முஸ்லிம் இனப்படுகொலையை தடுக்கத் தவறிய மோடிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் 'குட்டு'!



---------- Forwarded message ----------
From: mugavai abbas <mugavaiabbas@gmail.com>
Date: 2012/2/17
Subject: |TMB| முஸ்லிம் இனப்படுகொலையை தடுக்கத் தவறிய மோடிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் 'குட்டு'!
To: tamilmuslimbrothers@googlegroups.com, unitedtamilmuslims@yahoogroups.com, tmpolitics@googlegroups.com
Cc: Keelakarai Anjal <keelaianjal@gmail.com>, sengiskhan online <sengiskhanonline@gmail.com>


கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த 2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய முஸ்லிம் இனப்படுகொலை நடந்தேறியது. பல்லாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு, முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களும் காவி வெறியில் கருகின. இந்த கலவரத்தில் சேதம் அடைந்த மத வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தர விடக் கோரி, குஜராத் உயர்நீதிமன்றத்தில்  குஜராத் இஸ்லாமிய நிவாரண குழு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ''நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசு, கோத்ரா ரயில் எரிப்புக்குப்பின் நடைபெற்ற கலவரத்தை தடுக்கத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியதோடு, "கலவரத்தை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் மாநில அரசு செயல் பட்டதால் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு சேதம் ஏற்பட்டது. அவற்றை பழுதுபார்த்து தேவையான இழப்பீடு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும். கலவரத்தின்போது சேதம் அடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிறு வனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதுபோல், வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள 26 முதன்மை செசன்சு நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் மாவட்டங்களில் இருந்து இதற்கான விண்ணப்பங்களைப் பெற்று இழப்பீடுத் தொகை பற்றி முடிவு எடுக்க வேண்டும். அது குறித்து 6 மாதங்களுக்குள் உயர்நீதிமன்றத்திற்கு அவர்கள் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.''என்று கூறியுள்ளனர். 

மேலும், "கலவரத் தின்போது அழிக்கப் பட்ட அல்லது சேதம் அடைந்த வழிபாட்டுத் தலங்களை பழுது பார்த்து சீரமைப்பதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை என்றும், இந்த மனு அரச மைப்புச் சட்டத்தின் 27-ஆவது பிரிவுக்கு எதிரானது என்றும் வாதிட்ட மோடி அரசின் வழக்கறிஞரின் வாதமும் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்த  குஜராத் இஸ்லாமிய நிவாரண குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹக்கிம், "வழிபாட்டுத் தலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருக்கும் இந்த தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது'' என்று கூறி வரவேற்று இருக்கிறார்.

ஏற்கனவே நவீன நீரோ மன்னன் என உச்சநீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு உள்ளான மோடி, இப்போது குஜராத் நீதிமன்றத்தின் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது கவனிக்கத்தக்கது. ஆனாலும் மோடியை திறமையான முதல்வர் என்றும், பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்றும் கூறித்திரியும் 'சோ'க்களுக்கும், அம்பானிகளுக்கும்  புரியவா போகிறது?



--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

0 Responses

கருத்துரையிடுக