சுதந்திரமா...








Slave.jpg


அஸ்ஸலாமு அலைக்கும்,

 

அரைக்குறை ஆடை

சுதந்திரமா;

நிர்வாணப்படுத்திப் பார்க்கும்

உலகத்தின் தந்திரமா!

 

கண்காட்சி உனக்கிட்டப் பெயர்

கலாச்சாரமா;

கண்களுக்குக் கிடைக்கும்

விபச்சாரமா!

 

கவர்ச்சிக் காட்டிக்

கிளர்ச்சியூட்ட நீ

என்ன போதையா;

வன்கொடுமைக்கு

அழைத்துச் செல்லும் பாதையா!

 

 

முன்னேறிவிட்டோம் என

முழக்கமிட்டுக் கொண்டு;

இன்னும் 33 சதவீதம்

கேட்கிறாய் இன்று!

 

கண்ணியம் காக்கும் பெண்மைக்கு

மருந்தொன்று உண்டு;

மணக்கும் இஸ்லாத்தைக் கொண்டு!

நுழைந்து விடு இன்று

 

-யாசர் அரஃபாத்

http://itzyasa.blogspot.com


--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.




--
Shajahan.S
Hash10 telecom pvt ltd,
shajahanhash10@gmail.com,
Cell No : 9790134301.

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

Fwd: (TMP) உணரப் படாத தீமை சினிமா



---------- Forwarded message ----------
From: A.M.Haris . <harisimam@hotmail.com>
Date: 2010/10/28
Subject: (TMP) உணரப் படாத தீமை சினிமா
To: sahara tamil groups <saharatamil@yahoogroups.com>


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

உணரப் படாத தீமை சினிமா

சகோதரர் M. அன்வர்தீன்


'நம் பிள்ளைகளுக்குப்

பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா

மீசை முளைக்க வைத்து விட்டது.

இந்த அழுக்குத் திரை

சலவை செய்யப்படுமா?

இல்லையெனில்…

மக்களைச் சுருள வைக்கும்

திரைப்பட சுருளையெல்லாம்

ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்'

சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் வைர வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.

கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், "அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா' என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி. தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லை போலும்; இல்லையென்றால் இந்நேரம் கண்டனக் கூட்டம் தான். இவையெல்லாம் சினிமாவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் கொடுக்கும் certificates.

முஸ்லிம்களால் உணரப்படாத தீமைகள் என்று பட்டியல் போட்டால் அதில் வட்டி, சினிமா, கிரிக்கெட் என்று தொடரும். இவற்றில் சினிமாவைப் பற்றிய இஸ்லாத்தின் பார்வையை குர்ஆன், ஹதீஸில் ஆதாரத்துடன் சுருக்கமாக ஆராய்வோம்.

அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடிய ஒரு தகவல் தொடர்பு சாதனம் 'சினிமா' என்று பட்டிமன்றம் வைக்காமல் முடிவு செய்து விடலாம். அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து விட்டது. ஆனால் அதன் அவலநிலை அதல் பாதாளத்தில் உள்ள்து.
 
நடிப்புத் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை,  தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள், இயற்கையாக ஏற்படக்கூடிய காம உணர்வை முக்கால் நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை தூண்டி பணத்துக்காக எதையும் செய்யும் நடிகைகள், மணிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள்,  ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள்,  சினிமாவைப் பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள்..  அப்பப்பா பட்டியல் நீள்கிறது!   இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
 
ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும் ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான் இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால் விபச்சாரம்.

'விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான நிலையில் இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை' எனற ஹதிஸை இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சாமானியர்கள் முதல் சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகி வருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம் பற்றிய அக்கறை கவலை கொள்ளச் செய்கிறது. "விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?" என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டியது அவசியம். இது சினிமா செய்த சாதனை.

'கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம்.  காதால் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும் விபச்சாரம்.  இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான உறுப்பு உண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித் தள்ளிவிடும்' – ஹதீஸின் சுருக்கம். 

சினிமாவில் நடிப்பவர்கள், மனித சமுதாயம் முழுவதையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது?  குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.
 
