Fwd: [saharatamil] ஏமாறாதே தமிழா ஏமாறாதே!



---------- Forwarded message ----------
From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
Date: 2012/1/6
Subject: [saharatamil] ஏமாறாதே தமிழா ஏமாறாதே!
To:


ஏமாறாதே தமிழா ஏமாறாதே!



அமெரிக்காவின் டிரோன் உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியது எப்படி?.



---------- Forwarded message ----------
From: mohammad mohaideen <mhmddeen77@gmail.com>
Date: 2012/1/5
Subject: |TMB| அமெரிக்காவின் டிரோன் உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியது எப்படி?.
To: tmb <tamilmuslimbrothers@googlegroups.com>, mms muslimmails@googlegroups.com
 
அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக் கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. 

அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது. இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை. காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும். ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது. காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை. (மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள் இந்த விடயத்தை சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம்(RQ - 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப்பட்டை கொடுத்துக்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செயலாகச் சென்றிருக்கலாம் என்று. ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வேவுபார்த்துள்ளது என்பதே உண்மையாகும். குறிப்பிட்ட விமனம் உள்வாங்கும் GPS சமிஞ்சைகளை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றியுள்ளது.
புரியவில்லையா? அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சைகளை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதிசெய்கிறது. அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட்(தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும். ஈரான் முதலில் ஒருவகையன ஒலிக்கற்றைகளைப் பாவித்து செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது. அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர். உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர். புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான்.. தான் தரையிறங்கவேண்டிய கடைசி விமானநிலையம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது). இந்த விமானத்தை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு நிறுவனம் அதன் கட்டுப்பாட்டை சில நிமிடங்கள் இழந்தது.

அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்கவேண்டிய குறியீடுகளை தாம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத்தியுள்ளது. பறக்கும் அவ்விமானத்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்கவேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க அவ்விமானம் தனது சொந்த விமானநிலையத்துக்கு தாம் வந்துவிட்டதாகக் கருதி தரையிறங்கியுள்ளது. இருப்பினும் எல்லாவற்றையும் படு கச்சிதமாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லுனர்கள் சிறிய பிழை ஒன்றைமட்டும் விட்டுவிட்டனர். விமானத்திற்க்கும் ஓடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அவர்கள் கணக்கிடவில்லை. அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான்.
ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்காவின் அடுத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கைப்பற்றப்பட்ட விமானத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட்டர்களை அல்லது உளவு நிறுவனத்தின் கம்பியூட்டர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்பதனால் அனைத்துச் சேனல்களையும் அமெரிக்க பென்டகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கியுள்ளதாம்.

source:
கிருஸ்டியன் சயன்ஸ் மானிட்டர் தகவல் குறிப்புகளில் இருந்து

Posted by அதிரை முஜீப்

--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Fwd: |TMB| ebooks - தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.



---------- Forwarded message ----------
From: Ameen <ameenudeen_a@yahoo.com>
Date: 2012/1/4
Subject: |TMB| ebooks - தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
To: TMG <tamilmuslimbrothers@googlegroups.com>


