை சுவர்க்கம் செல்ல முடியாது. சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விட்டால் மரணம் ஒரு ஆட்டின் வடிவில் கொண்டு வரப்பட்டு சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அறுக்கப்படும். சுவர்க்கவாசிகளும் நரகவாசிகளும் அதைப் பார்ப்பார்கள். பிறகு சுவர்க்கவாசிகளே! உங்களுக்கு மரணமே கிடையாது இதிலேயே நீங்கள் நிரந்தரமாக இருங்கள் என கூறப்படும்.

நரகமும் அதன் வேதனையும்
அல்லாஹ் கூறுகிறான்: நரகத்தைப் பயந்து கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அது காஃபிர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. (2:24)

நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்கள்: நீங்கள் எரிக்கும் நெருப்பு நரகின் நெருப்பில் எழுபது மடங்குகளில் ஒன்றாகும். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! (பாவிகளைத் தண்டிப்பதற்கு) இதுவே போதுமெனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இதில் அறுபத்தொன்பது மடங்குகள் அதிகமாக்கப்படும். அவையனைத்தும் இது போன்ற வெப்பமுள்ளதாக இருக்கும். எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நரகம் ஏழு அடுக்குகளைக் கொண்டதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கும் மற்றதைவிட மிகக் கடுமையான வேதனை உள்ளதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கிலும் அதற்குத் தகுதியானவர்கள் தத்தமது செயல்களைப் பொறுத்து இருப்பார்கள். நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டிலிருப்பார்கள். அதுதான் மிகக் கடுமையான வேதனைக்குரியதாகும். காஃபிர்களுக்கு நரகத்தில் வேதனை இடைவிடாத நிரந்தர வேதனையாகும். அவர்கள் நரகில் கரிந்துவிடும் போதெல்லாம் வேதனையை அதிகப்படுத்துவதற்காக திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படுவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: அவர்களின் தோல்கள் கரிந்திடும் போதெல்லாம் அவர்கள் வேதனை அனுபவிப்பதற்காக வேறு தோல்களை நாம் ஏற்படுத்துவோம்.(4:56) எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது. அவர்கள் மரணம் அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கப்படவும் மாட்டாது. நரகத்திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இவ்வாறே நாம் எல்லா காஃபிர்களுக்கும் கூலி வழங்குவோம்.(35:36)

அதில் அவர்கள் விலங்கிடப்படுவார்கள். அவர்களின் கழுத்துக்களிலும் விலங்கிடப்படும் அல்லாஹ் சொல்கிறான்: இன்னும் அந்நாளில் குற்றவாளிகளைச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.(14:49-50)

நரகவாசிகளின் உணவு ஸக்கூம் என்ற கள்ளி மரமாகும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக ஸக்கூம்(கள்ளி) மரம் பாவிகளின் உணவாகும். அது உருக்கப்பட்ட செம்பு போன்றிருக்கும். அது வெந்நீர் கொதிப்பதைப் போன்று வயிற்றில் கொதிக்கும்.(44:41-46)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸக்கூம் மரத்திலிருந்து ஒரு சொட்டு உலகில் விழுந்து விட்டால் உலகிலுள்ளவரின் வாழ்க்கை வீணாகிவிடும். அப்படியானால் அதுவே உணவாக கொடுக்கப்படுபவர்களின் நிலை எப்படி இருக்கும்? (திர்மிதி) நரக வேதனையின் கடுமையையும் சுவர்க்க பாக்கியத்தின் பெருமையையும் பின் வரும் ஹதீஸ் விளக்கிக் காட்டுகிறது: மறுமையில் உலகில் மிகுந்த வசதி வாய்ப்புடன் வாழ்ந்த காஃபிர்களில் ஒருவன் கொண்டு வரப்படுவான். அவனை நரக நெருப்பில் ஒரு முறை முக்கப்படும். பின்னர் அவனிடம் உனக்கு(உலகில்) ஏதேனும் வசதி இருந்ததா? எனக் கேட்கப்படும். அப்போது அவன் எந்தப் பாக்கியமும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான். ஒரு முறை நரகத்தில் முக்கியதால் உலக பாக்கியங்கள் அனைத்தையும் அவன் மறந்து விடுகிறான். இவ்வாறே உலகில் மிகப்பெரும் கஷ்டத்தில் வாழ்ந்த ஒரு முஃமின் கொண்டு வரப்பட்டு ஒரு முறை சுவர்க்கத்தில் புகுத்தப்படுவான். பின்னர் (உலகத்தில்) ஏதேனும் உனக்கு கஷ்டமிருந்ததா? எனக் கேட்கப்படுவான். அதற்கவன் எந்தக் கஷ்டமும் வருமையும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான். சுவர்க்கத்தில் ஒரு முறை புகுத்தப்பட்டதால் உலகில் அவன் அனுபவித்த கஷ்டம் வறுமை தூப்பாக்கியம் அனைத்தையும் அவன் மறந்துவிடுவான். (முஸ்லிம்)

