மசூதி குண்டு வெடிப்பு சம்பவம், தீவிரவாதி இந்திரேஷ் குமாரிடம் சிபிஐ விசாரணை!!



---------- Forwarded message ----------
From: Shahul Askar <shaaskar@gmail.com>
Date: 2010/12/26
Subject: (TMP) Re: மசூதி குண்டு வெடிப்பு சம்பவம், தீவிரவாதி இந்திரேஷ் குமாரிடம் சிபிஐ விசாரணை!!
To: madhavalayam-brothers@googlegroups.com, tamil-islam@yahoogroups.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, fromgn@googlegroups.com, k-tic-group-owner <K-Tic-group-owner@yahoogroups.com>, adiraivoice@gmail.com, adiraimanam@gmail.com, shafiq.aym@gmail.com, admin@palanibaba.in


அஜ்மீர் குண்டுவெடிப்பு:முக்கிய துப்பு கிடைத்தது - பயன்படுத்தப்பட்ட கார் சிக்கியது

Post under நேரம் 08:09 இடுகையிட்டது பாலைவனத் தூது
ஜெய்ப்பூர்,டிச.26:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சில முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2007-ம் ஆண்டு ஆஜ்மீர் தர்கா வளாகத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு சாமியார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐவரின் பெயர் விவரங்களும் கிடைத்துள்ளன. இது முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.

கருப்பு நிற சான்ட்ரோ காரைத்தான் இந்த தீவிரவாத செயலுக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கார் மத்தியப் பிரதேசத்தில் வைத்து சிக்கியுள்ளது. இந்தக் காரில் வெடிகுண்டுகளை வைத்துக் கொண்டு ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து குஜராத் மாநிலம் கோத்ராவுக்குப் போயுள்ளனர்.

கோத்ராவிலிருந்து அஜ்மீருக்கு பஸ்ஸில் வைத்துக் கொண்டு சென்றுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே அஜ்மீர் சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

தட்ஸ் தமிழ்


2010/12/24 Shahul Askar <shaaskar@gmail.com>
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 

மசூதி குண்டு வெடிப்பு சம்பவம், தீவிரவாதி இந்திரேஷ் குமாரிடம் சிபிஐ விசாரணை!!

Posted by PUTHIYATHENRAL ,
 புதுதில்லி, டிச. 23: ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். சிபிஐ தன்னை அழைத்து விசாரிப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் சதியே காரணம் என்றார் அவர்.

39C633EA7A3F158D659ED94DFAAA3.jpg

 
தில்லியில் சிபிஐ அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

தீவிரவாதி இந்திரேஷ் குமார் ஆர்எஸ்எஸ் மத்திய காரியக் குழு உறுப்பினராக உள்ளார். எனக்கும் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது இட்டுக்கட்டப்பட்டது. நான் வெளிப்படையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். ஆர்எஸ்எஸ் இயக்கத்துடனான எனது தொடர்பில் ஒளிவுமறைவு இல்லை. எனது வாழ்வை தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.

ஹைதராபாதில் உள்ள மெக்கா மசூதியில் கடந்த 2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குண்டு வெடித்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர். பைப்பில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செல்போன் மூலம் வெடிக்கச் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இந்தச் சம்பவத்தை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் தேவேந்திர குப்தா மற்று லோகேஷ் சர்மா இருவரும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் இந்து அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக போலீஸôர் தெரிவித்தனர். இவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல் சங்ரா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். மேலும் சுவாமி ஆசிமானந்திடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் சுனில் ஜோஷி மத்திய பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின் சதியில் இந்திரேஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இதையடுத்தது இந்திரேஷ் குமார் சிபிஐ அலுவலகத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
 
 
 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
 
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
 


--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

0 Responses

கருத்துரையிடுக