ebooks தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
http://www.4shared.com/office/iaBLqbCi/Al_Quran_Tamil_by_Jan_Trust.html
http://www.4shared.com/office/LbGJdMlv/Al_Quran_Tamil_by_PJ.html
http://www.4shared.com/office/wcSV8Wnd/Annai_Kadeeja.html
http://www.4shared.com/office/L9dXGFXO/Aravani__aligal_.html
http://www.4shared.com/office/whTgfIKw/Concept_of_God_in_Major_Religi.html
http://www.4shared.com/office/bk_R4UzE/Duas_in_Quran.html
http://www.4shared.com/office/PQpOvfcj/Haj_Guide_Tamil.html
http://www.4shared.com/office/E1kB9HLp/Hijaab.html
http://www.4shared.com/office/mF_AgC1X/Ibn_Thaimiya.html
http://www.4shared.com/office/s3Iyv9Xj/Inna_Narppadu_Tamil.html
http://www.4shared.com/office/endEoo6x/Irai_Nesargalidam_Udhavi_Thedu.html
http://www.4shared.com/office/ywLGs420/Maanabiyin_Manitha_Neya_Kural.html
http://www.4shared.com/office/QxVxOQuA/Makkalin_Parvayil_Satharanamag.html
http://www.4shared.com/office/I9yX4mFd/Mamanithar_Tamil.html
http://www.4shared.com/office/OIj1Keg-/Mannika_padatha_Pavangal_Tamil.html
http://www.4shared.com/office/qEqsHxJO/Muthum_Pavazhamum.html
http://www.4shared.com/office/PkRcpzpe/Muthum_Pavazhamum_2.html
http://www.4shared.com/office/lunIfrNb/Nabi_vazhiyil_nam_haj.html
http://www.4shared.com/office/YRFDMn6o/Natural_medichine__tamil.html
http://www.4shared.com/office/CQ7740rd/prophet_mohamed_biography_in_e.html
http://www.4shared.com/office/y7UFCYAC/Prophet_Mohamed_History_in_Eng.html
http://www.4shared.com/office/4-yXznVl/Prophet_Mohamed_in_Tamil.html
http://www.4shared.com/office/tsIYQA7A/Ramadan_Malar_tamil.html
http://www.4shared.com/office/ywHaXqT8/Sahih_Buhari_in_Tamil.html
http://www.4shared.com/office/7J0ADHYl/Siddha_medichine__tamilpdf.html
http://www.4shared.com/office/Z8557tAZ/Suvargavasigal.html
http://www.4shared.com/office/r0IkxpoP/The_Holy_Quran_Tamil.html
http://www.4shared.com/office/4U-BgYVw/The_Quran_and_Modern_Science_E.html
http://www.4shared.com/office/2mZ6FDni/Thirukkural_in_Malayalam.html
http://www.4shared.com/office/Swt7AVXR/Thirukkural_tamil.html
http://www.4shared.com/office/g1CWI26y/Umar_Pulavar_Oru_Parvai.html
http://www.4shared.com/office/Ntaw2t0T/Vetri_Petra_Pirivinar.html
http://www.4shared.com/office/C-qHHoRD/what_is_the_sufism_tamil.html
http://www.4shared.com/office/M5xrU4_-/zakath_islam_tamil.html
http://www.4shared.com/office/KrfGsiO5/Zakathin_Mukkiyathuvm_Tamil.html
http://www.4shared.com/office/pqeKYQPH/Zakatul_Fitr_Tamil.html
 
Regards and thanks
 Ameen
 

--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Fwd: [saharatamil] Save the Indian Rupee!!!



---------- Forwarded message ----------
From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
Date: Tue, Jan 3, 2012 at 6:14 AM
Subject: [saharatamil] Save the Indian Rupee!!!
To:


 










 


Very very important ..... Please forward to all Indians
Save the Indian Rupee!!!

YOU CAN MAKE A HUGE DIFFERENCE TO THE INDIAN ECONOMY BY FOLLOWING FEW SIMPLE RULES SET FOR YOURSELF:-


Please spare a couple of minutes here for the sake of India.


It's true. We can see this in day to day life.

Here's a small example:-


Before 12 months 1 US $ = IND Rs 39
After 12 months, now 1 $ = IND Rs 50


Do you think US Economy is booming? No, but Indian Economy is Going Down.

Our economy is in your hands....

INDIAN economy is in a crisis. Our country like many other ASIAN countries, is undergoing a severe economic crunch. Many INDIAN industries are closing down.
More than 30,000 crore rupees of foreign exchange are being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages, etc... which are grown, produced and consumed here.

A cold drink that costs only 70 / 80 paisa to produce, is sold for Rs.9 and a major chunk of profits from these are sent abroad. This is a serious drain on INDIAN economy.

We have nothing against Multinational companies, but to protect our own interests we request everybody to use INDIAN products only atleast for the next two years. With the rise in petrol prices, if we do not do this, the Rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future.


What you can do about it?

1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES.
2. ENROLL as many people as possible for this cause.....



Each individual should become a leader for this awareness. This is the only way to save our country from severe economic crisis. You don't need to give-up your lifestyle. You just need to choose an alternate product.