வேதனையான விஷயம் என்னவென்றால், நான் ஏகத்துவத்தில் இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய எத்தனையோ பேர் சினிமா பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.  முக்கியமாக வெளிநாட்டில் வசிப்பவர்கள்,  வார விடுமுறை நாட்களில் அன்றைய ரிலீஸ் படத்தை பார்த்துவிட்டு, தாமதமாக உறங்கி, ஷைத்தான் காதில் சிறுநீர் கழிப்பதையும் சட்டை செய்யாமல், கொரட்டை விட்டு தூங்கி, பஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு,  நேராக ஜும்ஆ தோழுகைக்கு எழுந்திருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?  சிலர் பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் போது தயாராவதை பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும்!  எதற்காக தொழுகக்காக அல்ல! தூங்குவதற்காக!  

'நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும்' 17:36.

சினிமவைப் பார்த்து பொழுதை கழிப்பவர்கள் மேற்கண்ட இறைவசனத்தின்படி, மறுமையில் இறைவனிடம் எப்படித் தான் பதில் சொல்லப் போகிறார்களோ!
 
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடவேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையை நடத்திக் கொண்டிருப்பார்கள்! முடிவாகாத நிலையில், TV யில் நடிகையின் two piece உடையை ரசித்து கொண்டிருப்பார்கள். வெட்கக்கேடு!

கலாச்சாரச் சீரழிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், "கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா' என்ற காலம் போய், "பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?' என்ற ரீதியில் அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்! கலாசார சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது.
 
கதையை நம்பி இருந்த காலம்போய், சதையை நம்பி இருக்கும் கலியுக காலம். "கருத்தம்மா' என்று படமெடுத்தாலும், அதில், "செவத்தம்மாவை' போட்டால் தான் படம் ஓடும்; அதனால், ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே இயக்குனர்கள் பதிலாக இருக்கும்.  அப்படியானால், இவர்கள் கூறுவது என்ன? மனிதனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும், அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே கிடையாதா? நவூதுபில்லாஹ்.

எதுவரை இந்த சினிமா சதையை நம்பி இருக்கிறதோ, ஆபாசத்தை காட்டுகிறதோ, வக்கிரங்களை ஊக்குவிக்கிறதோ, கலாசார சீரழிவை உண்டுபண்ணுகிறதோ, வன்முறைக்கு வித்திட்டுகிறதோ, இஸ்லாத்துக்கு எதிராக உள்ளதோ அதுவரை இந்த சினிமாவை புறம் தள்ளிவிடுவோம். 

அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையிலும் வாழ இறைவன் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக.


நன்றி- சுவனத்தென்றல்.காம்.

அன்புடன்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
துபாய்.

       

    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnl9tuaSx8P1dkTLZaCNULoQ4kSGdLa7LVdQyfddG0XQMqqdv083ulMqZI1KyOx6y5mrW4C0SPGMKM7J7oLQlmVCOnuy57T3eZNlFsaWrsajnAByb28FRzyc-Dx2tpZA20zQBQHuggrX6j/s1600-r/title.jpg

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

லண்டன்:பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி, முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டார்.

லண்டன்:பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி, முஸ்லிம்
மதத்திற்கு மாறிவிட்டார். "இஸ்லாமிய சமூகத்தில் உறுப்பினராக இருப்பதற்கு
பெருமைப்படுகிறேன்' என கூறியுள்ளார்.பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி
பிளேரின் மைத்துனி லாரன் பூத்(43). இவர், ஈரான் நாட்டு செய்தி நிறுவனமான,
"பிரஸ் டிவி'யில் பணியாற்றி வருகிறார். டோனி பிளேர், மத்திய கிழக்கு
நாடுகளுக்கான அமைதித் தூதராக இருந்த போது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க
நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று அடிக்கடி அவரை விமர்சித்து
வந்தார்.கடந்த ஆறு வாரங்களுக்கு முன், ஈரான் நாட்டில் புனித நகரமாகக்
கருதப்படும், "குவாம்' நகருக்குச் சென்றிருந்தார். லண்டன் திரும்பிய
லாரன் பூத், முஸ்லிம் மதத்திற்கு மாறினார். மது அருந்துவது, பன்றி
இறைச்சி உண்பது போன்றவற்றை கைவிட்டு ஐந்து வேளையும் தொழுகிறார்.
எதிர்காலத்தில் பர்தா அணியவும் திட்டமிட்டுள்ளார்.