சுவர்க்கம்
சுவர்க்கம் இறைவனின் நல்லடியார்களுக்குரிய கண்ணியமான நிரந்தரமான வீடாகும். அதிலுள்ள பாக்கியங்கள் எந்தக் கண்ணும் கண்டிராத எந்தக் காதும் கேட்டிராத எந்த மனித உள்ளத்திலும் உதித்திராதவையாகும். அது மனிதன் படித்ததற்கும் கேள்விப்பட்டதற்கும் அப்பாற்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் செய்த(நற்)செயல்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை எந்த ஒரு ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.(32:17)

சுவர்க்கத்தின் அந்தஸ்த்துகள் முஃமின்களின் செயல்களைப் பொருத்து ஏற்றத் தாழ்வு உடையதாகும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் அந்தஸ்த்துகளை அல்லாஹ் உயர்த்துகிறான்.(58:11)

சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பியவற்றை உண்ணவும் பருகவும் செய்வார்கள். அவற்றில் நிறம் மாறிவிடாத தண்ணீர் ஆறுகளும் ருசி மாறாத பாலாறுகளும் தெளிவான தேனாறுகளும் சுவையான மதுபான ஆறுகளும் உள்ளன. அவர்களின் மது உலக மது போன்றதல்ல. அல்லாஹ் கூறுகிறான்: தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும் (அது) மிக்க வெண்மையானது அருந்துபவருக்கு மதுரமானது. அதில் கெடுதியுமிராது. அதனால் அவர்கள் புத்தி தடுமாறவும் மாட்டார்கள்.(37:45-47)

சுவர்க்கத்தில் ஹுருல் ஈன் பெண்கள் மணமுடித்து வைக்கப்படுவார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''சுவர்க்கத்துப் பெண்களில் ஒரு பெண் உலகத்தாரிடம் வந்துவிட்டால் வானம் பூமிமிக்கிடையே உள்ளவற்றை ஒளிமயமாக்கிவிடுவாள். அவற்றில் நறுமணத்தை நிரப்பிவிடுவாள்".(புகாரி)

சுவர்க்கவாசிகளின் மிகப்பெரும் பாக்கியம் அவர்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதாகும். சுவர்க்கவாசிகள் மல ஜலம் கழிக்கவோ மூக்குச் சிந்தவோ உமிழவோ மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கமாகவும் வியர்வை கஸ்தூரியாகவுமிருக்கும். அவர்களின் இவ்வருட்பாக்கியம் நின்றுவிடவோ குறைந்திடவோ செய்யாத நிரந்தர பாக்கியமாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சுவர்க்கம் நுழைகிறாரோ அவர் பாக்கியம் பெற்று விட்டார். சிரமப்படவோ சோர்வடையவோ மாட்டார். சுவர்க்கவாசிகளின் குறைந்த பங்கு உலகமனைத்தும் பத்துமுறை வழங்கப்படுவதை விடவும் சிறந்ததாகும். நரகிலிருந்து வெளியேறி கடைசியில் சுவர்க்கம் நுழைபவன் தான் இக்குறைந்த பங்கை உடையவன்.