All categories of products are available from
WHOLLY INDIAN COMPANIES.

LIST OF PRODUCTS

COLD DRINKS:-

DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE, and MASALA MILK...


INSTEAD OF
COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP
:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA


INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE



TOOTH PASTE
:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK


INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT
.


TOOTH BRUSH
: -

USE PRUDENT, AJANTA , PROMISE


INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B


SHAVING CREAM
:-
USE GODREJ, EMAMI


INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE



BLADE
:-

USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA


INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE



TALCUM POWDER
:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS


INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER



MILK POWDER
:-
USE INDIANA, AMUL, AMULYA


INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.



SHAMPOO
:-
USE LAKME, NIRMA, VELVETTE


INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE


MOBILE CONNECTIONS
:-
USE BSNL, AIRTEL


INSTEAD OF HUTCH


Food Items:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma

INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W


Every INDIAN product you buy makes a big difference. It saves INDIA. Let us take a firm decision today.


BUY INDIAN TO BE INDIAN - We are not against of foreign products.

WE ARE NOT ANTI-MULTINATIONAL. WE ARE TRYING TO SAVE OUR NATION. EVERY DAY IS A STRUGGLE FOR A REAL FREEDOM. WE ACHIEVED OUR INDEPENDENCE AFTER LOSING MANY LIVES.
THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE PEACEFULLY. THE CURRENT TREND IS VERY THREATENING.


MULTINATIONALS CALL IT GLOBALIZATION OF INDIAN ECONOMY. FOR INDIANS LIKE YOU AND ME, IT IS RE-COLONIZATION OF INDIA. THE COLONIST'S LEFT INDIA THEN. BUT THIS TIME, THEY WILL MAKE SURE THEY DON'T MAKE ANY MISTAKES.


WHO WOULD LIKE TO LET A "GOOSE THAT LAYS GOLDEN EGGS" SLIP AWAY?


PLEASE REMEMBER: POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE



RUSSIA, S.KOREA, MEXICO - THE LIST IS VERY LONG!! LET US LEARN FROM THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY. LET US DO THE DUTY OF EVERY TRUE INDIAN.


FINALLY, IT'S OBVIOUS THAT YOU CAN'T GIVE UP ALL OF THE ITEMS MENTIONED ABOVE. SO GIVE UP AT LEAST ONE ITEM FOR THE SAKE OF OUR COUNTRY!

 please forward this mail to all your friends to create awareness.

"LITTLE DROPS MAKE A GREAT OCEAN."

Engr.Sulthan




__._,_.___
Recent Activity:
    .

    __,_._,___

    Fwd: |TMB| அறிவுப்பூர்வமாக - சிந்தித்து - செயல்படும் சகோதர-சகோதரிகளே !



    ---------- Forwarded message ----------
    From: Abu Inaayaa <jeeyatrp2002@gmail.com>
    Date: 2012/1/2
    Subject: |TMB| அறிவுப்பூர்வமாக - சிந்தித்து - செயல்படும் சகோதர-சகோதரிகளே !
    To: TAMIL MUSLIM BROTHERS GOOGLE <tamilmuslimbrothers@googlegroups.com>, Tamil Muslim <tamilmuslimbrothers@gmail.com>
    Cc: K-Tic-group-owner@yahoogroups.com, k-tic-group@yahoogroups.com


    அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்).

    அன்புள்ள (அறிவுப்பூர்வமாக - சிந்தித்து - செயல்படும்) சகோதர-சகோதரிகளே !

    மாற்றுமத கலாச்சாரமான புத்தாண்டை கொண்டாடுவது - வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது மற்றும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது ஆகியவற்றை தவறு என்றும், இது ஹராம் என்றும் இந்த வலைத்தளத்தின் மூலம், குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு (இது நபி வழிக்கு புறம்பானது - யார் மாற்று மத கலாசாரத்தை பின்பற்றுகின்றார்களோ அவர்கள் என்னை சார்ந்தவர்கள் இல்லை என்ற நபியவர்களின் கூற்றை பறைசாற்றி) உண்மையான தாவா பணி K-Tic என்ற வலைத்தளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

    ஆனால் தற்போது இதே வலைத்தளத்தின் மூலம் மாநபி (ஸல்) அவர்கள் செய்யாத-சொல்லாத-அங்கிகரிக்காத மாபெரும் பாதக செயலை (மீலாது நபி விழா) அரங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவுதுபில்லாஹ்.