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பைக்! எருமைப்பட்டி குளத்தில் முஹம்மது தவ்ஃபீக் சாதனை!

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பைக்! எருமைப்பட்டி குளத்தில் முஹம்மது தவ்ஃபீக் சாதனை!


திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி புது தெருவை சேர்ந்த 22 வயதான முஹம்மது தஃபீக் அலி இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படிப்பபை இந்த ஆண்டு முடித்துள்ளார். இறுதி ஆண்டு படிப்பிற்காக ஒரு ப்ராஜக்ட் செய்ய நினைத்த முஹம்மது தஃபீக் அதை ஒரு சாதனையாக செய்ய வேண்டும் என திட்டமிட்டார்.

தரையிலும் தண்ணீரிலும் ஒடும் பஸ் மற்றும் சைக்கிள்கள் தொழில்நுட்பத்தில் முன்னேரிய நாடான அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்கனவே இருக்கின்றது எனவே ‘எரவாஞ்சேரியில் இருக்கும் நாம் புதுமையாக தண்ணீரிலும் தரையிலும் ஓடும் ஸ்கூட்டரை தயாரிப்போம்’ என முடிவு செய்த முஹம்மது தவ்ஃபீக் 6 மாத காலத்தில் தனது இந்த கனவை நினைவாக்கி தற்போது சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு சொந்தான எம்எய்ட்டி பைக்கை வைத்து இந்த புதிய கண்டுபிடிப்பை அவர் தயாரித்துள்ளார். இதற்கு அவருக்கு ஆன செலவு ரூபாய் 6 ஆயிரம் மட்டும் தான்!

தண்ணீரில் சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த பைக்கை தரையிலும் ஓட்டிக்க கொள்ளலாம்.

தனது கண்டுபிடிப்பை எருமைப்பட்டியில் உள்ள குளம் ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் ஓட்டிக்காட்னார் முஹம்மது தஃபீக்!



இவரது இந்த கண்டு பிடிப்பை பற்றிய செய்தி சன்நியுஸ், கலைஞர் போன்ற அனைத்து தொலைக்காட்சிகளிலும் மற்றும் தினகரன் தினதந்தி போன்ற அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது குறிப்பிடதக்கது.

இவரது இந்த சாதனை மற்ற மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்

‘நம்ம ஊர்ல இருந்துகிட்டு என்னத்த செய்யமுடியும் என தங்களது இயலாமைக்கு வேறு பெயர் சூட்டிக் கொள்ளாமல் சாதனை செய்ய பணமோ வசதியோ நாம் வசிக்கும் ஊரோ ஒரு தடை அல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

முஹம்மது தஃபீக் அப்படி நினைத்திருந்தால் அவரது இந்த கண்டுபிடிப்பு வெளிவந்திருக்காது. தண்ணிடம் இருந்த பழைய பைக், வெறும் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அருகில் உள்ள குளம், இதுவே முஹம்மது தஃபீக் சாதனைக்கு போதுமானதாக இருந்துள்ளது.

தனது இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளதாக முஹம்மது தஃபீக் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

நமது சமுதாய மாணவர்களின் இது போன்ற சாதனைகள் தொடர வேண்டும்.

மேலும் புகைப்படங்கள்..

கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்" டாக்டர்.அப்துல்லாஹ்

---------- Forwarded message ----------
From: Mohammad Sultan <er_sulthan@yahoo.com>
Date: Fri, 22 Oct 2010 04:43:47 -0700 (PDT)
Subject: [saharatamil] கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்"
டாக்டர்.அப்துல்லாஹ்
To:

Mohammad Sultan


-
'கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்"
டாக்டர்.அப்துல்லாஹ்(பெரியார் தாசன்) அவர்களின
மனோதத்துவ உரை. குழந்தை வளர்ப்பு பற்றியது
. பெற்றோர்கள் அனைவரும்
தவறாமல் கேளுங்கள்.
Please don't miss it. (In Video format)

Part1.
http://www.jamath-circle.com/play.php?vid=955
Part.2
http://www.jamath-circle.com/play.php?vid=957


Mohammad Sultan

--
*hajas*

*http:llwww.hajacdm*.blogspot.com Tamil Muslim Tube
Page<http://hajacdm.blogspot.com/>


http://www.tamilmuslimemailpage.blogspot.com/

மன்னிப்பதால் நற்கூலி கிடைக்குமா? தீமைகள் யாவை!