    மாற்று மத கலாச்சாரத்தைப் பின்பற்றக்கூடாது என்று நமக்கு எச்சரிக்கை செய்த அதே நபியவர்கள் தான், நான் செய்யாத-சொல்லாத-அங்கிகரிக்காத செயல்கள் அனைத்தும் பித்-அத், பித்-அத் அனைத்தும் வழிகேடு, வழிகேடு அனைத்தும் உங்களை நரகத்தில் சேர்க்கும் என்று எச்சரித்துள்ளார்கள்.

    ஒரு தவறு எங்காவது நடைபெற்றால், அதை தங்களுடைய கரங்களால் தடுங்கள் அல்லது நாவால் தடுங்கள் அல்லது மனத்தால் வெறுத்து ஒதுங்கி விடுங்கள், இது ஈமானின் கடைசி நிலை என்று
    நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    எனவே ! அன்புள்ள (அறிவுப்பூர்வமாக-சிந்தித்து-செயல்படும்) சகோதர - சகோதரிகளே ! அறிவுப்பூர்வமாக சிந்தியுங்கள், செயல்படுங்கள். வல்ல நாயன் எனக்கும், உங்களுக்கும், நம் அனைவருக்கும் நேரான நல்ல வழியினை காட்டுவானாக.

    இறுதியாக - இவ்வலைத்தள (K-Tic) நிர்வாகிக்கு, எதை வேண்டுமானாலும் மக்களிடம் பரப்பலாம் என்று இல்லாமல் ஆக்கப்பூர்வமான-மக்களுக்கு பயன் தரக்கூடிய நல்ல விசயங்களை மட்டும் குரான் - ஹதீசுக்கு உட்பட்டு பரப்புங்கள், வெளியிடுங்கள். மேலும் தீமை எங்கு நடந்தாலும், அது குரான் மற்றும் ஹதீசுக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக இருகரம் கொண்டு தடுங்கள்.

    அன்புடன்,

    ஜியாவுதீன். ஹ
    திருப்பட்டினம்
    0091-9790376510


    K-Tic வலைத்தளத்தின் மீலாது நபி விழா பற்றிய அறிவிப்பு விபரம் :

    ஜனவரி 27,2012 ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி! அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம் !!
     
    துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி நடத்தி வரும் பேச்சுப்போட்டி 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷல் பள்ளியில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.

    அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் உள்ளிட்ட கருத்துக்களில் உரை நிகழ்த்தலாம்.

    அனைத்து சமூகத்தினரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். மேற்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் தமிழில் மட்டுமே பேச வேண்டும். போட்டி நடைபெறும் அரங்கினுள் போட்டியாளர்கள் 15 நிமிடங்கள் முன்னதாக வந்து தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டும்.

    விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.01.2012

    மேலதிக விபரங்களுக்கு 050 5196 433 / 055 800 7909 / 050 58 53 888 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

    இந்நிகழ்விற்கு ஈடிஏ அஸ்கான், லேண்ட்மார்க் ஹோட்டல், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், அல் மஸ்ரிக் இண்டர்னேஷனல், அரபியா டாக்ஸி, அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ், இந்தியா சில்க் ஹவுஸ், நிக்காஹ்.காம் உள்ளிட்டவை அணுசரனை வழங்கியுள்ளன.

    குறிப்பு : இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் மனத்தால் வெறுத்து ஒதுங்கி நம்முடைய கடைசி நிலை ஈமானை நிருபிப்போமாக !


    --
    நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
     
    இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

    Fwd: [saharatamil] "கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!



    ---------- Forwarded message ----------
    From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
    Date: 2012/1/2
    Subject: [saharatamil] "கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!
    To:


     

    "கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!

    May 29, கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.

    கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.

    உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.

    ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.

    வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம்.

    அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையிலும் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும்.

    அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம்.

    நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு அடர்த்தி அதிகம்.

    நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை.

    மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.

    இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து.

    ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம்.

    இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன.

    ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன.

    இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது.

    வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன.

    சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

    இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
    நன்றி: சிந்திக்கவும் வலைப்பூ









    கடல் உயிரிகள் பற்றி அறிவோம்




    கடலில் வாழ்வன என்றால் மீன், நண்டு, தாவரங்கள் தவிர சிப்பிகள் மட்டும் தான் நமது நினைவில் இருக்கும்.


    ஆனால் கடலில் வாழு‌ம் உ‌யி‌ரின‌ங்க‌ள் நிறைய உண்டு. அதாவது கடல் அல்லி, கடல் தாமரை, ஆல்கை நோநேரியா என்பவை அதில் முக்கியமானவையாகும்.

    கடல் உயிரி என்று சொல்லிவிட்டு தாவரங்கள் பெயரைச் சொல்லுவதாக எண்ண வேண்டாம். இவை அனைத்தும் கடல்வா‌ழ் உயிரிதான்.

    கடல் அல்லி

    கடல் அல்லி என்பது, கடல் நீரில் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டு வசிக்கும். முன் பகுதியில் வாயைச் சுற்றி பல கைகள் காணப்படுகின்றன. இவை இரையைப் பிடிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கும் பயன்படுகின்றன.

    பார்ப்பதற்கு செடி போன்று காட்சி அளிக்கும் இது ஒரு அரிய உயிரியாகும். அதன் அருகில் வரும் மீன்களை பிடித்து உண்ணும்.

    கடல் தாமரை (Sea anamone)

    webdunia photo WD
    கடல் தாமரையின் வாய்ப் புறத்தைச் சுற்றி காணப்படும் கைகள் ஒரு தாமரை மலரின் இதழ்கள் போன்று தோற்றமளிக்கும். இது ஓர் ஈரடுக்கு உயிரி.

    துறவி எனப்படும் உயிரியோடு இது கூட்டு வாழ்க்கை நடத்துகிறது.

    இது தன் அடிப்பகுதியை துறவி நண்டின் ஓட்டின் மீது ஒட்ட வைத்துக் கொள்கிறது. இதனால் நண்டு நகர்ந்து செல்லும் இடங்களுக்கெல்லாம் இதனால் செல்ல முடிகிறது.

    அதனால் இவ்வுயிரியின் உணவுப் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. இதனிடமுள்ள கொட்டும் செல்கள் என்ற தனிச்சிறப்பு வாய்ந்தவை. இதனால் உயிரிகளைப் பிடிக்கவும் முடியும், எதிரிகளை அழிக்கவும் முடியும்.

    ஆல்கை நோநேரியா (Alcynonaria)



    ஆல்கை நோநேரியா ஒரு குழியுடலி. உடல் உருண்டை வடிவமானது. இரு பக்க சமச்சீர் கொண்டது. இது கடலுக்கடியில் இருக்கும் பாறைகளிலும், கற்களிலும் ஒட்டிக் கொள்ள வசதியாக ஒரு பசையைச் சுரக்கிறது. விலங்குகள் தோன்றிய பின் உருவான விலங்குகளில் இது மூன்றாவதாகத் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

    இதுவும் ஈரடுக்கு உயிரிதான். இரண்டு அடுக்குகளுக்கு மத்தியில் வழவழப்பான திரவம் உள்ளது.




    __._,_.___

    __,_._,___

    Fwd: [saharatamil] மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்



    ---------- Forwarded message ----------
    From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
    Date: 2012/1/2
    Subject: [saharatamil] மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
    To:


     

    மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்












    1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
    காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

    2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
    இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

    3. புகை பிடித்தல்
    மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

    4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
    நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

    5. மாசு நிறைந்த காற்று
    மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

    6.தூக்கமின்மை
    நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

    7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
    தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

    8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
    உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

    9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
    மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

    10. பேசாமல் இருப்பது
    அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
      Dr.M.Sathick from Darulsafa


    Engr.Sulthan

    __._,_.___
    Recent Activity:
      .

      __,_._,___