---------- Forwarded message ----------
From: Siraj Abdullah <siraj.salaam@gmail.com>
Date: Tue, 19 Oct 2010 15:33:44 +0530
Subject: (TMP) மன்னிப்பதால் நற்கூலி கிடைக்குமா? தீமைகள் யாவை!
To: anaithuthowheethsagotharargal@googlegroups.com,
muslimmails@googlegroups.com, tmpolitics@googlegroups.com

தீங்கிழைப்பவர்<http://islamicparadise.wordpress.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b9%e0%af%80%e0%ae%a4%e0%af%8d/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/>

*கேள்வி*: *"**பிறர் **நமக்கு செய்கின்ற தீமைகளை மன்னித்து பொறுமையாக இருந்தால்
இம்மையிலும் **மறுமையிலும் அதற்கான நற்கூலி கிடைக்கும்" **என்று உள்ள ஹதீஸ்களை
விளக்கவும்…***

*நபிகளார் **பல நேரங்களில் தம் எதிரிகளை கூட மன்னித்துள்ளார்கள்… **தங்களுக்கு
தெரிந்த **சம்பவங்களை விளக்கவும்…**நபிகளாரின் பொறுமையை நமக்கும் அல்லாஹ்
அளிப்பானாக… **ஆமீன்… *
பதில்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாம் அலைக்கும் (வரஹ்)

தீமைகள்


தீமை என்பதை மூன்று வகையாக எடுத்துக்கொள்ளலாம்

1) அறிமுகமில்லாதவர் தற்செயலாக இழைக்கும் தீமை

2) ஒருவர் கூடவே பழகி வேண்டுமென்றே இழைக்கும் தீமை

3) கால்நடை மிருகங்களுக்கு இழைக்கும் தீமை

*அறிமுகமில்லாதவர் தற்செயலாக இழைக்கும் தீமை***

கடைத்தெருவில் நாம் நடந்து செல்லும்போது நம் உடல், பொருள் ஆகியவற்றிற்கு
தீமை ஏற்படுத்துபவர்
நமக்கு தீமை இழைத்தால் அதை மன்னிக்க இயலாது காரணம் அவன் வழிப்பறித்திருடனாக
இருப்பான் நம்மிடம் தீங்கு இழைத்துவிட்டு மீண்டும் பிறரிடமும் தீங்கு செய்ய
முற்படுவான் இவனை விட்டுவிட்டால் ரவுடியாக, மிகப்பெரிய தாதாவாக உருவெடுத்து
மக்களை மிரட்டி சம்பாதிப்பான். இவனை மன்னிக்க இயலாது உரியமுறையில்
காவல்துறையினரிடம் பிடித்துக்கொடுத்து உரிய தண்டனையை இம்மையில் பெற்றுத்தருவது
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமையாகிறது.


*ஒருவர் கூடவே பழகி வேண்டுமென்றே இழைக்கும் தீமை*
ஒருவர் நமக்கு தீமை இழைக்கிறார் என்றால் அவர் நம்மை நன்கு அறிந்தவராக
இருக்கவேண்டும்
அப்போதுதான் திட்டமிட்டு தீமையை இழைக்க முற்படுவார். அதற்கான காரணங்களை நாம்
ஆராய முற்படும்போது பொறாமைதான் அதிகம் இருக்கும் *அவன் என்ன என்னை விட
சிறந்தவனா? என்னை விட பணக்காரனா? என்னை விட அழகானவனா? என்னை விட
புத்திசாலியா?* என்ற
எண்ணம் உடன்பிறந்த சகோதரனுக்கு கூட தோன்றிவிட்டால் அவன் நம்மை ஒவ்வொரு
அங்குலமாக பின்தொடர ஆரம்பித்துவிடுவான் பின்னர் பொறாமை தலைக்கேறிவிடும் தீமையான
காரியத்தில் ஈடுபட்டு நம்மை ஏசுவான், அடிக்க வருவான், பெயர் கெடுப்பான், புறம்
செய்யவான்.

இதுபோன்ற தீமை ஒரு மன நோயாக கூட சில நேரம் மாறிவிடும், வைராக்கியம் வந்துவிடும்,
குலப் பெருமை வந்துவிடும் ஆனால் அதே சமயம் இப்படிப்பட்ட மக்கள் பிற மக்களிடமும்
சொந்தபந்தகங்களிடம் அன்பாகவும், நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள் ஆனால்
நம்மிடம்தான் தீய செயல்களை செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் சொந்த குடும்ப
இரத்த பந்தங்களை உதறிதள்ளிவிட்டு பிரிந்து வாழ்வார்கள். இப்படிப்பட்டவர்களிடம்
நாம் நலினமாகவும், பெருந்தண்மையாகவும் நடந்துகொண்டால் அவர்கள் உணர ஆரம்பித்து
தீமையை விட்டு விலகிவிடுவார்கள். பழைய நட்பு மீண்டும் தொடர வாய்புள்ளது.
இத்தீமையை மன்னித்துவிடலாம்.


*இதோ இறைவசனம்***

எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அக்கிரமத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால்
அதனால் அவன்
மீது யாதொரு குற்றமுமில்லை. குற்றமெல்லாம் அளவுமீறி மனிதர்கள் மீது அக்கிரமம்
செய்து நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோர்மீதுதான். இத்தகையோருக்கு மிக்க
துன்புறுத்தும் வேதனையுண்டு. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்
கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியமாகும்.
(அல்குர்ஆன் 42:39-43)

* *

*இதோ நபிமொழிகள்***

*நபி (**ஸல்) அவர்கள் கூறினார்கள்:"**நீ உன் சகோதரனுக்கு உதவிடு, **அவன்
**கொடுமைக்காரனாக
இருப்பினும் சரி, **கொடுமை இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் **சரி!" **ஒருவர்
வினவினார்:
"**அல்லாஹ்வின் தூதரே! கொடுமைக்கு ஆளானவன் **என்றால் நான் அவனுக்கு உதவுவேன்.
ஆனால், **கொடுமைக்காரனாக இருக்கும்போது **அவனுக்கு எவ்வாறு உதவுவேன்?"*

* *

*நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:** **"**கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ
தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும்." **அறிவிப்பாளர் : அனஸ் (ரழி)
(புகாரி, **முஸ்லிம்)***

*
**2449 **இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:** **
**ஒருவர், **தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, **வேறு (பணம், **சொத்து
போன்ற) **விஷயத்திலோ, **இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்)
இருக்குமாயின், **அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும்.
தீனாரோ, **திர்ஹமோ (**பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும்
வாய்ப்பில்லாத நிலை (**ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப்
பெறட்டும்.) (**ஏனெனில், **மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின்
அவனுடைய **அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு
(**அநீதிக்குள்ளானவரின்
கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். **அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும்
இல்லையென்றால் அவரின் தோழரின் (**அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர்
கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு **அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.
என அபூ ஹுரைரா(ரலி) **அறிவித்தார். **ஆதாரம் – **புகாரி Volume:2 Book:46*

* *

* *

*விலங்கினங்களுக்கு இழைக்கப்படும் தீமைகள்***

*அபூஹுரைரா (ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: *"தாகித்திருந்த ஒரு நாயின் தாகத்தை
தீர்ப்பதற்காக கிணற்றில் இறங்கி நீர் கொண்டுவந்து நாயின் தாகத்தைத் தீர்த்த
மனிதனின் செயலை அல்லாஹ் நன்றியுடன் பொருந்திக் கொண்டு அவனின் பாவங்களை
மன்னித்து விட்டான் " என்று பெருமானார் சொன்னபோது, "இறைத்தூதரே, விலங்குகளுக்கு
உதவினாலும் அல்லாஹ்விடத்தில் வெகுமதி கிடைக்குமா?" என்று வினவிய போது, "ஆம்!
விலங்குகளுக்கு உதவி செய்தாலும் வெகுமதியுண்டு" என்றார்கள்.இன்னொரு
சந்தர்ப்பத்தில் *ஒரு பூனையை வீட்டிலடைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுக்
கொன்ற பெண் நரகில் வேதனை செய்யப்படுவதாகச் சொன்னார்கள் (புகாரி).***

*2435 **இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: **
*ஒருவரின் கால்நடையிடம் அவரின் அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம்.
உங்களில் எவரும் அவரின் சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, அவரின் உணவுக் கருவூலத்தை
உடைத்து, அவரின் உணவை எடுத்துச் சென்று விடுவதை விரும்புவாரா? இவ்வாறே, அவர்களின்
(கால்நடை உரிமையாளர்களின்) கால் நடைகளுடைய மடிகள் அவர்களின் உணவையே சேகரித்துப்
பாதுகாத்து வைத்திருக்கின்றன. *எனவே, **எவரும் ஒருவரின் **கால்நடையிடம் அவரின்
அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம்.* என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)
அறிவித்தார். ஆதாரம்-புகாரி Volume:2 Book:45

*உங்கள் அத்துமீறல்களுக்கு பயந்துக்கொள்ளுங்கள்***

2440 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளர்கள்
நரகத்திலிருந்து
தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில்
தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே
நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக்
கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி
விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். *முஹம்மதின்
உயிரைத் தன் கையில் **வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில்
உள்ள தம் **வசிப்பிடத்தை, **உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக
அடையாளம் கண்டு **கொள்வார்கள்*. என அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.
ஆதாரம்-புகாரி Volume:2 Book:46

*2448 **இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.** **அநீதியிழைக் **கப்பட்டவரின்
சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் **அநீதியைக்
குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை **புரிபவதைப் பற்றி)
அஞ்சுங்கள். ஏனெனில், **அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே **எந்தத் திரையும்
இல்லை" **என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (**ஆளுநராக)
அனுப்பி வைத்தபோது கூறினார்கள். ஆதாரம்-புகாரி Volume:2 Book:46***

*மூமின்கள் பண்புகள் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்***

*அனஸ் (**ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களோடு நடந்து
சென்று **கொண்டிருந்தேன்.
நபி (ஸல்) அவர்கள் ஒரம் தடித்த நஜ்ரானி போர்வை ஒன்றை **அணிந்திருந்தார்கள். அதை
ஒரு கிராமவாசி பிடித்துக்கொண்டு மிகக்கடுமையாக **இழுத்தார். நான் நபி (ஸல்)
அவர்களின் புஜத்தைப் பார்த்தேன். கடுமையாக **இழுத்ததன் காரணத்தால் அதில்
போர்வையின் ஒரத்தின் அடையாளம் பதிந்திருந்தது. **பின்பு அந்த கிராமவாசி
"**முஹ்ம்மதே!
உம்மிடமுள்ள அல்லாஹ்வின் **செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்க உத்தரவிடுங்கள்"
**என்று கூறினார். நபி (**ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பி சிரித்தவர்களாக
அவருக்கு சில **அன்பளிப்புகளைக் கொடுக்க உத்தரவிட்டார்கள். (ஸஹீஹ¤**ல் புகாரி,
**ஸஹீஹ் **முஸ்லிம்)***

*அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை **நிலைமையிலும் தானம்
செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி **விடுவார்கள். மனிதர்களை
மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே **நேசிக்கிறான். (அல்குர்ஆன்
3:134)***

*

**நன்மையும் தீமையும் **சமமாகிவிடாது. (ஆதலால் நபியே! தீமையை) நீர் நன்மையைக்
கொண்டே தடுத்துக் **கொள்ளும். அவ்வாறாயின், **உம்முடைய கொடிய விரோதியை அதே
சமயத்தில் உம்முடைய **மெய்யான, **மிக்க நெருங்கிய சினேகிதனைப்போல் காண்பீர்.
பொறுமையுடையோர்களைத் **தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும்
பாக்கியம் **உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்ஆன்
41:34,35)***

*அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே*

--
You received this message because you are subscribed to the Google
Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to
tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at
http://groups.google.com/group/tmpolitics?hl=en.


--
*hajas*

*http:llwww.hajacdm*.blogspot.com Tamil Muslim Tube
Page<http://hajacdm.blogspot.com/>


http://www.tamilmuslimemailpage.blogspot.com/

இலவசமாக M.E/M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு



---------- Forwarded message ----------
From: Islamic Service <service.islam@gmail.com>
Date: 2010/10/13
Subject: (TMP) இலவசமாக M.E/M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு
To: unitedtamilmuslims@yahoogroups.com


இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவங்களில் இலவசமாக M.E/M.Tech  படிக்க GATE நுழைவு தேர்வு

  GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech  படிக்க மத்திய அரசால்  நடத்தப்படும் தேர்வாகும்.  இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம்.  இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய http://www.gate.iitb.ac.in/gate2011/

  இந்தியாவில் 8 இடங்களில் உள்ள  IIT, 20 இடங்களில் உள்ள  NIT,  டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில்  M.E/M.Tech, Phd  படிக்க GATE  என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது,  இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது). இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview)  மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன 

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை.  தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது tntj.net (www.tntj.net/?p=8622) இணையதளத்தில் உள்ளது. 
 
பெற்றோர்களே!

நுழைவு தேர்வு இல்லாமல் நேரடியாக படிக்க சில லட்சம் ரூபாய் செலவாகும், ஆனால் இந்த தேர்வு மூலம் பணம் வாங்கி கொண்டு படிக்க முடியும். எனவே கல்வி கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவங்களுக்கு நாம் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொடுக்காமல் நீங்கள் மேற்படிப்பு படிக்க இது போன்ற தேர்வை எழுத சொல்லுங்கள். மாணவர்களும் மேற்படிப்பு என்றாலே லட்சங்களை பெற்றோர்காளிடம் இருந்து பெறவேண்டும் எண்ணத்தை மாற்றி இது போன்ற நுழைவு தேர்வை எழுதி குடும்பத்தின் சுமையை குறைத்து நீங்களும் நல்ல கல்வியை பெற்று அதிக சம்பளத்தில் வேலையில் சேருங்கள் இன்ஷா அல்லாஹ்

பெரும்பாலும் நாம் படிப்பது நமது கல்வி தரத்தை உயர்த்திகொள்வதற்க்கும், நல்ல வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் பெறுவதற்க்கும், வெளி நாடுகளில் சென்று படித்து சிறந்த கல்வியை பெற்று நல்ல சம்பளத்துடன் நல்லவேலையில் சேர்வதற்க்கும்தான். கல்வி துறையில் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற நுழைவு தேர்வு தேர்வுகளை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும். ஏதோ எல்லாரும் படிக்கின்றனர் நானும் படிக்கின்றேன் என்று இருந்துவிடக்கூடாது, பணத்தை வைத்து  கல்லூரியில் இடம்தான் வாங்கமுடியும், படிப்பை வாங்கமுடியாது, வேலையையும் வாங்க முடியாது, நன்றாக படித்தால் தான் நல்ல வேலைகிடைக்கும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள்,  எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி
 
GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 27,
ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். http://onlinegate.iitm.ac.in/iitweb
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : சென்னையில் உள்ள IIT மற்றும் குறிபிட்ட  State Bank of India  கிளைகள்  (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.)
விண்ணப்பத்தின் விலை : ரூ.1,000 (ஆன்லைனில் ரூ.8,00)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Chairman, GATE Office, Indian Institute of Technology Madras, Chennai 600 036,
மேலதிக விளக்கம் பெற தொடர்புகொள்ள வேடிய தொலைபேசி எண் : 044-2257 8200 (சென்னை IIT)

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
  1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
  2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்
  3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்

தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 13,
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : மார்ச் 15

GATE தேர்வு பற்றி மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்க அஹமது இப்ராஹிம் -  9841464521
அல்லது E-mail to  sithiqu.mtech@gmail.com 
 
 


--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page